Saturday 29 October 2011

வாகனம் ஏற்றி இருவரை கொன்ற சவூதிக்காரருக்கு மரண தண்டனை விதிப்பு: சவுதி நீதிமன்றம்

சக சவுதி தம்பதி மீது 'வேண்டுமென்றே' வாகனம் ஏற்றிக் கொன்ற சவூதிக்காரர் ஒருவருக்கு சவூதி அரேபிய நீதிமன்றத் தீர்ப்புப் படி மரணதண்டனை நேற்று(வியாழன்) நிறைவேற்றப்பட்டது. முஹம்மது அல் ஹர்பி என்னும் பெயருடைய அந்த ஆள்,  ராபிஹ் அல் அசீரி என்பவரையும் அவருடைய மனைவி நசீலா அல் அசீரி என்பவரையும்  வேண்டுமென்றே  வாகனம் ஏற்றிக் கொன்ற குற்றத்திற்காக, சவூதி நீதிமன்றம் அவருக்கு மரணதண்டனை விதித்திருந்தது.

தற்கொலை செய்து கொள்பவர்களில் தமிழகம் முதலிடம்!

இந்தியாவில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையில் தெரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2010 ம் ஆண்டில் நடந்த குற்றச்சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உள்துறை அமைச்சகம் உருவாக்கியுள்ள இந்த அறிக்கையை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டார்.