Wednesday 17 July 2013

ஸ்கூல் சலோ: 3.3 கோடி ரூபாய் பள்ளிக்கூட சாதனங்களை வழங்கியது பாப்புலர் ஃப்ரண்ட்!

புதுடெல்லி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டுதோறும் நடத்தி வரும் ஸ்கூல் சலோ திட்டத்தில் இந்த ஆண்டு இரண்டு கட்டங்களாக 3 கோடியே 30 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஸ்கூல் கிட்டுக்களை (பள்ளிக்கூட சாதனங்கள்) வழங்கியுள்ளது. மொத்தம் 1,16, 595 ஸ்கூல் கிட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளன.

கோவை சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகளுக்கு ரமலான் நோன்புக்கான மளிகை பொருட்கள்!- எஸ்.டி.பி.ஐ வழங்கியது!

கோவை மத்திய சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகளுக்கு ரமலானை முன்னிட்டு அவர்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் கோவை மாவட்ட SDPI கட்சியின் சார்பில் இன்று (17.07.2013) வழங்கப்பட்டது. 

பாப்புலர் ஃப்ரண்ட் அளித்த புகாரில் ப்ரஸ் கவுன்சில் நடவடிக்கை! - ஐ.பி, என். ஐ.ஏவுக்கு நோட்டீஸ்!

புதுடெல்லி: நற்பெயரை கெடுக்கும் வகையில் செய்தி வெளியிட்டதை தொடர்ந்து 10 நாளிதழ்களுக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அளித்த புகாரில் ஐ.பி மற்றும் என்.ஐ.ஏவுக்கு ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. நேற்று டெல்லியில் நடந்த அமர்வில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அளித்த புகாரில் வாதம் கேட்டபிறகு நோட்டீஸ் அனுப்ப தீர்மானிக்கப்பட்டது.