Saturday 25 June 2011

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சராகும் ஹீனா ரப்பானி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் புதிய வெளியறவு துறை அமைச்சராக ஹீனா ரப்பானி கர் (34) நியமிக்கப்படவுள்ளார்.


பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி மாதம் அமைச்சரவை மாற்றம் நடந்தது. அப்போது வெளியுறவு துறை மந்திரியாக இருந்த ஷா மொகமத் குரேஷி நீக்கப்பட்டார். அதன் பின்னர் அந்த பதவி நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளது.

மீனவர்களின் வழிகாட்டியாகும் ஜி.பி.எஸ். கருவி

ஜூன் 24: ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு துணையாக ஜிபிஎஸ் (Global Positioning System) எனப்படும் உலக இடநிர்ணயிப்புக் கருவி விளங்குகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குப் பயன்படுத்தப்படும் படகுகளில் இத்தகைய கருவிகள் இருந்தாலும் அவற்றை முழுமையாகப் பயன்படுத்துவது குறித்து பெரும்பாலான மீனவர்களுக்குத் தெரியவில்லை. அக்கருவிகளைக் கையாள்வது குறித்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்க முடியாமல் போனதற்காக மன்னிக்க வேண்டும் : சபாநாயகருக்கு ஆ. ராசா கடிதம்

பாராளுமன்ற எம்.பி.க்களில் ஆ.ராசா, சுரேஷ் கல்மாடி, மதுகோடா, கனிமொழி ஆகிய 4 பேர் டெல்லி திகார் ஜெயிலில் உள்ளனர். ஆ.ராசா, கனிமொழி இருவரும் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாகவும், சுரேஷ் கல்மாடி காமல் வெல்த் போட்டி ஊழல் தொடர்பாகவும் மதுகோடா முறைகேடான சொத்து குவிப்பு காரணமாகவும் கைது செய்யப்பட்டனர்.

இந்தியாவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை 21% அதிகரிப்பு

மும்பை : 2010ம் ஆண்டில் இந்தியாவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை 21 சதவீதம் அதிகரித்து 1.53 லட்சமாக உயர்ந்துள்ளது.


இதன்மூலம் உலகளவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பில், இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.

50 பைசா நாணயங்கள் செல்லாது

இந்தியாவில் வரும் 29-ம் தேதி முதல் 25 மற்றும் 50 பைசா நாணயங்கள் செல்லாது.


இது குறித்த அறிவிப்பை ஏற்கெனவே ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு வரும் 29-ம் தேதி முதல் அமலாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் 47 போலீ்ஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி இடமாற்றம்

சென்னை: சென்னை நகரில் இன்று ஒரே நேரத்தில் 47 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 29 பேர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


தமிழகத்தில் அதிமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் சென்னை போலீஸ் கமிஷனராக திரிபாதி நியமிக்கப்பட்டார். மாநில உளவுப்பிரிவு டி.ஜி.பியாக நியமிக்கப்பட்ட ராமானுஜம் தமிழக டி.ஜி.பி. பொறுப்பையும் கவனித்து வருகிறார்.

இனப் படுகொலை: ருவாண்டா முன்னாள் பெண் அமைச்சருக்கு சர்வதேச நீதிமன்றம் ஆயுள் தண்டனை

Muthupet PFI -- JUNE 25,
டார் எஸ் சலாம்: இனப் படுகொலை மூலம் 8 லட்சம் அப்பாவி டுட்சி இன மக்களை கொன்று குவித்த ருவாண்டா முன்னாள் பெண் அமைச்சருக்கு ஐ.நா. சர்வதேச குற்றவியல் நடுவர் நீதிமன்றம் (UN war crimes tribunal) ஆயுள் தண்டனை விதித்துள்ளது.


சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தில் துனிஷியா இணைந்தது

இந்த ஆண்டு துவக்கத்தில் அரபு போராட்டங்கள் ஏற்பட்ட பகுதியாக துனிஷியா இருந்தது. இந்த நாடு சர்வதேச கிரிமினல் கோர்ட்டில் இணைந்தது.


இந்த அமைப்பில் இணைந்த முதல் வட ஆப்பிரிக்க தேசம் துனிஷியா ஆகும். சர்வதேச கிரிமினல் கோர்ட் விதிமுறைகளை ஏற்கும் என துனிஷியா வெள்ளிக்கிழமை ஐ.சி.சி எனப்படும் சர்வதேச கிரிமினல் கோர்ட் மற்றும் ஐ.நா பொதுச் செயலாளரிடம் உரிய விவரங்களை சமர்ப்பித்தது.

SDPI ன் மரக்கன்று நடுவிழா

Muthupet PFI -- June 25,
சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் 3-ஆம் ஆண்டு துவக்கவிழா முன்னிட்டு தென் சென்னை மாவட்டம் சேப்பாக்கம் - திருவல்லைக்கேனி தொகுதியின் சார்பாக மக்கள் நலம் நாடு மரக்கன்று நடுவிழா நடைபெற்றது.

குழந்தைகளின் வளர்ச்சிக்கு கொய்யா...


கொய்யாக் கனியின் சுவையை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

கொய்யா வீட்டுத் தோட்டங்களிலும் வயல் வரப்புகளிலும் வளர்க்கப் படும் மரவகையாகும். இது இந்தியா, இலங்கை, மியான்மர் நாடுகளில் அதிகம் வளர்க்கப்படுகிறது.

ஈராக்கில் அதிவேக ரயில்: பிரான்ஸ் அல்ஸ்டோம் நிறுவனம் அமைக்கிறது

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருந்து பஸ்ரா வரை அதிவேக ரயில் இயக்கும் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த திட்டத்தை பிரான்ஸ் அல்ஸ்டோம் நிறுவனம் மேற்கொள்கிறது.


இந்த திட்டத்தை மேற்கொள்வது தொடர்பாக அல்ஸ்டோம் மற்றும் ஈராக் ரயில்வே இடையே பரஸ்பர ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் பாரிஸ் சர்வதேச விமான கண்காட்சியில் போக்குவரத்து துறை இளநிலை அமைச்சர் தெரிவித்தார்.

சிரியாவில் அதிபருக்கு எதிராக கடும் போராட்டம்: 15 பேர் சுட்டுக் கொலை

சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் அசாத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 15 பேர் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளாலும், துப்பாக்கி குண்டுகளாலும் தாக்கினர்.


இது குறித்து சிரியா அரசு தொலைக்காட்சி கூறுகையில்,"அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கி தாக்குதலால் உயிரிழப்பு ஏற்பட்டது" என தெரிவிக்கப்பட்டது.

பல்கீஸ் பானு வழக்கு:குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்- CBI

கடந்த 2002-ஆம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு குற்றத்திற்கான பழியை முஸ்லிம்கள் மீது போட்டு ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களை கொடூரமாக கொலை செய்தும், நூற்றுக்கணக்கான முஸ்லிம் பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி, கோடிக்கணக்கான சொத்துக்களை சூறையாடி ஹிந்துத்துவ பாசிஸ்டுகள் இந்திய வரலாற்றிலேயே மிகக்கொடூரமான இனப்படுகொலையை நிகழ்த்தி கோரத்தாண்டவம் ஆடினர்.


திண்டுக்கல் மாவட்டம் ரத்த தானத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் முதலிடம் - மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் விருது

சுதந்திர அணிவகுப்பு நெல்லையில் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயற்குழு முடிவு

Muthupet PFI -- JUNE 25,
பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு கூட்டம் ஜூன் 19, 20 ஆகிய தேதிகளில் குற்றாலத்தில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் அவர்கள் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஆகஸ்ட்15, 2011 சுதந்திர தினத்தை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட்டின் சுதந்திர தின அணிவகுப்பினை திருநெல்வேலியில் நடத்துவது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


சிறப்புவாய்ந்த மனநல நிபுணர் பணிகள்-25-06-2011

மனநலம் குன்றிய நிலை என்பது, மூளை சேதமடைவதாலோ, பிறப்பிலேயே ஏற்படும் குறைபாடுகளாலோ ஒரு மனிதருக்கு ஏற்படும் குறைபாடாகும். இதன்மூலம் மூளையின் சிந்தனை மற்றும் கற்கும் திறன் பாதிக்கப்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர், மிகுந்த சிரமத்துடனேயே எதையும் கற்றுக்கொள்கிறார். இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், மற்ற சாதாரண குழந்தைகளைவிட தாமதமாகவே அமரவோ, தவழவோஇ நடக்கவோ மற்றும் பேசவோ செய்கிறார்கள்.


4,800 கி.மீ. வேகத்தில் பறக்கும் ஹைப்பர்சானிக் விமானம் தயார்!

பாரீஸ் : அதிபயங்கர வேகத்தில் பறக்கும் விமானத்தை ஏர்பஸ் குழுமம் உருவாக்கியுள்ளது. ஏவுகணைகளில் பயன்படுத்தப்படும் ராம்ஜெட் இன்ஜின்கள் இதில் பொருத்தப்படுகின்றன.


ஹாலந்தை தலைமையிடமாக கொண்ட நிறுவனம் யூரோப்பியன் ஏரோநாட்டிக் டிஃபென்ஸ் அண்ட் ஸ்பேஸ் கம்பெனி (இஏடிஎஸ்). ஏர்பஸ் நிறுவனத்தின் தாய் அமைப்பு. புதிய தொழில்நுட்பங்கள் மூலம் தொடர்ச்சியாக பல்வேறு மாடல்களில் விமானங்களை உருவாக்கி வருகிறது. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்துவரும் சர்வதேச விமான கண்காட்சியில் ஹைலைட்டாக இடம் பிடித்திருப்பது இஏடிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பான ‘மேக்4’ எனப்படும் ஹைப்பர்சானிக் விமானம்.

இஷ்ரத் ஜஹான் வழக்கு:பதவி விலக அனுமதிக்கவேண்டும்-எஸ்.ஐ.டி தலைவர்

அஹ்மதாபாத்: இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் விசாரணை நடத்திவரும் சிறப்பு புலனாய்வுக்குழு(எஸ்.ஐ.டி) தலைவர் சத்யபால் சிங் பதவி விலக அனுமதியளிக்க வேண்டும் என குஜராத் உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

எஸ்.ஐ.டியின் இதர உறுப்பினர்களான மோகன் ஜா, சதீஷ் வர்மா ஆகியோருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் தன்னை தலைவர் பதவியிலிருந்து மாற்ற வேண்டும் என சத்யபால் சிங் நீதிபதிகளான ஜெயந்த் பட்டேல், அபிலாஷ குமாரி ஆகியோர் அடங்கும் பெஞ்சின் முன்பாக சமர்ப்பித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பான்:நிலநடுக்க சேதம் ரூ.10 லட்சம் கோடி

ஜப்பானில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.


ஜப்பானில் கடந்த மார்ச் மாதம் மிகக் கடுமையான நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது.

பொது மருந்துகளால் முதியவர்களுக்கு உயிரிழப்பு அபாயம்: ஆய்வுத் தகவல்

ஆயிரக்கணக்கான முதியவர்கள் தங்களுக்கு பழக்கமான பொது மருந்துகளை பயன்படுத்துகிறார்கள். இந்த மருந்துகளை பயன்படுத்துவதால் அவர்களுக்கு உயிரிழப்பு அபாயம் ஏற்படுகிறது.


அலர்ஜி, வலி நிவாரணி மற்றும் ரத்த ஓட்டத்தை இழக்கச் செய்தல் போன்றவற்றிற்கு மாத்திரைகளை பயன்படுத்துபவர்கள் பற்றி ஆய்வு செய்யப்பட்டது.

சென்னையில் ஒரு சதுர கி.மீ.க்கு 26,903 பேர் வசிக்கும் அவலம்

பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கிறது. சமீபத்தில் நடந்த கணக்கெடுப்பில் நாடு முழுவதும் 121 கோடி மக்கள் தொகை இருப்பது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் 7 கோடியே 21 லட்சத்து 389 பேர் உள்ளனர். 10 ஆண்டுகளில் 97 லட்சம் பேர் அதிகரித்துள்ளனர். மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 15.6 சதவீதம். தமிழகத்தில் ஒரு சதுர கி.மீ.க்கு 555 பேர் வசிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

முன்னாள் படைவீரர்கள் கவனத்துக்கு...

 ஜூன் 24:  நாகை, திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், உள்துறை அமைச்சக ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து நாகை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் (பொறுப்பு) கல்யாணசுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

ஹிந்துத்துவா நடத்திய நெல்லி, பாகல்பூர் இனப்படுகொலைகள்!

Muthupet PFI -- JUNE 25,
அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியிலிருந்து சுமார் 40 கி.மீ. தூரத்திலுள்ள நெல்லி எனும் கிராமத்தில் 1983, பிப்ரவரி 18 அன்று ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் திட்டமிட்ட இனப்படுகொலை ஒன்று நடத்தப்பட்டது.


இதில் 2,191 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். 370 குழந்தைகள் அநாதையாக்கப்பட்டனர். 16 கிராமங்களிலிருந்த முஸ்லிம்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன.

மத்திய உள்துறைச் செயலராக ராஜ்குமார் சிங் நியமனம்

புது தில்லி, ஜூன் 24: மத்திய உள்துறைச் செயலராக ராஜ்குமார் சிங் வெள்ளிக்கிழமை நியமனம் செய்யப்பட்டார்.


மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு இதற்கான ஒப்புதலை வழங்கி உத்தரவுப் பிறப்பித்துள்ளது.

இலவச பசு, ஆடு வழங்கும் திட்டம்: முதல்வர் ஆய்வு

இலவச கறவை பசு -ஆடுகள் வழங்கும் திட்டம் குறித்து, தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்திய முதல்வர் ஜெயலலிதா  உடன் அமைச்சர்கள்

சென்னை, ஜூன் 24: இலவசமாக பசுக்கள், ஆடுகள் வழங்கும் திட்டம் குறித்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார்.