Monday 13 June 2011

களவு ராம்தேவும் ஊழலுக்கு எதிரான போரும் ஓர் அலசல்!

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் என மாபெரும் ஊழல்கள் வெளியாகி இந்தியாவின் மதிப்பைச் சிதைத்துக் கொண்டிருந்த நிலையில், திடீரென ஊழலுக்கு எதிரான போரை ஆங்கில ஊடகங்கள் செய்யத் தொடங்கின.

அரபு நாடுகளில் தோன்றிய மக்கள் புரட்சியின் விளைவாய் அதிபர்களாய் இருந்தவர்கள் தங்கள் நாடுகளை விட்டுத் துரத்தப்பட்ட நேரம் அது. இதுதான் நமது கோரிக்கையை வென்றெடுக்க சரியான சந்தர்ப்பம் என்று எண்ணி, மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் காந்தியவாதியுமான அண்ணா ஹசாரே ஊழலுக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதத்தைத் தொடங்குகிறார். லோக்பால் மசோதாவை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் இவரது கோரிக்கை.

கலைஞர் தொலைக்காட்சிக்கு லஞ்சமாக பெறப்பட்ட பணம் பற்றி சிபிஐயிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் பெறப்பட்ட ரூ. 214 கோடி பணத்தைத்தான் கலைஞர் தொலைக்காட்சி வாங்கியது என்றால், அந்தப் பணம் தற்போது எங்கே என்று உச்சநீதிமன்றம் சிபிஐயிடம் கேட்டுள்ளது.


சினியுக் நிறுவனம் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடியை கடனாக வழங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் இது கடன் தொகை அல்ல, மாறாக ஸ்பெக்ட்ரம் ஊழலில் பரிமாறப்பட்ட லஞ்சப் பணம் என்பது சிபிஐயின் வாதம். இந்தப் புகாரின் அடிப்படையில் தான் கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர்களான கனிமொழியும், சரத்குமார் ரெட்டியும் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு மீதான விசாரணை இன்று நடந்தது.

திராட்சை மருத்துவம்

 திராட்சை பச்சையாக உள்ளபோதும், உலர்ந்திருக்கும் போதும் அதன் மருத்துவ குணம் ஒரே மாதிரி சிறப்புடன்தான் உள்ளது.



 திராட்சைப் பழத்தை பன்னீரில் ஊறவைத்து சாறு பிழிந்து பருகினால் இதயநோய்கள் அகலும். இதய செயற்பாடு சிறப்பாக அமையும்.


 குடற்புண் உள்ளவர்கள், கல்லீரல், மண்ணீரல் கோளாறு உள்ளவர்கள் இதன் பழச்சாற்றை 3 வேளை, அரை அவுன்ஸ் வீதம் பருகினால் குணம் பெறலாம்.

மது அருந்தினால்?

மது அருந்தினால் உடனடியாக இறப்பு ஏற்படாவிட்டாலும் படிப்படியாக என்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்று பார்ப்போம்.


மதுவின் பொதுவான மூலக்கூறு எதில் ஆல்கஹால் பொதுவாக மதுவகைகளில் எவ்வளவு எதில் ஆல்கஹால் (Ethyl Alcohol) உள்ளது என்று கீழே பார்க்கவும்.

கல்வி உரிமைச் சட்டமும் விதிகளும்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆங்கில நாவலாசிரியர் சார்லஸ் டிக்கென்ஸ் சமூக அவலங்களைக் கதைப் பொருளாகக் கொண்டு தனது படைப்புகளை அமைத்தார். அவர் எழுதிய பிரபல நாவல்களான (Oliver Twist, Dotheboys' Hall, David Copperfield) ஆகியவை குழந்தைகளின் மீது ஏவப்படும் வன்கொடுமைகளை விவரித்தன. அந்நாட்டு மக்களது மனசாட்சி உறுத்திட குழந்தைகள் சார்பான பல சட்டங்கள் இயற்றப்பட்டன. அவற்றில் ஒன்று 1870ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட கட்டாயக் கல்விச் சட்டம். அதனையட்டி, இந்திய நாட்டிலும் தலைவர்கள் கட்டாயக் கல்வி கொண்டு வர வேண்டுமென்று வற்புறுத்தினர். ஆங்கில அரசு அவற்றையேற்க மறுத்தது. இருந்தபோதிலும் பரோடா, திருவாங்கூர் போன்ற சில சமஸ்தானங்கள் தங்கள் பகுதியில் கட்டாயக் கல்விக்கு ஏற்பாடு செய்தனர்.


நக‌ங்க‌ள் ‌மீது தேவை கவன‌ம்

பல‌ர் முக‌த்தை அழகா‌க்‌கி‌க் கொ‌ள்வ‌தி‌ல் ‌நிறைய கவன‌ம் செலு‌த்துவா‌ர்க‌‌ள். ஆனா‌ல் நக‌ங்களை கவ‌னி‌க்காமலே ‌வி‌ட்டு‌விடுவா‌ர்க‌ள். அக‌த்‌தி‌ன் அழகு முக‌த்‌தி‌ல் தெ‌ரிவது போல, உட‌ல்‌நிலையை நா‌ம் நக‌த்‌தி‌ல் தெ‌ரி‌ந்து கொ‌ள்ளலா‌ம்.


ஏ‌ன் எ‌னி‌ல் உட‌லி‌ல் ஏ‌ற்படு‌ம் ப‌ல்வேறு ‌பிர‌ச்‌சினைகளை நக‌ம் நம‌க்கு எடு‌த்து‌க் காட‌்டு‌கிறது. உட‌லி‌ல் ஏ‌ற்படு‌ம் ஒ‌வ்வொரு பா‌தி‌ப்‌பி‌ற்கு‌ம் ஒ‌வ்வொரு ‌விதமான ‌பிர‌ச்‌சினைகளை நக‌ம் கா‌ட்டு‌கிறது. ஏதேனு‌ம் ஒரு உட‌ல் உபாதை‌க்காக நா‌ம் மரு‌த்துவ‌ரிட‌ம் செ‌ல்லு‌ம் போது, ‌சில‌ர் ந‌ம் கை ‌விர‌ல்களை ப‌‌ரிசோ‌தி‌ப்பா‌ர்க‌ள். ஏனெ‌னி‌ல் அவ‌ர்க‌ள் ச‌ந்தே‌கி‌க்கு‌ம் நோ‌ய் நம‌க்கு ஏ‌ற்ப‌ட்டிரு‌ப்‌பி‌ன் அத‌ற்கான ஆதார‌ம் நக‌‌ங்க‌ளி‌ல் தெ‌ரி‌கிறதா எ‌‌ன்பதை அ‌றி‌ந்து கொ‌ள்ள‌த்தா‌ன்.

14 வயது முஸ்லிம் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து படுகொலை செய்த உ.பீ போலீசின் மிருகத்தனம்

லகிம்பூர் கேரி:உ.பி மாநிலத்தில் உள்ள போலீஸ் ஸ்டேசனில் பதினான்கு வயதான முஸ்லிம் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து படுகொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கேரியில் அதிர்ச்சி தரும் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த படுபாதக சம்பவத்தின் பின்னணியில் போலீசார் செயல்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

அமெரிக்காவை மிஞ்சும் சீனா

அதிகாரம் மற்றும் பொருளாதார பாதுகாப்பில் அமெரிக்காவுக்கு சவால் எழுப்பும் நாடாக சீனா உருவெடுத்து வருகிறது.

கொம்யூனிஸ்ட் நாடான சீனாவை எதிர்கொள்வது என்பது அமெரிக்காவுக்கு பெரும் சவாலாக இருக்கும் என அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் கிசன்கர் கவலை தெரிவித்தார்.