Friday 21 October 2011

லிபிய முன்னாள் அதிபர் கடாபி சுட்டுக் கொலை !


சிர்தி (லிபியா): லிபிய முன்னாள் ஆட்சியாளர் கடாபி நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். பதுங்கு குழியில் மறைந்திருந்த அவர் மீது புரட்சி படை - நேட்டோ படை அதிரடி தாக்குதல் நடத்தி சுட்டுக் கொன்றது.
எண்ணெய் வளம் கொழிக்கும் லிபியாவை கடந்த 42 ஆண்டுகளாக தன்பிடியில் வைத்திருந்தவர் அதிபர் கடாபி. வயது 69. கடந்த பிப்ரவரியில் அவரது ஆட்சியில் அதிருப்தி அடைந்த இளைஞர்கள் தலைமையில் புரட்சி படை அமைந்தது. கடாபிக்கு எதிரான கிளர்ச்சி தொடங்கியது. அதை ஒடுக்க ராணுவத்தை ஏவினார் கடாபி. இருதரப்புக்கும் பயங்கர மோதல் நீடித்தது.