Saturday 13 August 2011

சுதந்திர தின அணிவகுப்பு : உற்சாகத்தில் மேலப்பாளையம் !


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடந்த மூன்று வருடங்களாக சுதந்திர தின அணிவகுப்பு நடத்தி வருகிறது. இந்த வருடம் சுதந்திர தின அணிவகுப்பை மேலப்பாளையத்தில் வைத்து நடத்துவதாக அறிவித்துள்ளது.
இதனை பற்றி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயலாளர் A .ஹைதர் அலி அவர்கள் நமது நிருபர்களிடம் கூறியதாவது ” சுதந்திரம் என்பது நமது உரிமை அதனை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம். நாம் இப்பொழுது 65 -வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு நாமெல்லாம் தயாராகி வருகிறோம். கடந்த பல வருடங்களாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சுதந்திர தினத்தின் போது பல்வேறு நிகழ்ச்சிகள் சுதந்திரத்தின் நினைவலைகளை நினைவு கூர்ந்து தியாகிகளை கவுரவித்து வருகிறது. குறிப்பாக கடந்த 3- ஆண்டுகளாக சுதந்திரதின அணிவகுப்பை நடத்தி வருகிறது. இவ்வருடமும் ஆகஸ்டு 15 ல் நெல்லை மாவட்டத்தில் சுதந்திர தின அணிவகுப்பை நடத்த தீர்மானித்துள்ளோம்.

விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம் பக்கிரிகள்..



வங்காளத்தில் 1776ம் ஆண்டு முதல் 10-ஆண்டுகள் ஆங்கிலேய ஆதிக் கத்திற்கு எதிராக முஸ்லிம் பக்கிரிகள் நடத்திய புரட்சியால் பிரிட்டிஷ் ஆட்சி கதிகலங்கி விட்டது. 

இந்தப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய சிராக் அலியைப் பிடிக்க ஆங்கிலேயர்கள் எவ்வளவோ முயற்சித்தனர். தலைமறைவான அவரை கடைசி வரை ஆங்கிலேயர்களால் பிடிக்க முடியவில்லை.