Tuesday 25 October 2011

குண்டு வெடிப்புகளுக்கு முஸ்லீம்களை பலிகடாவாக்கும் காவல்துறையும் ஊடகங்களும் : நீதிபதி மார்க்கண்டே கட்ஜு கண்டனம்



புது டெல்லி : "நாட்டில் எங்கு குண்டு வெடிப்பு நடந்தாலும் உடனே முஸ்லீம்கள் மீது பழி சுமத்தும் போக்கை காவல்துறையும் ஊடகங்களும் கையாள்வது வெட்கக்கேடானது" என்று உச்ச நீதிமன்றத்தில் இருந்து கடந்த மாதம் ஓய்வு பெற்ற நீதிபதியும், தற்போதைய பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் தலைவருமான மார்க்கண்டே கட்ஜு கடும் கண்டனம் தெரிவித்தார்.

ஆங்கில தொலைக்காட்சி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், "முஸ்லீம்களை குண்டுவெடிப்புகளுக்குக் காரணகர்த்தாவாக சித்தரிக்க்கும் ஊடகங்களும் காவல்துறையும் அப்போக்கை கைவிட வேண்டும்" என்று கூறினார். தடய அறிவியல் உள்ளிட்ட விஞ்ஞான முறைகளில் நமது நாட்டின் காவல்துறைக்குத் திறமை இல்லாததாலேயே தீவிரவாத வழக்குகள் தீர்க்கப்படாமல் இருப்பதாக கூறினார்.

ஆர்எஸ்எஸ், பாஜகவுடன் அண்ணா ஹசாரே குழுவினருக்கு தொடர்பு: திக்விஜய்சிங் குற்றச்சாட்டு

புது தில்லி : சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே குழுவினருக்கு பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளுடன் தொடர்பு உள்ளது என்று காங்கிரஸ் பொதுச் செயலர் திக்விஜய் சிங் குற்றம் சாட்டினார்.  

அண்ணா ஹசாரே குழுவில் இடம்பெற்றுள்ள அரவிந்த் கேஜ்ரிவால் நடத்தும் தன்னார்வ தொண்டு நிறுவனம் முறைகேடாக பண பரிமாற்றம் செய்தது குறித்த குற்றச்சாட்டுக்கு பாஜக பதிலளித்துள்ளது. இதிலிருந்தே அண்ணா ஹசாரே குழுவினருக்கு ஆர்எஸ்எஸ், பாஜக அமைப்புகளுடன் தொடர்பு உள்ளது இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது என்றார்.