Tuesday 10 May 2011

உஸாமாவின் மரணமும் முடிவில்லாத மர்மங்களும்

osama
‘யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்பார்கள். அதைப்போல் உஸாமா பின் லாடன் இருக்கும் போதும் பத்திரிகைகளுக்கு நல்ல வியாபாரத்தை வழங்கினார். இறந்ததாக கூறப்பட்ட பின்னரும் வழங்கி கொண்டிருக்கிறார்.
உலகில் இவர் அளவிற்கு குறுகிய காலத்தில் எந்த மனிதனும் இந்த அளவிற்கு பரபரப்பாக பேசப்பட்டிருப்பானா என்பது சந்தேகமே. அவரது மனைவிகளின் எண்ணிக்கையில் இருந்து மரணம் வரை பெரும்பாலும் அனைத்துமே ஊகம் தான். இவரை கதாபாத்திரமாக கொண்டு வடிக்கப்பட்ட கதைகளுக்கும் கட்டுரைகளுக்கும் எவ்வித குறைவும் கிடையாது.
1979 முதல் ஏறத்தாழ பத்து ஆண்டுகள் நடைபெற்ற ஆப்கான்-சோவியத் ரஷ்யா போரில் உஸாமா பங்கு பெற்றதாகவும் அதில் அவர் அமெரிக்காவின் உளவுத்துறையால் பயிற்றுவிக்கப்பட்டதாகவும் பெரும்பான்மையினர் கூறுவதுண்டு. ஆனால் இச்செய்திகள் எல்லாம் வெளிவர ஆரம்பித்தது அந்த போர் முடிந்து ஏறத்தாழ பத்து வருடங்களுக்கு பின்னர்தான்! இப்போரை குறித்து எழுதிய பல கட்டுரைகள் மற்றும் புத்தகங்களில் உஸாமாவின் பெயரை காண்பது மிகவும் அரிது.
அடுத்து உஸாமாவை உலகின் மிகப்பெரும் தீவிரவாதியாக மாற்றிய செப்டம்பர் 11 தாக்குதல்கள். இத்தாக்குதல்கள் குறித்து எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கு இதுவரை உறுப்படியான பதில் எதுவும் இல்லை. ஆனால் இத்தாக்குதலை காரணமாக வைத்து இலட்சக்கணக்கான அப்பாவிகளை ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும், பாகிஸ்தானிலும் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டுப்படைகள் கொன்று குவித்தன. உஸாமாவை சிறிது நாட்கள் மறந்த இவர்கள் ஈராக் அதிபர் சதாம் ஹூஸைனை தூக்கிலிட்டனர். இதற்கிடையே உஸாமா இறந்துவிட்டதாக பலமுறை செய்திகள் வெயியாகின.
குறுகிய காலத்தில் பரபரப்பான உஸாமாவின் பெயரை பலரும் மறந்து விட்டனர் என்றே சொல்ல வேண்டும். அவ்வப்போது சில சமயம் வீடியோக்கள் மூலம் காட்சி தருவார் உஸாமா. 2004ஆம் வெளிவந்த வீடியோவில் முதியவராக தோற்றமளித்த உஸாமா 2007ஆம் ஆண்டு வீடியோவில் மிகவும் இளமையாக காட்சி தருவார்!
மே 2 அன்று உஸாமா கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன. இதற்கு முன்னர் பல முறை உஸாமா மரணம் அடைந்ததாக தகவல்கள் வந்துள்ளன. ஆனால் இம்முறை அமெரிக்க அதிபரே செய்தியை அறிவித்ததால் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டனர். உஸாமாவின் புதிரான வாழ்க்கையில் அவரின் மரணமும் புதிராகவே உள்ளது.
2001 ஆம் ஆண்டிலேயே அவரின் சிறுநீரகங்கள் செயல் இழந்ததாகவும் அவருக்கு டயாலஸீஸ் செய்யப்படுவதாகவும் தகவல்கள் தெரிவித்தன. சர்க்கரை நோய் உள்ளிட்ட பிற நோய்களும் அவருக்கு உண்டு. இவ்வளவு நோய்களை வைத்து கொண்டு அவர் எப்படி மலைகளில் உயிர் வாழ்ந்தார்? அதுவும் டயாலஸீஸ் செய்து கொண்டு? அவர் மலைகளில் எல்லாம் வாழவில்லை. நம்மை விட வசதியாக பாகிஸ்தானில் வாழந்து வந்தார் என்று தற்போது கூறுகின்றனர்.
அதுவும் ஒன்றிரண்டு மாதங்கள் அல்ல, ஆறு வருடங்கள் அங்குதான் இருந்தாராம். அதுவும் எங்கே? பாகிஸ்தான் தலைநகருக்கு மிக அருகில், அதுவும் இராணுவ பயிற்சி முகாம் அருகில்! நம்ப முடிகிறதா?? காதில் பூவை சுத்தலாம், மொத்த கூடையையும் தூக்கி வைப்பது நியாயமா? மர்மங்கள் பல இருந்தாலும் இதில் பல படிப்பினைகளும் இருக்கின்றன.
ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த ஆரம்பித்த நாளில் இருந்து பாகிஸ்தான் உடனான அதன் உறவு மிகவும் நெருக்கமானது. வருடந்தோறும் பல பில்லியன் டாலர்களை உதவியாகவும் ஆயுதங்களாகவும் வழங்கியது அமெரிக்கா. இதற்கு பிரதிபலனாக ஆப்கானிஸ்தானை மட்டுமல்ல தனது குடிமக்களை அமெரிக்கா கொலை செய்ததையும் பாகிஸ்தான் கண்டுகொள்ளவில்லை. அமெரிக்காவின் உளவுத்துறையினர் பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றி திரிந்தனர்.
இதனிடையே சில மாதங்களுக்க முன் நடைபெற்ற ரேமண்ட் டேவிஸ் விவகாரம் இருவருக்கும் இடையில் இருந்த தேனிலவை பாதியில் முடித்து வைத்தது. பாகிஸ்தானின் நடவடிக்கைகளால் அதிர்ந்த அமெரிக்கா சரியான தருணத்தை எதிர்பார்த்து கொண்டிருந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் உளவுத்துறையில் தனக்கு சாதகமானவர்களின் உதவியுடன் உஸாமா நாடகத்தை அமெரிக்கா நடத்தியதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
இல்லையென்றால் சுதந்திரமான மற்றொரு நாட்டிற்குள் வந்து ஏறத்தாழ ஒரு மணிநேரம் சர்வ சாதாரணமாக இந்த நாடகத்தை நடத்தி விட்டு செல்ல முடியுமா? இத்துடன் நிறுத்திக் கொண்டதா அமெரிக்கா? இல்லை…தேவைப்பட்டால் இது போன்று இன்னும் தாக்குதல்களை பாகிஸ்தானில் நடத்துவோம் என்று வெளிப்படையாகவே கூறியுள்ளனர் அமெரிக்க அதிகாரிகள்.
எங்களை பகைத்துக்கொண்டு உன்னால் எதுவும் செய்ய முடியாது, எங்களால் எதுவும் செய்ய முடியும் என்று பாகிஸ்தானிற்கு தெரிவிப்பதற்குதான் இந்த தாக்குதல் நாடகம். அமெரிக்காவுடன் உறவு கொண்டிருந்தால் என்ன நடக்கும் என்பதற்கு பாகிஸ்தான் நல்லதொரு உதாரணம். இந்த படிப்பினை பாகிஸ்தானிற்கு மட்டுமல்ல..நமக்கும்தான்.
ஏர்வை ரியாஸ்

பாப்ரி மஸ்ஜித்:அலகபாத் நீதிமன்றத்தீர்ப்பிற்கு தடைவிதித்த உச்சநீதிமன்ற உத்தரவிற்கு பெரும் ஆதரவு

ayodhya_verdict
புதுடெல்லி:பாப்ரி மஸ்ஜித் நில உரிமையியல் வழக்கில் அலகபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்ச் அளித்த பாகப்பிரிவினை தீர்ப்பிற்கு தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை முஸ்லிம் அமைப்புகள், வரலாற்றாய்வாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.
வரலாற்று உண்மைகளையும், சொத்துரிமை ஆவணங்களையும் பரிசோதிக்காமல் பெரும்பான்மை நம்பிக்கையின் அடிப்படையில் வெளியிடப்பட்ட கீழ் நீதிமன்ற தீர்ப்பிற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது மகிழ்ச்சி அளிப்பதாக முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் கீழ் இயங்கும் பாப்ரி மஸ்ஜித் கமிட்டியின் கன்வீனர் டாக்டர்.எஸ்.க்யூ.ஆர்.இல்லியாஸ் தெரிவித்துள்ளார்.
மஸ்ஜிதின் மீது தங்களுடைய உரிமையை நிரூபிக்கும் ஏராளமான ஆவணங்களை சமர்ப்பித்த போதும் அவற்றையெல்லாம் பரிசீலிக்காமல் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே தீர்ப்பை வெளியிட்ட உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றம் வெளியிட்ட கருத்துக்கள் முக்கியத்துவம் வாய்ந்தது என இல்லியாஸ் சுட்டிக்காட்டினார்.
அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்சின் தீர்ப்பு விந்தையானதும், வினோதமானதுமாகும் என உச்ச நீதிமன்றத்தின் கருத்து மிகவும் வரவேற்கத்தக்கது என அனுபம் கேர், டாக்டர்.கெ.எம்.ஸ்ரீமதி, மகேஷ் பட், டாக்டர்.கே.என்.பணிக்கர், பேராசிரியர் ரூபரேக வர்மா, ஷப்னம் ஹாஷ்மி ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
மதசார்பற்ற சக்திகளுக்கு ஆசுவாசத்தை தரும் உத்தரவு என மக்கள் பேரியக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உச்சநீதிமன்ற தீர்ப்பைக் குறித்து கருத்து தெரிவித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வில் முத்துப்பேட்டை மாணவி சாதனை



TUESDAY, MAY 10, 2011

 நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் தாவரவியல் பாடத்தில் மாநிலத்தில் முதல் இரண்டு இடங்களையும் முஸ்லிம் மாணவிகள் இடம் பெற்றுள்ளனர். 

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் ரஹ்மத் அறக்கட்டளை நடத்தும் ரஹ்மத் மெட்ரி்க்  மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவி அய்னுல் மர்லியா தாவரவியல் பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று அப்பாடப்பிரிவில் மாநிலத்தில் முதல் மாணவியாக தேர்ச்சிப் பெற்றுள்ளார். மேலும் திருவாரூர் மாவட்டத்தில் மொத்த மதிப்பென்னில் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளார்.

முத்துப்பேட்டை ஜும்ஆ மஸ்ஜித் கட்டிட பணிக்கு உதவிடுவீர்



FRIDAY, MAY 10, 2011

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...

முத்துப்பேட்டை ஆசாத் நகர் ஜும்ஆ மஸ்ஜிதின் கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. நிதி  பற்றாக்  குறையின்  காரணமாக   வேலைகள் மிகவும் மெதுவாகவே நடந்துகொண்டிருக்கின்றன ஆகையால் தாங்களால் இயன்ற அளவு இந்த அல்லாஹ்வின் மஸ்ஜிதுக்கு உங்கள் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் மற்றும் சந்ததியினருக்கு அருள் பாக்கியம் வழங்குவானாக..!

பள்ளிவாசல் கட்டிட வேலைகளை பார்க்க..
 


 தொடர்புக்கு :

BANK:         I C I C I   BANK  

BRANCH:    MUTHUPET 

NAME:         AHAMED JALALUDEEN

A/C NO:       M.J.T.2   6092010 22473

CONTACT:  +91 7598538495
                         +91 9965418801


அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி யார் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகிறாரோ அது போன்ற ஒன்றைச் சுவர்க்கத்தில் அவருக்காக அல்லாஹ் கட்டுகிறான் என்று நபி (ஸல்) கூற நான் செவியுற்றுள்ளேன் என உஸ்மான் (ரலி) கூறினார்கள். 
நூல் : புகாரி-450
அறிவிப்பு : உபைதுல்லாஹ் அல் கவ்லானி (ரலி)

'ஸ்கைப்' ஐ வாங்குகிறது மைக்ரோசோஃப்ட் 8.5 பில்லியன் USD க்கு உடன்படிக்கை..!


'ஸ்கைப்' ஐ வாங்குகிறது மைக்ரோசோஃப்ட் 8.5 பில்லியன் USD க்கு உடன்படிக்கை..!

TUESDAY, MAY 10, 2011

பேஸ்புக், கூகுள் நிறுவனங்களின் கடும் போட்டிக்கு மத்தியில், 'ஸ்கைப்' சேவையை மைக்ரோசோஃப்ட் நிறுவனம் வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 8.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதிக்கு ஸ்கைப் வாங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம், கடந்த 36 வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய வர்த்தக உடன்பாடாக இது அமைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மைக்ரோசோஃப்ட்டின், விண்டோஸ் லைவ் மெசேஞ்சரில் ஏற்கனவே வீடியோ சேட்டிங் சேவை காணப்படுகிற போதும் விண்டோஸ் ஃபோன் 7 தொலைபேசி சாஃப்வேருடன் இணைந்து இயங்காது. இதனால் மைக்ரோசோப்ஃட் இற்கு உடனடியாக வீடியோ கோல் வசதியுடன் கூட ஓர் சாஃப்ட்வேர் தேவைப்பட்டது.
இந்நிலையில், ஐபோன், ஐபேட் என அனைத்திலும் இயங்ககூடிய ஸ்கைப் சேவையை விலைகொடுத்து வாங்குவதன் முலம் தனது விண்டோஸ் ஃபோன் 7 ற்கு ஏற்றால் போல் அதன் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தவுள்ளது.

லுக்ஸம்பேர்க்கை தலைமையகமாக கொண்ட ஸ்கைப் நிறுவனம் சுமார் 663 மில்லியன் குளோபல் பயணாளர்களை கொண்டுள்ளது. 2006ம் ஆண்டு eBay நிறுவனம், ஸ்கைப்பின் பங்குகளை 2.6 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கிக்கொண்டதுடன், 2009ம் ஆண்டு அதன் 70% வீத பங்குகளை விற்றது. 

கடந்த 2010 ஆகஸ்ட்டில் மேலதிமகாம புதிய பங்குகளை விற்கும் திட்டத்தை அறிவித்தது. இதையடுத்தே இக்கொடுக்கல் வாங்கலுக்கான முயற்சிகள் மேற்கொள்ளத்தொடங்கப்பட்டன. ஆன்லைன் வழியே Video, Audio Calling செய்வதற்கு உலகின் மிகச்சிறந்த சாஃப்ட் வேராக ஸ்கைப் திகழ்கிறது.