Saturday 28 May 2011

காஸா ரஃபா எல்லையை முழுமையாகத் திறந்தது எகிப்து! (வீடியோ இணைப்பு)

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து எகிப்து செல்லும் ரஃபா எல்லையை எகிப்து அரசு இன்று முழுமையாகத் திறந்தது.

உலகின் மிகப்பெரும் சிறைச்சாலை என்று வர்ணிக்கப்பட்ட காஸா பகுதியில் இருந்து மக்கள் மருத்துவத்திற்காகக் கூட வெளியே செல்ல முடியாத வகையில் இஸ்ரேலும் எகிப்தும் தடைகளை ஏற்படுத்தி வைத்திருந்தது.

2007ஆம் ஆண்டு காஸா பகுதியின் ஆட்சி நிர்வாகம் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹமாஸ் இயக்கத்தின் கீழ் வந்ததைத் தொடர்ந்து இஸ்ரேல் இந்தத் தடையை ஏற்படுத்தியிருந்தது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் வேண்டுகோளைத் தொடர்ந்து, மக்கள் புரட்சியின் மூலம் ஆட்சியை விட்டு விரட்டப்பட்ட ஹோஸ்னி முபாரக் எகிப்து அதிபராக இருந்த போது, காஸாவில் இருந்து எகிப்து செல்லும் ரஃபா எல்லைக் கதவை முழுமையாக அடைத்தது.

ஒரு கிளாஸ் மதுவுடன் உலகின் பிரச்சினைகளுக்குத் தீர்வு :ஒபாமா


பிரிட்டனுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது கடந்த புதன்கிழமை பிரிட்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் எம்.பிக்கள் பிரபுக்கள் மத்தியிலும் பிரிட்டன் பாராளுமன்றத்திலும் உரை நிகழ்த்திய  ஒபாமா எமது வரலாற்றின் புதிய அத்தியாயத்தை பகிர வேண்டிய தருணத்திற்குள் நாம் நுழைய வேண்டியுள்ளதெனவும்
உலகளாவிய பொருளாதார நெருக்கடி மற்றும் பல வருடங்களாக நீடிக்கும் பயங்கரவாதத்திற்கான போர் என்பவற்றைத் தொடர்ந்து இரு நாடுகளும் முன்னெப்போதுமில்லாத முக்கிய தருணத்தை வந்தடைந்துள்ளன என்றும் தெரிவித்துள்ளார். அதேவேளை பிரிட்டன் ஹிஸ்புத் தஹ்ரீர் அமைப்பு பிரிட்டன் பாராளுமன்றது முன்பாக ஒபாமா, கெமரூன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளது விரிவாக

இலக்கை அடைவதற்கான வழிமுறைகள்...


1- ஆசைஆர்வம்
2- தன்னம்பிக்கை
3- இலக்கின் மூலம் பெற்றுக்கொண்ட இலட்சியங்களை அறிந்து அதனை எழுதிக்கொள்ளல்.
4- இலக்கின் மூலம் பெற்றுக்கொண்ட பிரயோசனங் களையும் எழுதிக்கொள் ளல்.
5- அந்த இலக்கு உனக்குப் பெற்றுத்தரப்போகும் தரத்தை அறிந்திருத்தல். (சுவனமாநரகமா?)

பெண்ணே ! உனக்காய் சில வரிகள்...

  • உன் உள்ளத்தின் வலிகள்தான் நாளைய சுவனத்தில் சுபசோபனமாகும்.
  •  உன் விழிகள் அவனுக்காய் மட்டும் கண்ணீர் சிந்துகிறது என்றால்நீயும் நாளைய பொழுதில் அர்ஷின் நிழலைப் பெற்ற அதிஷ்டசாலிதான்.
  • அல்லாஹ்வுக்காக என்று நீ ஆசை வைத்துப்பார்,அவன் ஒருபோதும் உன்னை கைவிடாமல் உன் ஆசைகளை சுவனத்தில் நிலைத்திடச் செய்வான்.
  • உன்னில் இப்போதெல்லாம் மறுமையை இலக்காய் கொண்ட சந்தோஷம் வாழுமென்றால்... நீ உண்மையில் இறைநேசமுள்ளவள்தான்.

அப்சல் குருவும், ஹிந்துதுவாவும்! ஒரு பார்வை!!

2001, டிசம்பர் 13-ம் தேதி, நாடாளுமன்றம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 9 பாதுகாப்பு வீரர்களும், நாடாளுமன்றத்தின் ஒரு அலுவலரும் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தின் முக்கியக் குற்றவாளியான அப்சல் குருவின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரிக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

லிபியா:எதிர்ப்பாளர்களுடன் பேச்சுவார்த்தைக்கு கத்தாஃபி தயார்


திரிபோலி:லிபியாவில் போரை நிறுத்திவிட்டு எதிர்ப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என அந்நாட்டு அதிபர் முஅம்மர் கத்தாஃபி அறிவித்துள்ளார். இதனால் சில மாதங்களாக தொடரும் போராட்டம் முடிவுக்கு வரும் என கருதப்படுகிறது. ஆனால், 40 வருடங்களுக்கு மேலாக பதவியில் தொடரும் கத்தாஃபி ராஜினாமா செய்ய சாத்தியமில்லை.

ஐரோப்பியன் யூனியன், ஐ.நா சபை உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களும் கத்தாஃபியிடம் ராஜினாமா செய்ய கோரிக்கை விடுத்திருந்தனர்.

சமச்சீர் கல்வித்திட்டம் கொண்டுவந்தது ஏன்? கலைஞர் விளக்கம்

கல்வியிலும் சமத்துவம் நிலைநாட்டவேண்டும் என்பதற்காகத்தான் சமச்சீர் கல்வி திட்டம் கொண்டுவரப்பட்டது என்று தி.மு.க. தலைவர் கலைஞர் விளக்கம் அளித்துள்ளார்.


தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல் அமைச்சருமான கலைஞர் வெளியிட்டள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

2006 ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில் அனைத்து பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வி வழங்கிடும் சமச்சீர் கல்வி முறையை தமிழக மக்கள் அனைவருக்கும் வழங்கிட வழி அமைப்போம் என்று தி.மு.க. அறிவித்திருந்தது. சமச்சீர் பள்ளிக்கல்வி முறையை நடைமுறைப்படுத்துவதற்காக தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக்கல்வி முறை சட்டம் 2010 ம் ஆண்டு இயற்றப்பட்டு; சமச்சீர் கல்வி முறை 2010 11 ம் கல்வி ஆண்டு முதல் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 1 மற்றும் 6 ம் வகுப்புகளில் நடைமுறை படுத்தப்பட்டதுடன் புதிய பாட நூல்களும் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன.

போலி விமானி லைசன்ஸ்:பா.ஜ.க முன்னாள் அமைச்சரின் மகன் சிக்கினார்


ஜெய்ப்பூர்:இந்தியாவில் எந்த முறைகேடு நடந்தாலும் அதில் பா.ஜ.கவின் பங்கு இடம் பெற்றிருக்கும். அந்த வகையில் தற்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் போலி விமானி லைசன்ஸ் (உரிமம்) வழக்கில் பா.ஜ.கவின் முன்னாள் அமைச்சரின் மகனும் சிக்கியுள்ளார்.

ராஜஸ்தான் ஊழல் தடுப்பு பிரிவு ராஜஸ்தான் மாநில முன்னாள் பா.ஜ.க அரசின் சமூக நீதித்துறை அமைச்சராக பணியாற்றிய மதன் தில்வாரின் மகன் உள்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

தொடரும் பாசிச சேவை:பாண்டே கடமை தவறவில்லை-எஸ்.ஐ.டியின் நற்சான்றிதழ்


அஹ்மதாபாத்:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையை குறித்து விசாரணையை நடத்த உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி) முன்னாள் குஜராத் மாநில டி.ஜி.பி பி.சி.பாண்டேவுக்கு நற்சான்றிதழ்(clean chit) வழங்கியுள்ளது.

மோடியின் கும்பலுக்கு எஸ்.ஐ.டியின் சேவை தொடர்வதையே இச்சம்பவம் உணர்த்துகிறது. 2002-ஆம் முஸ்லிம் இனப்படுகொலையில் பாண்டே தனது கடமையை தவறவில்லை (dereliction) என ஆண்டு குல்பர்க் சொசைட்டி கூட்டுக்கொலை வழக்கு விசாரணை நடந்துவரும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.ஜே.தந்தாவிடம் எஸ்.ஐ.டி தெரிவித்துள்ளது.

பாப்புலர் ஃப்ரண்ட் உருவான விதம்


நம் இந்திய நாட்டில் ஏற்பட்டு வரும் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றம், வறுமையை போக்கவும்,  பிற்படுத்தப்பட்ட மக்களை முன்னேற்றவும் தவறி வருகிறது.
நம் நாடு சுதந்தரிமடைந்த பிறகு பெரும் வியாபார முதலீட்டாளர்கள் மூலம் பெரும் வளர்ச்சியடைந்தாலும் சாதாரண மக்களின் அடிப்படை தேவைகள் கூட மறுக்கப்பட்டு வருகிறது.
பரம்பரை பரம்பரையாக இந்த நாட்டை ஆட்சி செய்து வரும் அரசாங்கங்களோ ஜனநாயகம் என்று  அழைக்கப்படக்கூடிய "மக்களாட்சி" தத்துவத்தை சீர்குலைத்து சர்வதிகாரம் போன்று செயல்பட்டு வருகின்றனர். காலணி ஆதிக்க சக்திகளுடனும், ஃபாஸிச சக்திகளுடனும் கைகோர்த்து செயல்பட்டு வருகின்றனர்.