Tuesday 9 July 2013

கூத்தாநல்லூரில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய கல்வி உதவி தொகை விழிப்புணர்வு முகாம்!

திருவாரூர்: சிறுபான்மை மக்களுக்கு மத்திய அரசு வழங்கக்கூடிய பல்லாயிரக்கணக்கான நிதிகள் திரும்ப அனுப்பப்பட்ட நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டு துறை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கடந்த ஐந்து வருடங்களாக மத்திய அரசின் சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகையை பெறுவதற்கான விழிப்புணர்வு மற்றும் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யும் முகாம்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து பயனடைந்தனர்.

இந்த வருடமும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டு துறையின் சார்பாக தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற்று வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பெரிய பள்ளி வாயில் அருகில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சிறுபான்மையினர் கல்வி உதவி தொகை விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முகாம் 07.07.2013 அன்று நடைபெற்றது. இம்முகாமில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர்களுக்கு விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment