Thursday 1 December 2011

வரலாறு படைத்த பாப்புலர் ஃப்ரண்டின் சமூக நீதி மாநாடு...


ஒடுக்கப்பட்ட-சிறுபான்மை மக்களின் சமூகநீதிக்கான போராட்டத்தில் புதிய வரலாற்றை படைத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநாடு நிறைவுற்றது.

அரபிக்கடல் பகுதியில் உருவான நவீன சமூக இயக்கம் யாத்திரைகளுக்கு இடையே கற்களையும், முட்களையும் தாண்டி வரலாற்று நினைவுச் சின்னங்களின் அழகு நிறைந்த மாநகரத்தின் இதயத்தை தன் வசப்படுத்தியது. 

இந்தியாவிலேயே பாதுகாப்பான நகரம் சென்னை. சர்வதேச ஆய்வில் தகவல்..


உலகத்தில் மக்கள் பாதுகாப்புடன் வாழ ஏற்ற நகரங்கள் எது என்று ஆண்டுதோறும் மெர்சர் என்ற நிறுவனம் ஆய்வு நடத்தி வருகிறது. இந்நிறுவனம் இந்த ஆண்டு மொத்தம் 221 நகரங்களில் ஆய்வு நடத்தியது.
 
இதில் பெல்ஜியத்தில் உள்ள லக்சம்பர்க் நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது. சென்னை நகரம் 108-வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில் தனி மனித பாதுகாப்பு மிகுந்த நகரங்களில் சென்னைக்கே முதலிடம் கிடைத்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் இருப்பது பெங்களூர்.
 

பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சி.பி.ஐற்கு மாற்ற வேண்டும் : எஸ்.டி.பி.ஐ கோரிக்கை.




பரமக்குடியில் தலித்துகள் மீதான் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு நிவாரண தொகையை தலா ஒரு இலட்சம் என தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டுமென பல்வேறு தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது.

எஸ்.டி.பி.ஐ சார்பாகவும் நிவாரண தொகையை உயர்த்தி வழங்குவதோடும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கவேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.

இஸ்ரேலை தாக்க ஏவுகணைகள் தயார் – ஈரான் .

ahmad vahidi
டெஹ்ரான்:இஸ்லாமிய குடியரசான ஈரானை தாக்க முற்பட்டால் இஸ்ரேலுக்கு தகுந்த பாடம் புகட்டப்படும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சரும் பிரிகேடியருமான ஜெனரல் அஹ்மத் வாஹிதி தெரிவித்துள்ளார்.
வாஹிதி கடந்த ஞாயிறு அன்று ஈரானுக்கு எதிராக போர் தொடுத்தால் இஸ்ரேல் பிழைக்க குறைந்த வாய்ப்பே இருக்கும் என்றும் ஈரான் ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை இஸ்ரேலின் மீது ஏவும் என்றும் கூறியுள்ளதாக பார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.