Saturday 25 June 2011

முன்னாள் படைவீரர்கள் கவனத்துக்கு...

 ஜூன் 24:  நாகை, திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், உள்துறை அமைச்சக ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து நாகை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் (பொறுப்பு) கல்யாணசுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
பிகார் மாநிலம், பாட்னாவில் உள்ள சாஸ் ஹஸ்த்ரா சீமா பால் என்ற மத்திய உள்துறை அமைச்சகத்தில் கான்ஸ்டபிள் (ஓட்டுநர்) பணிக்கு முன்னாள் படைவீரர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். ஊதிய விகிதம் ரூ. 5,200 - 20,200. தர ஊதியம் ரூ. 2 ஆயிரம்.
வயது வரம்பு : 2011-ம் ஆண்டு ஆக. 1-ல் 18 முதல் 28 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும். விதிமுறைகளின்படி வயது வரம்பு தளர்த்தப்படும்.

கல்வித் தகுதி : மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமான படிப்பு. மருத்துவகை- ஷேப்- 1. நடத்தை- எக்ùஸம்ப்ளரி அல்லது மிக நன்று அல்லது நன்று. ராணுவத்தை விட்டு வெளியேறி 24 மாதங்களுக்குள் இருக்க வேண்டும்.

பணிக்கான விண்ணப்பப் படிவம், நாகை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் வழங்கப்படும்.

தகுதி மற்றும் விருப்பம் கொண்ட முன்னாள் படைவீரர்கள், தங்களது விண்ணப்பம் மற்றும் சான்றிதழ்களை, பட்ங் ஐய்ள்ல்ங்ஸ்ரீற்ர்ழ் எங்ய்ங்ழ்ஹப், ஊபத, ஏண (நநஆ), டஹற்ய்ஹ, தன்ந்ஹய்ல்ன்ழ்ஹ ஏர்ன்ள்ங், ஆஹண்ப்ப்ஹ் தர்ஹக் (ஆண்ட்ஹழ்)- 800014 என்ற முகவரிக்கு ஜூன் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது குறித்த மேலும் விவரங்களுக்கு நாகை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை அணுகுமாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment