Thursday 30 June 2011

முஸ்லிம்களின் பாதுகாப்பே! பாப்புலர் ஃப்ரண்டின் உயிர் மூச்சு

அஸ்ஸலாமு அலைக்கும் - அன்பு சகோதரர்களே,

இன்று உம்மத்தின் பாதுகாப்பு என்ற பணியை அல்லாஹ்வின் உதவியால் பாப்புலர் ஃப்ரண்ட் மட்டுமே இந்தியா முழுவதும் செய்கிறது. சென்னை, திண்டுக்கல், முத்துப்பேட்டை போன்ற இடங்களில் விநாயகர் சதுரத்தி என்ற பெயரில் முஸ்லிம்களை அச்சுறுத்தல், பல கிராமங்களில் முஸ்லிம் பெண்களிடம் முஸ்லிம் என்பதற்காக குறி வைத்து கேலி செய்தல்,
முஸ்லிம்களை கிள்ளுக்கீரையாக நினைத்து ஆங்காங்கே தாக்குதல், கொலைகள் இப்படி எத்தனையோ சம்பவங்கள்.....தமிழகத்தில் சுமார் 15 வருடங்களுக்கு முன் நடந்த கொடுமைகளை இப்போதைய இளந் தலைமுறை தெரிந்திருக்க கூட வாய்பில்லை...

ஹிந்துத்துவாவின் கைகளில் இந்திய பத்திரிகை கவுன்சில்!

புதுடில்லி : பத்திரிகை கவுன்சிலின் உறுப்பினராக, "தினமலர்' வெளியீட்டாளர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி உட்பட 27 பேர் நியமிக்கப் பட்டுள்ளனர்.  இது மத்திய அரசின் கடைந்தெடுத்த அயோக்கியத்தனமான தேர்வு. தினமலர் பத்திரிகை என்பது ஹிந்துத்துவா பத்திரிகை ஆகும்.

சவுதி அரேபியாவில் கார் ஓட்டிய பெண்கள் கைது

ரியாத் :  சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட தடையுள்ள நிலையில், கார் ஓட்டிச் சென்ற ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டனர்.


உலகிலேயே சவுதி அரேபியாவில் தான் பெண்கள் கார் ஓட்ட தடை உள்ளது. சட்ட ரீதியான தடையில்லை என்றாலும், மத ரீதியான வாய்மொழி உத்தரவாக அமலில் உள்ளது. 1960ல், சவுதி அரேபியாவில் பெண்கள் கல்வியில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது.

சமச்சீர் கல்விக் குழுவின் ஆய்வு முடிந்தது-ஜூலை 5ல் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்!

சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சமச்சீர் கல்வித் திட்டத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் ஆய்வு முடிவடைந்துள்ளது. இதையடுத்து ஜூலை 5ம் தேதி இக்குழு தனது அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறது.



வடகொரியாவில் அவலம்: புற்களை தின்று உயிர் வாழும் மக்கள்

வடகொரியாவில் ரேஷனில் வழங்கும் உணவுப் பொருட்கள் குறைக்கப்பட்டுள்ளதால் அந்நாட்டு மக்களில் ஒரு பகுதியினர் புற்களை சாப்பிட்டு உயிர் வாழும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


வடகொரியாவில் ஏழைகள் என கருதப்படும் 23 லட்சம் மக்களுக்கு ரேஷனில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

Wednesday 29 June 2011

தமிழக மீனவர்கள் 23 பேர் விடுவிப்பு

தற்போதைய செய்தி கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கடந்த 20-ந்தேதி இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். பின்னர் மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை வருகிற 1-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து அவர்கள் அங்குள்ள அனுராதாபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஸ்ரீபெரும்புதூரில் புதிய கார் தொழிற்சாலை

தற்போதைய செய்தி தமிழக அரசு இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-


முதல் – அமைச்சர் ஜெயலலிதாவை தலைமை செயலகத்தில் இன்று மதியம் பிரான்சு நாட்டைச் சேர்ந்த பி.எஸ்.ஏ. பியூஜியாட் சிட்ரியான் கார் நிறுவன நிர்வாகிகள் கிரிகோரி ஆலிவர், பிரெடரிக், ஜிதேஷ் கார்டியா, சஞ்யூவ் சகா, சாஸ்ஸிகந்த், வைத்தியநாதன் ஆகியோர் சந்தித்து பேசினார்கள். அப்போது அவர்கள் தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த கார் தொழிற்சாலை அமைக்க விருப்பம் தெரிவித்தனர்.

முஸ்லிம்கள் என்ன செய்திருக்கிறீர்கள் இவ்வுலகிற்கு?

நீங்கள் (முஸ்லிம்கள்) என்ன செய்திருக்கிறீர்கள் இவ்வுலகிற்கு?
அறிவியலில் உங்களது பங்களிப்பு என்ன?
இப்படிப்பட்ட சில கேள்விகளை நம்மில் பலர், முஸ்லிமல்லாத சகோதரர்கள் சிலரிடமிருந்து கேட்டிருக்கலாம்...

இதனை கேட்கும் போதெல்லாம் என்னுள் தோன்றக்கூடிய இரு கேள்விகள்...

வீழ்ந்த சமுதாயம் வீழ்ந்தே கிடக்குமா?. உலக முஸ்லிம்களே விழித்தெழுங்கள்!.

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஹாபீஸ். A.B முஹம்மது. (Director-General, Al Baraka Bank) அவர்கள் ஆற்றிய உரை, நம்மை இந்த கட்டுரையை எழுத உசுப்பேத்தியது!.


யானையின் பலத்தை பாகன் அறியாவிட்டால் அது யானையின் தவறல்ல!. என்ற அடைமொழியுடன்.......


உலக மக்கள் தொகையில் 14 மில்லியன் யூதர்கள் உள்ளனர். அதில் ஏழு மில்லியன் அமெரிக்காவிலும், ஐந்து மில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும், இரண்டு மில்லியன் ஐரோப்பாவிலும், ஒரு லட்சம் பேர் ஆப்ரிக்காவிலும் உள்ளனர்.

முஸ்லிம் மக்களின் கவனத்திற்கு...

தமிழ்நாட்டில்ஜுன் முதல் டிசம்பர் மாதம் வரை ஜாதி வாரி கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

அதில்“மதம்” என்ற கேள்விக்கு“இஸ்லாம்” என்று குறிப்பிடவும்…. “முஸ்லிம்” என்பது பதிவது தவறு.

இன்னும்“ஜாதி” என்ற கேள்விக்கு பின் வருபவற்றில் ஏதேனும் ஒன்றை குறிப்பிடவும்…

இன்றைய திருமணமும் இஸ்லாமிய திருமணமும்

இன்றைய திருமணம் என்பது கோடிகளை கொட்டி கும்மாளமிடும் விழாவாக ஆகிவிட்டது. இன்றைய அரசியல் வாதிகளிலிருந்து விளையாட்டு வீரர்கள் உட்பட அனைத்து பண முதலைகளும் மக்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு காசை கரியாக்கி சினிமா செட் அமைப்பது போல் வெகு விமரிசையாக திருமணத்தை நடத்துவதை பார்க்க முடிகின்றது. ஒரு காலத்தில் எளிமையான திருமணத்தை நடத்தி மக்களில் நாங்களும் சமமானவர்கள் என்று கூறும் அளவுக்கு உள்ள அரசியல்வாதிகளும் உண்டு. ஆனால் இன்றைய பணம் படைத்த செல்வந்தவர்கள் தங்கள் செல்வாக்கினை நிலை நிறுத்த திருமணம் என்ற போர்வையில் வீண் வீரயங்கள் நடத்துவதை பார்க்க முடிகின்றது. திருமண விருந்து என்ற பெயரில் இன்றைய விருந்துகளில் எத்தனை ஆடம்பரங்கள் ஒன்றல்ல இரண்டல்ல.ஆடம்பரம் இல்லாத விருந்து

ஷைத்தானுடன் ஓர் உரையாடல்

ஒரு நாள் இரவு நான் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் பொழுது பஜ்ர் தொழுகைக்கான  பாங்கொலி  கேட்டது. பள்ளிக்குச் சென்று ஜமாத்தோடு தொழ வேண்டும் என்ற எண்ணத்தில்  எழ முற்பட்டேன். அப்பொழுது ஷைத்தான் அங்கு வந்தவனாக “விடிவதற்கு இன்னும் நேரம்
இருக்கிறது. ஒரு குட்டித்தூக்கம் போடு” என்றான்.

மிருகங்களை ஹலால் முறையில் அறுக்க தடை – முஸ்லீம்கள், யூதர்கள் எதிர்ப்பு

அம்ஸ்டர்டம் : முஸ்லீம்கள் மிருகங்களை உயிரோடு இருக்கும் போது அறுத்து சாப்பிடுவர். இப்படி அறுக்கப்படும் முறையை ஹலால் முறை என்றும் அப்படி அறுக்கப்படும் மிருகங்களையே உண்பர். இச்சூழலில் நெதர்லாந்தில் உயிரோடு ஹலால் முறையில் மிருகங்களை அறுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

1400 வருடங்கள் தொண்மையான மசூதியில் புணரமைப்பு வேலை!

இந்தியாவிலேயே முதன்மையானதும், மிகவும் பழமையானதும் என நம்பப்படும், கேரளத்தில் கொடுங்களூரில் உள்ள சேரமான் ஜும்மா மசூதி அதன் உண்மையான தொண்மை வடிவில் கட்டப்பட உள்ளது. வரும் செப்டம்பர் மாதம் துவங்க இருக்கும் இதன் புணரமைப்பு பணிகளுக்கு இம்மசூதியின் நிர்வாகக் குழு இறுதி வடிவம் கொடுத்துள்ளதாக மசூதியின் நிர்வாகத் தலைவர் பி.ஏ.முகமது சையது கூறியுள்ளார்.

பெற்றோரைத் தவிக்கவிடுவோருக்கு கடும் தண்டனை

பெற்றோரைக் கவனிக்காமல் தவிக்கவிடும் நபர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டம் இயற்றியுள்ளது.


பெற்ற மக்களால் கைவிடப்பட்ட பெற்றோர்கள் தங்களது சாதாரண வாழ்க்கைத் தேவைக்கான உணவு, உடை, இருப்பிடம், மருத்துவ உதவி உள்ளிட்டவற்றுக்கு ஏற்பாடு செய்யவும், இவற்றுக்கான செலவுக்கு பொருளாதார உதவி கிடைக்கச் செய்யும் வகையிலும் மத்திய அரசு ‘பெற்றோர் மற்றும் முதியோர் நலச்சட்டம் 2007 மற்றும் விதிகள் 2009’ என்ற சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

விவாகரத்து செய்ய நீதிமன்றத்தில் என்னென்ன ஆவணங்களைச் சமர்பிக்க வேண்டும் ?

முதலில் எந்த நீதிமன்றத்தில் வழக்குப்போடப் போகிறீர்கள் எனபதை தீர்மானிக்க வேண்டும். திருமணமான இடம் அல்லது கணவன் மனைவி வாழ்ந்த இடமாக இருக்கலாம். இந்து திருமணச் சட்டம், இந்திய விவாகரத்துச் சட்டம், சிறப்பு திருமணச் சட்டம், இஸ்லாமிய திருமண முறிவுச் சட்டம் ஆகியவற்றின்கீழ் பதிவுசெய்ய, என்ன காரணத்தின் பேரில் விவாகரத்து பதிவு செய்கிறோம் என்பதைப் பொறுத்து ஆவணங்கள் எவை என்பதைக் கூறலாம்.

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு: நாளை முதல் தொடக்கம்

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பும், வறுமைக் கோட்டுக்கு கீழே வசிப்பவர்கள் குறித்த கணக்கெடுப்பும் நாளை தொடங்குகிறது.


திரிபுரா மாநிலத்தில் நாளை தொடங்கி வைக்கப்படும் இத்திட்டம், சமூக நலத்திட்டங்களுக்கு தகுதியுடைய ஏழைகளை கண்டறிய அரசுக்கு உதவியாக இருக்கும். இதன் அடிப்படையில் பயனாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எகிப்தில் மீண்டும் கலவரம்: பலர் படுகாயம்

எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள தாகிர் சதுக்கத்தில் புதிய மோதல்கள் வெடித்து உள்ளன. அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் மற்றும் போலிசார்  இடையே கடுமையான சண்டைகள் நடைபெற்றன.


போராட்டத்தை கலைப்பதற்கு போராட்டக்காரர்கள் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினார்கள். அப்போது பலர் போலிசார் மீது கற்களை வீசினார்கள். தாகிர் சதுக்கம் கடந்த பிப்ரவரி மாதம் துவங்கிய புரட்சி போராட்டத்திற்கு முக்கிய களம் ஆகும்.

மும்பையில் மீண்டும் ஸ்வைன் ப்ளூ அபாயம்

கடந்த இரண்டு ஆண்டுகளாக நாட்டை உலுக்கி வந்த ஸ்வன் ப்ளூ மீண்டும் தன் கோர முகத்தை காட்டியுள்ளது.

மும்பையில் சாண்டிவ்லி என்ற இடத்தில் 37 வயது பெண் ஒருவரும், 3 வய்து பெண் குழந்தையும் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

பெல் பணிக்காக 13,673 பேர் தேர்வு எழுதினர்

திருச்சி பாரத மிகுமின் நிறுவனத்தின் (பெல்) 475 கைவினைஞர்கள் பணிக்காக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்வு முடிவுகள் ஜூலை 2-ம் தேதி பிற்பகல் வெளியாகும். இந்த முடிவுகளை இணையதளத்தில் காணலாம். இருபது மாநிலங்களைச் சேர்ந்த 13,673 பேர் இந்த தேர்வினை எழுதினர்.

பி.எல்.படிப்புக்கு விண்ணப்பிக்க தேதி நீடிப்பு

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப்பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டு பி.எல். (ஆனர்ஸ்) படிப்பிற்கும் அரசு சட்டக்கல்லூரிகளில் உள்ள 3 ஆண்டு பி.எல்.படிப்பிற்கும் விண்ணப்பம் பெறவும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெறவும் 20-ந் தேதிவரை நீடிக்கப்படுகிறது.
இந்த தகவலை பல்கலைக்கழக பதிவாளர் கோபால் தெரிவித்துள்ளார்.

"ரிஷானா நஃபீக்கை விடுவிக்க வேண்டும்" : சவுதி அரசுக்கு வேண்டுகோள்

சவுதி அரேபியாவில் மரண தண்டனை
விதிக்கப்பட்ட இலங்கைப்
பணிப்பெண்ணான ரிஷானா நஃபீக்கை
விடுதலை செய்ய வேண்டும் என்று
கோரி கொழும்பில் உள்ள சவுதி
தூதரகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்
ஒன்று நடைபெற்றிருக்கிறது.


                                                               
               
ரிஷானா நஃபீக்கின் உறவினர்கள்  

சிங்கூர் நிலத்தை மீண்டும் விவசாயிகளிடம் வழங்க சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடை

டெல்லி: சிங்கூரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட நிலத்தை விவசாயிகளிடம் மீண்டும் ஒப்படைக்க மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.




முஸ்லிம்களை படுகொலை செய்த வழக்கில் 21 வருடம் கழித்து வரும் தீர்ப்பு

பாட்னா:மதக் கலவரங்களில் பாதிக்கப் பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கு தாமதமாவதர்க்கும் மிகக் குறைவான தண்டனை அளிப்பதர்க்குமான தற்போதைய ஒரு எடுத்துக்காட்டு. பிகாரில் 21 வருடங்களுக்குப் முன்னர் நவாடா மாவட்டத்தில் குலினி கிராமத்தில் ஏற்பட்ட மதக் கலவரத்தில் 5 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.




இந்தியா-வங்கதேசம் கனவாய் பாதை விரைவில் திறப்பு !!!

ஷில்லாங் :  40 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா-வங்கதேசம் நாடுகளுக்கிடையே உள்ள ஹாட்ஸ் கனவாய் பாதை விரைவில் திறக்கப்படுகிறது. இதனால் இருநாடுகளுக்கிடையே மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் வர்த்தகம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் பர்தாவை புறக்கணிக்கும் போலீஸ் அதிகாரி

பர்தா அணிவது குறித்து சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று ஆஸ்திரேலியப்  போலிஸ் அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். 


மேற்கு ஆஸ்திரேலிய போலிஸ் துணைக் கமிஷனர் கார்ல் ஓ கல்லகன் கூறுகையில்,"பர்தா, ஹெல்மெட் போன்ற முகத்தை மறைக்கும் உடைகளை உபயோகிப்பது குறித்தும் அவற்றை அணிபவர்களை சோதனை செய்வது குறித்தும் உரிய சட்டத்திருத்தம் தேவை" என்றார்.

ஐ.எம்.எஃப். அமைப்பின் முதல் பெண் தலைவர் கிறிஸ்டைன் லகார்டே

வாஷிங்டன், ஜூன் 28: பன்னாட்டு செலாவணி நிதியத்தின் (ஐ.எம்.எஃப்.) அடுத்த தலைவராக பிரான்ஸ் நிதியமைச்சர் கிறிஸ்டைன் லகார்டே (55) தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்த அமைப்பின் முதலாவது பெண் தலைவர் என்கிற பெருமையை அவர் பெறுகிறார்.

மத்திய அரசின் புதிய வருவாய்த்துறை செயலர் ஆர்.எஸ்.குஜ்ரால்

புது தில்லி,ஜூன் 28: மத்திய அரசின் வருவாய்த் துறைச் செயலராக ஆர்.எஸ்.குஜ்ரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்திற்கு புதிதாக 4 ரயில்கள்: தெற்கு ரயில்வே

சென்னை :  தமிழகத்தில் வரும் ஜுலை முதல் 4 புதிய ரயில்கள் அறிமுகம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


இது தொடர்பான அறிவிப்பு 2011 - 2012-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டின் போது, அப்போதைய மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்திருந்தார்.

அஜ்மீர் குண்டுவெடிப்பு:கேரளாவைச்சார்ந்த சுரேஷ் நாயர் உள்பட நான்குபேர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிப்பு

புதுடெல்லி:அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் கேரளாவைச்சார்ந்த ஹிந்துத்துவா பயங்கரவாதி சுரேஷ் நாயர் உள்பட நான்கு பேரை தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்துள்ளது.



லிபிய அதிபர் கடாபிக்கு எதிரான கைது வாரண்டை லிபியா நிராகரிப்பு

திரிபோலி: லிபிய அதிபர் முவாம்மர் கடாபிக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் பிறப்பித்த கைது வாரண்டை லிபியா நிராகரித்துள்ளது.


இது குறித்து லிபிய நீதித்துறை அமைச்சர் முகமது அல்-காமூதி கூறுகையில், "மேற்கத்திய உலகின் கருவியாக இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை எல்லாம் லிபியா ஏற்றுக் கொள்ளாது. கடாபி மற்றும் அவரது மகனுக்கு லிபிய அரசில் எந்த அதிகாரப்பூர்வமான பதவியும் இல்லை. அதனால் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை", என்றார்.

கத்தாரில் பெண்களுக்கு மட்டுமான தனி திரையரங்கம்

பெண்களை மட்டுமே அனுமதிக்கும் விசேச  திரையரங்கம் ஒன்று கத்தாரின்   தோஹா நகரில் எதிர்வரும் வியாழக்கிழமை திறக்கப்படவுள்ளது.

குறித்த திரையரங்கமானது எஸ்பயர் சோன் பவுண்டேசனினால் அந்நாட்டு அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் விளையாட்டு வளாகத்தின் பெண்களுக்கான பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கேஸ் விலை ரூ 14.73 குறைப்பு! - முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

சென்னை: தமிழகத்தில் சமையல் எரிவாயு மீதான மதிப்புக் கூட்டு வரி 4 சதவீதம் குறைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதன் மூலம் கேஸ் விலை சிலிண்டருக்கு ரூ 14.73 குறையும்.


வரும் ஜூலை 1-ம்தேதி முதல் இந்த விலைக்குறைப்பு நடைமுறைக்கு வரும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

காசாவுக்கு வரும் சர்வதேச கப்பல்களை தடுத்த நிறுத்த இஸ்ரேல் முடிவு

பாலஸ்தீனம் காசா திட்டுப் பகுதியில் மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமல் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு அடிப்படை உதவி பொருட்களை வழங்குவதற்காக 10 கப்பல்களில் உணவு பொருட்கள் சென்றுள்ளன.


இந்த சர்வதேச கப்பல்களை நிறுத்துவதற்கு இஸ்ரேல் உத்தரவிட்டு உள்ளது. இருப்பினும் நிவாரண கப்பல்களுடன் கடுமையாக மோத வேண்டாம் என கடற்படைக்கு இஸ்ரேல் உத்தரவிட்டு உள்ளது.

Tuesday 28 June 2011

பாகிஸ்தானில் பரபரப்பு: கூட்டணி கட்சி அமைச்சர்கள் ராஜிநாமா

இஸ்லாமாபாத், ஜூன் 28- பாகிஸ்தானின் கூட்டணி ஆட்சியில் இடம்பெற்றிருந்த முத்தஹிதா குவாமி இயக்கத்தைச் (எம்க்யூஎம்) சேர்ந்த 3 அமைச்சர்களும் திடீரென ராஜிநாமா செய்துள்ளனர்.


அவர்கள் மூவரும் தங்கள் ராஜிநாமா கடிதத்தை அதிபர் ஜர்தாரிக்கு இன்று அனுப்பியுள்ளனர்.

சிங்கூர் நில விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் டாடா அப்பீல்

டெல்லி: சிங்கூர் நிலத்தை விவசாயிகளுக்கு நிலத்தை திருப்பி அளிக்கும் மேற்குவங்க அரசின் முடிவுக்கு இடைக்காலத் தடைவிதிக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் மறுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அப்பீல் செய்துள்ளது.



எம்.பி.பி.எஸ்: தேனி, திருவாரூர் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை- பெற்றோர் மகிழ்ச்சி

சென்னை:  தேனி அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் அளித்துள்ளது. நடப்புக் கல்வியாண்டில் மாணவர்களை சேர்க்க திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.




கம்போடியா இனப்படுகொலை வழக்கு

கம்போடியாவில்  இடம்பெற்ற
இனப்படுகொலைக்காக விசாரணை நடத்தும்
நீதிமன்றம் தலைநகர் நாம்பென்னில்
விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பொல்பொட் தலைமையிலான கெமரூஜ் என்ற கம்யூனிசக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் 1970களின் இறுதியில் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் கம்போடியர்கள் கொல்லப்பட்டனர்.


இ-சலான், நடமாடும் தானியங்கி சிக்னல்: ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

சென்னை:  (டிஎன்எஸ்) இன்று (ஜுன் 28) தமிழக முதல்வர் ஜெயலலிதா, சென்னை அண்ணா சாலை காவல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்படும் உடனடி அபராதங்களுக்கு மின்னணு ரசீது வழங்கும் திட்டத்தையும் , எளிதில் எடுத்துச் செல்லத்தக்க சூரிய சக்தியால் இயங்கும் போக்குவரத்து செல்லும் திசைகாட்டும் கருவி முறையினையும் தொடங்கி வைத்தார்.

புதுவை சபாநாயகராக என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. சபாபதி போட்டியின்றி தேர்வு

புதுவை சட்டசபை சபாநாயகர் பதவிக்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் சபாபதி எம்.எல்.ஏ. சட்டசபை செயலாளர் சிவ பிரகாசத்திடம் மனு தாக்கல் செய்தார். அப்போது முதல் அமைச்சர் ரங்கசாமி உள்ளிட்ட என்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

அமெரிக்கா ஏவுகணை வீசித் தாக்குதல்: 26 பேர் பலி

பாகிஸ்தானில் வசிரிஸ்தான் பகுதியில் தலிபான்கள் பயிற்சி முகாம்களை அமைத்துள்ளனர். எனவே அவர்களை அழிக்கும் நடவடிக்கையில் அமெரிக்க ராணுவம் ஈடுபட்டுள்ளது.


இந்த நிலையில் தெற்கு வசிரிஸ்தானில் ஷாவால் பள்ளத்தாக்கில் உள்ள ஸ்ராகாவ்ரா மலைப்பகுதியில் தீவிரவாதிகள் நடமாடி வருவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.

கேஸ் விலை: சிலிண்டருக்கு ரூ.40 வரை குறைத்தது டெல்லி அரசு!!

டெல்லி:  விற்பனை வரி குறைப்பு மூலம் சமையல் எரிவாயு விலையை சிலிண்டருக்கு ரூ 40 வரை குறைத்துள்ளது டெல்லி அரசு.


கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு டீசல், மண்ணெண்ணெய், கேஸ் விலைகளை உயர்த்தியது. நாடு முழுவதும் எதிர்கட்சியினர் விலை உயர்வை கண்டித்து கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர்.

மக்களிடம் ஆட்சியை ஒப்படைக்க ராணுவ ஆட்சியாளர்கள் விருப்பம்

எகிப்தில் விரைவில் தேர்தல் நடத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியிடம் பொறுப்பை ஒப்படைக்க ராணுவ ஆட்சியாளர்கள் விருப்பம் தெரிவித்து இருப்பதாக அமெரிக்க செனட் சபை உறுப்பினர் ஜான் மிக்கெய்ன் தெரிவித்துள்ளார்.


தற்போது ஆட்சி செய்து வரும் ராணுவ ஆட்சியாளர்கள் முபாரக்கிற்கு ஆதரவானவர்கள், ஆதலால் விரைவில் அவர்களை ஆட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும். புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கும் வரை தேர்தல் நடத்த தாமதம் செய்தால் இது இஸ்லாமிய கட்சிகளுக்கு ஆதரவாகிவிடும் என்று மதச்சார்பற்ற மற்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தனர்.

மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் ஜூன் 30-ல் ஆரம்பம்!

எம்பிபிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான கவுன்சிலிங் வரும் ஜூன் 30-ம் தேதி சென்னையில் ஆரம்பமாகிறது.


கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்தில் இந்த கவுன்சிலிங் நடக்கிறது.

ஏழைகளுக்கு 35 கிலோ அரிசி: ரங்கசாமி

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வசிக்கும் ஏழைகளுக்கு ஜூலை மாதம் 1 ம் தேதி முதல் 35 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்று முதல்வர் என். ரங்கசாமி கூறினார்.


இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி,

திருவாரூர் மாவட்ட பி.ஆர்.ஓ. பொறுப்பேற்பு

திருவாரூர் : திருவாரூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக எம். ராஜேந்திரன் (படம்) திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியைச் சேர்ந்த இவர் தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியாற்றி வந்தார். அண்மையில் தமிழக அரசு தமிழகம் முழுவதும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது.

இதில் திருவாரூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியிட மாறுதல் பெற்ற ராஜேந்திரன், திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இங்கு பணியாற்றிய செந்தில்குமார் திண்டுக்கல் மாவட்டத்துக்கு பணியிட மாறுதலில் சென்றார்.

சோட்டா ராஜன் உத்தரவால் பத்திரிகையாளரைக் கொன்றோம்


பத்திரிகையாளர் ஜோதிர்மய தேவ் கொலை வழக்கு தொடர்பாக மும்பையில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்ட 7 பேர். (வலது) கொலையாளிகள் பயன்படுத்திய ஆயுதங்கள்

மும்பை, ஜூன் 27: எண்ணெய் மாஃபியா கும்பலால் கொல்லப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட பத்திரிகையாளர் ஜோதிர்மய தேவ் கொலை வழக்கு தொடர்பாக 7 பேரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சட்டத்தின் ஓட்டைகள்!

நமது நாட்டில் சட்டம் இயற்றுவதில் நாம் காட்டும் சுறுசுறுப்பையும் வேகத்தையும் அந்தச் சட்டங்களை முறைப்படி நடைமுறைப்படுத்துவதில் காட்டுவதில்லை என்பதற்குப் பல உதாரணங்களைக் கூற முடியும். அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் உணவு என்று கடந்த ஐந்து ஆறு வருடங்களில் மெய்சிலிர்க்க வைக்கும் பல சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. இதனாலெல்லாம் பட்டினி கிடப்பவர்களின் எண்ணிக்கையோ, பள்ளிக்குப் போகாத குழந்தைகளின் எண்ணிக்கையோ குறைந்திருக்கிறதா என்பது உலகறிந்த ரகசியம்.

மு.க.ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து வீடியோ ஆதாரங்களுடன் சைதை துரைசாமி வழக்கு

சென்னை: சென்னை கொளத்தூர் தொகுதியில் மோசடி செய்து மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளதால் அதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி வீடியோ ஆதாரங்களுடன் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த சைதை துரைசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்தியாவின் புதிய வெளியுறவுத்துறை செயலாளர் ரஞ்சன் மத்தாய்

டெல்லி:  இந்தியாவின் புதிய வெளியுறவுத்துறைச் செயலாளர் ரஞ்சன் மத்தாய் நியமிக்கப்பட்டுள்ளார். இப்போது இவர் பிரான்ஸ் நாட்டுக்கான இந்தியத் தூதராக உள்ளார்.


வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த நிருபமா ராவ் அந்தப் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார். இதையடுத்து அவர் அமெரிக்காவிற்கான இந்திய தூதராக நியமிக்கப்பட உள்ளார்.

லிபிய அதிபர் மும்மர் கடாபிக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட்

லிபிய அதிபர் மும்மர் கடாபி, அவரது மகன் சைப் அல் இஸ்லாம், உளவுத்துறைத் தலைவர் அப்துல்லா அல் சனுசி ஆகியோருக்கு கைது வாரண்ட்டை பிறப்பித்துள்ளது தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்.




மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை நிகழ்த்தியதாகவும், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி உத்தரவிட்டதாகவும் கடாபி மீது நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது.

தமிழக அமைச்சரவையில் மாற்றம்- சிறுபான்மை நலத்துறை புதிய அமைச்சராக முகம்மது ஜான் நியமனம்

தமிழக அமைச்சரவையில் இன்று சிறிய அளவிலான மாற்ற் மேற்கொள்ளபப்ட்டது. புதிய அமைச்சராக ராணிப்பேட்டை எம்.எல்.ஏ. முகம்மது ஜான் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் புதன்கிழமை பதவியேற்கிறார்.



 

ஹிந்துதுவாவின் சூழ்ச்சியை முறியடிக்க வருகிறார் ராகுல் காந்தி!

புதுடில்லி: "மத்திய அரசுக்கு நெருக்கடி தரும், போலிசாமியார் பாபா ராம்தேவ், அன்னா ஹசாரே போன்றவர்களுக்கு பதிலடி கொடுக்க, ராகுல் தான் சரியான ஆள். அவர்களுக்கு எதிராக, ராகுலை முழு வீச்சில் களம் இறக்கிவிட வேண்டும்' என, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கருதுகின்றனர்.


வகுப்புவாத வன்முறையின் பின்னணியில் அமெரிக்காவும், இஸ்ரேலும்-எகிப்து

கெய்ரோ:எகிப்தில் அண்மையில் நடந்த வகுப்புவாத வன்முறையின் பின்னணியில் அமெரிக்காவும், இஸ்ரேலும் செயல்பட்டுள்ளதாக எகிப்தின் துணைப்பிரதமர் யஹ்யா அல் ஜமால் தெரிவித்துள்ளார். நாட்டின் வளர்ச்சியை தடுப்பதற்காக இவ்விரு நாடுகளும் வகுப்புவாதத்தை வளர்த்துவதாக அவர் தேசிய தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தலை ஒட்டிப் பிறந்த இரட்டையர்களின் சாதனை

தலை ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் வயலின் இசையில் சாதனை படைத்து வருகின்றனர்.


அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தை சேர்ந்த தம்பதி டிம் டெல்ப் - நான்சி ஹோப்மன். திருமணமாகி 4 வருடங்கள் கழிந்த நிலையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.

சீனாவில் பிரபல மனித உரிமை ஆர்வலர் விடுதலை

சீனாவின் பிரபல மனித உரிமை ஆர்வலர் ஹூ ஜியா மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டார். எதிர்காலத்தில் தாம் மிகுந்த கவனத்துடன் இருப்பேன் என அவர் தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.


சிறையில் இருந்து வெளிவந்த பின்னர் எனது பெற்றோர், எனது மனைவி மற்றும் எனது குழந்தை ஆகியோருக்காக நிறைய செய்ய வேண்டி உள்ளதை உணர்ந்தேன். எனது குடும்பத்தினருக்காக ஒன்றுமே செய்யவில்லை என நெகிழ்ச்சியுடன் அவர் கூறினார்.

Monday 27 June 2011

அமைச்சரவை மாற்றதிற்கு முன் ஆளுநர்கள் மாற்றம்: மத்திய அரசு முடிவு

மும்பை : மத்திய அமைச்சரவையை மாற்றியமைப்பதற்கு முன்பாக தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

தர்மஸ்தலா கோயில் முன்பு சத்தியம் செய்தார் குமாரசாமி- வார்த்தை தவறினார் எதியூரப்பா

தர்மஸ்தலா கோயிலில் சத்தியம் செய்யப்போவதாக கூறிய எதியூரப்பா இன்று காலை அக்கோயிலுக்கு சென்று தரிசனம் மட்டும் செய்துவிட்டு திரும்பினார். ஆனால் குமாரசாமி தான் சவால் விட்டபடி தனது ஆதரவாளர்களுடன் மஞ்சுநாதா சாமி முன்பு நின்று சத்தியம் செய்தார்.


கோகைன் இரவு விருந்து..60 பெண்கள், 240 வாலிபர்கள் சிக்கினர்-போதைத் தடுப்பு இன்ஸ்பெக்டரும் கைது!

நேற்றிரவு மும்பை ரிசார்ட்டில் கஞ்சா, கோகைன் உள்ளிட்ட போதை மருந்துகள் வினியோகத்துடன் நடந்த இரவு நேர களியாட்டத்தில் கலந்து கொண்ட 60 இளம் பெண்கள் உள்பட 300 பேர் பிடிபட்டனர். இந்த போதை ஆட்டத்துக்கு ஏற்பாடு செய்தவர்களுக்கு உதவிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டரும் கைது செய்யப்பட்டார்.


மத்திய அமைச்சரவையில் எங்களுக்கு இடம் தந்தது தப்பு இளையவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்க வேண்டும்: ப.சிதம்பரம்

நான் உள்பட 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் தரக் கூடாது. எங்களுக்குப் பதில் இளையவர்களை அமைச்சரவையில் சேர்க்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.



இண்டர்போல் தேடும் இலங்கை நபர் விமான நிலையத்தில் கைது!

சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் இண்டர்போல் தேடும் இலங்கை நபரை தடுத்து நிறுத்தி காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் 450 ராக்கெட் வீசித் தாக்குதல்: கர்சாய் குற்றச்சாட்டு

கடந்த மூன்று வாரத்தில் மட்டும் ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் 450 ராக்கெட் தாக்குதலை நடத்தி உள்ளது என ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் குற்றம் சாட்டினார்.


அருகாமை பகுதியில் உள்ள பாகிஸ்தானின் பயங்கர தாக்குதலால் 12 சிறுவர்கள் உள்பட 36 பேர் கொல்லப்பட்டு உள்ளனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

திருத்துறைப்பூண்டி அரசுக் கல்லூரியில் விண்ணப்பப் படிவங்கள் விநியோகம்

 திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் அரசு கலைக் கல்லூரி தொடங்கப்படவுள்ளதையொட்டி, மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்கள் வழங்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
திருத்துறைப்பூண்டி பகுதியில் 10-க்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. ஆனால், இங்கிருந்து தேர்ச்சி பெறும், மாணவர்கள் திருவாரூர், மன்னார்குடி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்லூரிகளை நாடி செல்ல வேண்டிய நிலைமையே இருந்தது.

தொலைபேசி ஒட்டு கேட்கப்படுவதை தடுக்க சட்டம்

தொலைபேசி ஒட்டு கேட்கப்படுவதை தடுக்க மத்திய அரசு தனி நபர் உரிமை பாதுகாப்பு மசோதா` என்ற புதிய மசோதாவை உருவாக்கி உள்ளது. இந்த மசோதா, அடுத்த பாராளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படுகிறது.




டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 ரிசல்ட்

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பார்த்திபன், முதல் இடத்தைப் பிடித்தார்.


ஆர்.டி.ஓ., - டி.எஸ்.பி., ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 61 பணியிடங்களை நிரப்புவதற்காக, கடந்த ஆண்டு மே மாதம் டி.என்.பி.எஸ்.சி., முதல்நிலைத் தேர்வை நடத்தியது.

திருச்சி, தஞ்சையில் நவீன வசதிகளுடன் பாஸ்போர்ட் மையம்

பாஸ்போர்ட் பெறுவதில் பொதுமக்களுக்கு ஏற்படும் அசவுகரியத்தை போக்கும் வகையில் தற்போது மத்திய அரசின் வெளியுறவுத்துறை மூலம் திருச்சி, தஞ்சையில் அதிநவீன பாஸ்போர்ட் சேவை மைய ங்கள் துவங்கப்பட உள்ளன.


இதற்காக திருச்சி கோகினூர் தியேட்டர் அருகே அமைக்கப்பட்டுள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் திருச்சி, பெரம்பலூர், கரூர் ஆகிய மாவட்டத்தில் வசிப்பவர்களும், தஞ்சையில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையத்தில் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டத்தில் வசிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். அதேசமயம் ஏற்கனவே இங்கு நடைமுறையில் உள்ள 8 மாவட்டத்திற்கும் திருச்சியில் விண்ணப்பிக்க எந்த தடையும் இல்லை.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிப்பு

கடந்த 1980க்குப் பின் உலகளவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரு மடங்காக அதாவது 34.7 கோடியாக அதிகரித்துள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.



பிரிட்டன் - சீனா இடையே வர்த்தக ஒப்பந்தம்: இரு நாட்டு தலைவர்கள் கூட்டத்தில் முடிவு

சீனா மற்றும் பிரிட்டன் இடையே 100 கோடி வர்த்தகம் மேற்கொள்வது தொடர்பாக இன்று முடிவு செய்யப்படுகிறது.

பிரிட்டனுக்கு வருகை தந்த சீன பிரதமர் வென்ஜியா பவ் பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் இடையே திங்கட்கிழமை சந்திப்பின் போது இந்த வர்த்தக ஒப்பந்த முடிவு எடுக்கப்படுகிறது.

முத்துப்பேட்டை அருகே பயங்கரம் : விவசாயி படுகொலை

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் உள்ள இடும்பாவனம் ஊராட்சி மேலவாடியக்காடு பகுதியை சேர்ந்தவர் சிவசுப்ரமணியன் (47). இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர். இவர்களது பக்கத்து வீட்டுக்காரர் பரமசிவம்(24). சிவசுப்ரமணியன்& பரமசிவத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு இன்றும் நாளையும் "ஹால் டிக்கெட்' விநியோஹம்!

சென்னை : மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வுக்கு ஜூன் 27, 28 ஆகிய தேதிகளில் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு வழங்கப்படும்.

இது குறித்து அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் ரேவதி ருக்மாங்கதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சித்த, ஆயுர்வேத படிப்புகளுக்கு விரைவில் விண்ணப்பம்

சென்னை : சித்த மருத்துவம்-ஆயுர்வேதம்-யுனானி மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை பட்டப் படிப்புகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்களைச் சேர்க்க விண்ணப்பங்கள் விரைவில் விநியோகிக்கப்பட உள்ளன.

சென்னை அரும்பாக்கம், பாளையங்கோட்டையில் அரசு சித்த மருத்துவக் கல்லூரிகள், நாகர்கோவிலில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி, மதுரை திருமங்கலத்தில் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.

சிங்கூரில் விவசாயிகளுக்கு மாற்று இடம்: அரசு நடவடிக்கை

சிங்கூர் : மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் டாடா கார் நிறுவனத்துக்காக கட்டாயப்படுத்தி நிலம் பறிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாற்று இடம் வழங்க மம்தா பானர்ஜி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.


மாற்று இடம் பெற்றுக்கொள்ள விருப்பம் உள்ள விவசாயிகள் விண்ணப்பிக்குமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் சிங்கூரில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மூலம் விநியோகிக்கப்படுவதாக ஹூக்ளி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீபிரியா ரங்கராஜன் தெரிவித்தார்.

டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணென்ணெய் விலை உயர்வை மத்திய அரசு உடனே திரும்பப் பெறவேண்டும் – SDPI ன் மாநிலத்தலைவர் வலியுறுத்தல்

SDPI-ன் மாநிலத்தலைவர் KKSM தெஹ்லான் பாகவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : மத்திய அரசு சமையல் எரிவாயு, டீசல், மண்ணென்ணெய் ஆகியவற்றின் விலையை உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இது அத்தியாவசிய பொருள்களின்விலையை பன்மடங்கு அதிகரிப்பதற்கு காரணமாக அமையும்.

உ. பி. யில் தொடரும் பெண்களுக்கு எதிராக வன்கொடுமை!

உத்தரபிரதேசத்தில் இளம் பெண்கள், சிறுமிகள் கற்பழிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில், இன்றும் 3 சிறுமிகள் கற்பழிக்கப்பட்டனர்.


ஜான்சி நகரில் திருமண விழாவுக்கு சென்று விட்டு திரும்பிய 14-வயது சிறுமியை 4 வாலிபர்கள் கடத்திச் சென்று கற்பழித்தனர். அவர்களில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுபோல, கன்சிராம் நகர் மாவட்டம் பதேபுர் கலா கிராமத்தை சேர்ந்த 11 வயது தலித் சிறுமியை அதே கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் கற்பழித்து விட்டான்.

காஸ்ஸாவுக்கு செல்லும் நிவாரணக்குழுவில் பிரான்சு கப்பல்

பாரிஸ்:காஸ்ஸாவுக்கு நிவாரணப்பொருட்களுடன் புறப்படவிருக்கும் குழுவில் பிரான்சு நாட்டு கப்பலும் இணைகிறது.ஆறுபேரைக்கொண்ட சிறிய கப்பல் காஸ்ஸா உதவுக்குழுவுடன் இணைவதற்காக கோர்ஸிகா துறைமுகத்திலிருந்து புறப்பட்டுள்ளது.