Tuesday 9 July 2013

கூத்தாநல்லூரில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய கல்வி உதவி தொகை விழிப்புணர்வு முகாம்!

திருவாரூர்: சிறுபான்மை மக்களுக்கு மத்திய அரசு வழங்கக்கூடிய பல்லாயிரக்கணக்கான நிதிகள் திரும்ப அனுப்பப்பட்ட நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டு துறை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கடந்த ஐந்து வருடங்களாக மத்திய அரசின் சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகையை பெறுவதற்கான விழிப்புணர்வு மற்றும் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யும் முகாம்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து பயனடைந்தனர்.

வெள்ளை மற்றும் கறுப்புத் தாடிக்காரர்களின் உருவப்பொம்மையை எரித்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆர்ப்பாட்டம்!

புதுடெல்லி: இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு அப்பாவிகளை போலி என்கவுண்டரில் அநியாயமாக படுகொலைச் செய்த சம்பவத்திற்கு கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. போலி செய்திகளை பரப்பி விசாரணை திசை திருப்புவதற்கான சில ஐ.பி அதிகாரிகள் மற்றும் ஊடகங்கள் நடத்தும் முயற்சிகளை கேம்பஸ் ஃப்ரண்ட் கண்டித்துள்ளது.