பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
‘எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களில் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்குயருள்வாயாக! ‘ (அல்குர்ஆன் 25:74)

இயந்திர உலகின் பிடியில் இறுகச் சிக்கித்தவிக்கும் இன்றைய சூழ்நிலையில் சமூகக் கட்டமைப்பின் அடித்தளமான குடும்ப உறவுகளில் விரிசல்கள் ஏற்பட்டு வரும் அவலம் வருத்தத்திற்குரியது. இதனைக் களைந்து இறைவனும் இறைத்தூதரும் இயம்பிய இனிய வழிமுறைகளைக் கொண்டு, அழகிய குடும்பத்தையும் வளமான சமூகத்தையும் புணர்நிர்மாணம் செய்வது நம் அனைவரின் கடமை.