Friday 30 August 2013

முத்துப்பேட்டையில் அரசர் குளம் மேம்பாட்டிற்கு 29 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது!

முத்துப்பேட்டை உள்ள அரசர் குளத்தை தூர்வாரி பராமரிக்க வேண்டும் என்பது 9வது வார்டு மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. 
அதனடிப்படையில் வார்டு கவுன்சிலர் பாவாபகுருதீன் அவர்களின் கடும் முயற்சியால் குளம் தூர் வார மற்றும் அதை சுற்றி நடைபயிற்சி பாதை அமைக்க ரூ.29 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

முத்துப்பேட்டை: எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வளர்ச்சியை கண்டு அலறும் பா.ஜா.க.!

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை என்றாலே பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. வருடாவருடம் விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் கலவரத்தை தூண்டி அதன் மூலம் மக்களின் இயல்பு வாழ்கையை பாதிக்க செய்வதுதான் வழக்கம். ஆனால் இந்த வருடம் ஊர்வலத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பே பரபரப்பு ஆரம்பமாகிவிட்டது.

முத்துப்பேட்டை: கலவரத்தை தூண்டி அரசியல் ஆதாயம் தேடும் பா.ஜா.க! -எஸ்.டி.பி.ஐ.கண்டனம்!

முத்துப்பேட்டை: இன்று 30/08/13 எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருவாரூர் மாவட்ட பொதுசெயலாலர் நெய்னா முகம்மது வெளியிட்ட அறிக்கையில் முத்துப்பேட்டையில் தொடர்ந்து  விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் BJP கட்சியின் குண்டர்கள்  முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் புகுந்து கலவரம் ஏற்படுத்தி வருகின்றனர்.