Friday 20 May 2011

.பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆன்லைன் பதிவு 15 நாள்களுக்குள் பள்ளியில் பதிவு செய்பவர்களுக்கு ஒரே சீனியாரிட்டி எழுத்துரு அளவு

வெள்ளி, 20 மே 2011

சேலம், மே 20- தமிழகத்தில் மே 9ஆம் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. மே 25ஆம் தேதி மதிப்பெண் சான் றிதழ்கள் வழங்கப் பட உள்ளது. மாண வர்கள் மதிப் பெண் சான்றிதழ் பெற்ற உடனே, கல்வித் தகுதியை பதிவு செய்ய அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங் களுக்கு படையெடுப்பது வழக்கம். இதனால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.

இந்த சிரமங்களை தவிர்க்க படித்த பள்ளிகளிலேயே ஆன் லைன் மூலம் பதிவு செய்யும் வசதியை தமிழக அரசு இந்த ஆண்டு தொடங்கியுள்ளது. வரும் 25ஆம் தேதி மதிப்பெண் சான் றிதழ் வழங்கப்பட்ட உடன், மாணவர் கள் தாங்கள் படித்த பள்ளியிலேயே கல்வித்தகுதியை பதிவு செய்யலாம்.

நீண்ட நேர கணினி பயன்பாட்டினால் ஏற்படும் சிரமங்கள்

இடைவெளியின்றி ஒவ்வொரு நாளும் நீண்ட நேரம் கணினியைப் பார்த்து உபயோகிக்கும் பலருக்கு உடலிலும், கண்களிலும் ஏற்படும் சிரமமே 'Computer Vision Syndrome' என்றழைக்கப் படுகிறது. கணினியில் ஒரு நாளில் மூன்று மணி நேரமும், அதற்கு மேலும் தொடர்ந்து வேலை செய்பவர்களில் 90% சதவிகிதத்தினர்க்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

உடலில் சோர்வு, பின் கழுத்து, முதுகு மற்றும் தலை வலி, கைகள், மணிக்கட்டு மற்றும் தோள் பட்டை வலி ஆகிய நோய்க்குறிகள் ஏற்படுகின்றன. தொடர்ந்து கணினித் திரையைப் பார்த்துக் கொண்டிருப்பதாலும், கண் இமைகள் சிமிட்டல் குறைவதாலும் கண்கள் உலர் தன்மை அடைகிறது. இதனால் கண்களில் உறுத்தல், எழுத்துக்கள் இரண்டாகவும், பலவாகவும் தெரிதல் மற்றும் பார்வை தெளிவற்றும் தோன்றுகின்றன.

அல்சருக்கு மருந்து தேன்

வயிற்றில் ஏற்படும் புண், அழற்சி, ஈரல், பித்தப்பை நோய்கள் அனைத்துக்கும் மருந்தாக தேன் அமைந்துள்ளது. அதனால்தான் வயிற்றின் நண்பன் தேன் என்கிறோம்.

ஒன்று முதல் மூன்று தேக்கரண்டி தேனை 100 மி.லி. ஆறிய வெந்நீருடன் கலந்து தினமும் காலை அல்லது இரவு நேரங்களில் வெறும் வயிற்றில் உணவு அருந்துவதற்கு முன் பருகி வர வேண்டும். இப்படி செய்தால் வயிற்றுப்புண், இரைப்பை அழற்சி ஈரல், பித்தப்பை நோய்கள் குணமாகும்.

இரைப்பையில் தேவைக்கு அதிகமாக சுரக்கப்படும் அமிலத்தின் தன்மையைக் கட்டுப்படுத்துவதுடன் அமிலத்தால் வயிற்றுப் புண்ணிற்கு ஏற்படுத்தப்படும் தூண்டுதலைக் குறைத்து, எரிச்சல், வலியை நீக்கும்.

மேலும் நீர்த்தாரைப் புண், சிறுநீரக, இதய நோய்களையும் தடுக்க வல்லது தேன்.

சித்ரவதையால் அமையாது சட்டம்-ஒழுங்கு!



“இந்தியாவின் காவல்துறையினருக்கு, குற்றங்கள் குறித்த சாட்சிகளையும், சான்றுகளையும் தேடி அலைவதைவிட – நிழலில் சுகமாக அமர்ந்து கொண்டு அவர்களிடம் அகப்பட்ட எளியமக்களின் கண்களில் மிளகாய்ப்பொடியை தூவுவதே மகிழ்ச்சி அளிக்கிறது”.


-சர் ஜேம்ஸ் ஸ்டீஃபன், குற்றவியல் சட்ட வரலாறு(1883) என்ற புத்தகத்தில்...



1991ம் ஆண்டின் அக்டோபர் மாதத்தின் புழுக்கம் மிகுந்த ஒரு நாள். மதுரை மாவட்ட குற்றவியல் அமர்வு நீதிமன்ற வளாகம். விருதுநகர் அருகில் வாய்ப்பூட்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்த பாண்டியம்மாள் என்ற பெண்ணை கொலை செய்ததாக அவரது கணவர் வேலுச்சாமி ஒப்புக்கொண்டதாக கூறப்பட்ட வழக்கின் தீர்ப்புநாளான அன்று, நீதிமன்றம் வழக்கத்திற்கு அதிகமான பரபரப்புடன் இருந்தது.

மஸ்ஜிதுல் அக்ஸாவை மூட இஸ்ரேல் சதிவலை

Al-aqsa-mosque01_cropped

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு அதிகார சபை, ஜெருசலத்தில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் அக்ஸாவில் பாங்கு சொல்வதை தடை செய்ய முயன்று வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மஸ்ஜிதுல் அக்ஸாவில் ‘அதான்’ சொல்வது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு குடியேறிகளை தொந்தரவு பண்ணுவதாகவும்,நடு நிசியில் தமது தூக்கத்தை கலைப்பதாகவும் அவர்கள் கடந்த ஒரு வருடமாக முறையிடுவதாக இஸ்ரேல் ஆக்கிரமிப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜெருசலத்தில் உள்ள இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு குடியேறிகளில் ஒரு குழுவினர் கடந்த 2006 ஆம் ஆண்டு ஹமாஸ் அமைப்பினால் பிடித்து செல்லப்பட்ட இஸ்ரேலிய சிப்பாயை  விடுவிக்கும் வரை மஸ்ஜிதுல் அக்ஸாவை மூடவேண்டும் என்றும் தெரிவித்து வருவதாகவும் பலஸ்தீனர்கள் தெரிவிக்கின்றனர்.
மேற்கு கரையில் இருந்து வரும் 15 வயதுக்கு மேற்பட்ட எவரும் ஜெருசலத்தில் தொழுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. 50 வயதை கடந்தவர்களும் , விசேச அனுமதி பத்திரம் பெற்றவர்களும் மட்டும் அங்கு தொழுவதற்கு அனுமதிக்கபடுகின்றனர்.
 மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு கீழ் தோண்டி வரும் சுரங்கத்தால் ஏற்கனவே மஸ்ஜிதுல் அக்ஸா வெடிப்பு எடுக்க தொடங்கிவிட்டது. இந்த நிலையில் ‘அதானை’யும் தடை செய்து மஸ்ஜிதுல் அக்ஸாவையும் மூடிவிடும் ஆபத்தை தாம் எதிர்கொள்வதாக பலஸ்தீனர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை இஸ்ரேல் வெளிவரும் Haaretz என்ற பிரபல பத்திரிகை இஸ்ரேல் 140,000 பலஸ்தீனர்களின் குடியுரிமையை பறித்துள்ளதாக தெரிவித்துள்ளது. 1967 -1994 காலப் பகுதியில் பலஸ்தீனில் இருந்து வெளியேறி 6 வருடங்களுக்கு மேல் திரும்பி வராமல் தமது குடியுரிமையை புதுப்பிக்காத பலஸ்தீனர்கள் குடியுரிமையை இழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
ஆனால் ஜெருசலத்தில் 7ஆண்டுகள் ஜெருசலத்தை விட்டு வெளியில் வசித்தவர்கள் ஜெருசலத்தில் மீண்டும் குடியேரும் உரிமையை இன்றும் இழந்து வருகின்றனர்.
 இவர்கள் திரும்பிவரும்போது அங்கு மீண்டும் குடியேற அனுமதிக்கப்படாத ஆக்கிரமிப்பு அராஜகம் இன்றும் தொடர்கின்றது என்பது குறிபிடத்தக்கது.



கலீபா அப்துல் ஹமீது பதவியில் இருந்து அகற்ற படும் போது
M.ஷாமில் முஹம்மட்
இன்று 3.3.2010 இதே திகதியில் 3.3.1924 ஆம் ஆண்டு திங்கள் கிழமை காலை வேளையில் கிலாபத் உலகை விட்டும் அழிக்கபட்டது மனித குலத்துக்கு விடுதலையாய் இருந்த முஸ்லிம்களின் சாம்ராஜ்யம் வீழ்த்தப்பட்டது மேற்கு கண்ட கனவு நிஜமானது முதல் சிலுவை யுத்தத்தில் முஸ்லிம்களிடம் தேற்றவர்கள் இரண்டாம் சிலுவை யுத்தத்தின் மூலம் இஸ்லாமிய சாம்ராஜியத்தை வெற்றி கொண்டனர் இஸ்லாமிய ஆட்சி உலகில் அல்லாஹ்வின் தூதரினால் நிலை நிறுத்தப்பட்டு 7ஆம் நூற்றாண்டு தொடக்கம் 19 ஆம் நூற்றாண்டு வரை 1300 ஆண்டுகள் மனித இனத்திற்கு அருளாய் இருந்த சாம்ராஜ்யம் தேசியவாதம் என்ற மேற்கின் விஷம் ஊட்டப்பட்டு  கோமா நிலையில் போடப்பட்டது, இன்று குற்றுயிரும் குறைஉயிருமாக துடித்துக்கொண்டு இருக்கிறது. இந்த வேளையில் முஸ்லிம் உம்மாஹ் கிலாபத்தை இழந்து இன்றுடன் 86 ஆண்டில் கால் பதிக்கின்றது.
மேற்கு தனது நாசகார மந்திரமான “ஒற்றுமையை பிரிவினையாக உருமாற்றி தேசத்தை கைபற்று” என்ற மந்திரத்தை தனது கிருஸ்தவ மிஷனெரிகள் மூலமும் ராஜதந்திர நடவடிக்கைகள் மூலமும் தேசியவாதம் என்ற கொடியின் கீழ் வெற்றிகரமாக செயல்படுத்தி முஸ்லிம் தேசத்தை துண்டுகளாக உடைத்து, உடைக்கப்பட்ட பகுதிகளை மேற்கு தனது இராணுவ ,மற்றும் நாகரீக கட்டுபாட்டின் கீழ் கொண்டுவந்தது பலமான முஸ்லிம் உம்மாஹ் என்ற கட்டமைப்பை உடைந்தது முஸ்லிம்கள் பலம் இழந்தனர் முஸ்லிம் உம்மாஹ் தேசிய வாதம் என்ற கொடிய விஷம் ஊட்டப்பட்ட சமூகமானது.விரிவாக பார்க்க1,2
கிலாபத் அழிக்கப்பட்டு இன்றுடன் 86 ஆண்டுகள் தான் கடந்துள்ளது மேற்கு பயங்கரவாதம் முஸ்லிம் உம்மாஹ்வை பலவீன படுத்தி முஸ்லிம் உம்மாஹ்வின் முதுகில் ஏறி ருத்ர தாண்டவம் ஆடுகிறது 3.3.1924 ஆம் ஆண்டு துருகியில் முஸ்தபா கமால் அதாதுர்க் என்ற இஸ்லாமிய சாம்ராஜிய துரோகி  என்று வர்ணிக்கப்படும் நபரை பயன்படுத்தி ஐரோப்பியர் 13 நூற்றாண்டுகளாக பலத்துடனும் பலவீனத்துடனும் ஏதோ ஒருவகையில் உலகில் நிலை பெற்ற இஸ்லாமிய கிலாபத்தை விழ்த்தினர் , அழித்தனர் இதற்கு முன்னர் 1908ல் துருக்கியில் மேற்கின் ஆதரவுடன் துருக்கி தேசிய வாலிபர் அமைப்பு என்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது இவர்கள் இஸ்லாம் என்ற அடையாளத்தை முதன்மை படுத்தாமல் மேற்கின் பிரித்தாளும் தத்துவமான  தேசியவாதத்துக்கு முன்னுரிமை வழங்கி துருக்கியில் கலகம் செய்யதனர் அதற்காகவே மேற்கு சக்திகளால் உருவாக்கப்பட்டனர் இந்த கலகத்தில் இவர்களின் கை ஓங்கியது நிர்பந்தங்களின் காரணமாக கிலாபத் அரசு ஒப்பந்தங்களுக்கு இணங்கியது ஒப்பந்தங்களின் ஊடாக துருக்கி தேசிய வாலிபர் அமைப்பு கிலாபத் அரசாங்க நிர்வாகத்தினுள் புகுந்தது இவர்களின் செல்வாக்குடன் துருக்கிய தேசியவாதம் என்ற குறுந் தேசிய விஷம் முஸ்லிம் சமுகத்திற்குள் புகுந்தது.
துருக்கி நிர்வாகத்திற்குள் புகுந்த இவர்கள் 240 உறுபினர்களை கொண்ட ஒஸ்மானிய மந்திரி சபையில் கலீபா இரண்டாவது அப்துல் ஹமீது என்பவரை பதவியில் இருந்து அகற்றுவதற்கு தீர்மானம் ஒன்றை கொண்டுவர அழுத்தங்களை பிரயோகித்தனர் ஏற்கனவே பல வெளிநாட்டு கிலாபத்தின் எதிரிகளின் படை எடுப்பால் திட்டமிட்டு சிதைக்கப் பட்டுகொண்டிருந்த கிலாபத், மேற்கு வெளிநாட்டு முகவர்களின் உள்நாட்டு சதிகளால் 27 ஏப்ரல் 1909 இல் கலீபா அப்துல் ஹமீது கலீபா பதவியில் இருந்து அகற்றபட்டார் இந்த தீர்மானத்தை கொண்டுவர பிரதான காரணமாக அமைந்தவர்கள் மேற்கின் உருவாக்கமான துருக்கி தேசிய வாலிபர் அமைப்புத்தான் இந்த அமைப்பில் யூதர்கள் பலர் அதன் நிர்வாக பிரிவில் இருந்தார்கள் என்பது குறிபிடதக்கது .
1901 இல் கலீபா அப்துல் ஹமீதின் கிலாபத்தின் போது யூதர்கள் பொருளாதார பலத்தை பண்படுத்தி பலஸ்தீனத்தின் நிலங்களை அபகரித்து கொண்டிருந்த போது இவர்களின் சூழ்ச்சியை புரிந்து கொண்ட சுல்தான் அப்துல் ஹமீது யூதர்களுக்கு நிலங்களை விற்பதை தடை செய்து கட்டளை வெளியிட்டார் . சியோனிஸ கனவுக்கு தடையாக அமைந்ததை கண்ட யூதர்கள் தமது யூதர்களின் பலம் பொருந்திய குழு ஒன்றின் ஊடாக கலீபா அப்துல் ஹமீதை சந்திக்க முற்பட்டனர் ஆனால் அவர்களை கலீபா சந்திக்க மறுத்து விட்டார் எனிலும் இவர்கள் தமது கோரிக்கையை வேறு வழியில் முன்வைத்தனர் இதன் படி குறித்த சட்டத்தை விலக்கிக் கொண்டு ஜெருசலத்தில் யூதர்கள் வாழ்வதற்கு இடம் கொடுத்தால் சாம்ராஜியத்தின் அத்தனை கடன்களையும் அடைத்து விடுவதாகவும் வட்டி இன்றி பொருளாதார உதவிகளை அளிப்பதாகவும் கூறினர் அதற்கு கலீபாவின் பதில் இவ்வாறு இருந்தது ‘பலஸ்தீனம் என்னுடைய பரம்பரை சொத்தல்ல, நான் நினைத்த மாதிரி கொடுப்பதற்கு, இது முஸ்லீம்களின் தேசம் கலீபா உமர் காலத்தில் இருந்து முஸ்லிம்களின் பரம்பரை தேசம் . இந்த பகுதி முழுவதும் முஸ்லீம்களின் குருதி சிந்தி இருக்கிறது . பலஸ்தீன மண்ணில் ஒரு பகுதியை கொடுப்பதை விட என் சதையின் ஒரு பகுதியை வெட்டி கொடுப்பது எனக்கு எளிதாக இருக்கும். என்னுயிர் உள்ள வரை கட்டளை சட்டம் விலக்கிக் கொள்ளப்பட மாட்டாது’ என்று தெளிவாக சொன்னார்கள்.
இந்த சம்பவம் யூதர்களுக்கு மேலும் இஸ்லாமிய சாம்ராஜ்யத்துக்கு எதிராக மேற்குடன் சதி நாச வேலைகளை செய்யவும் மேற்கு இவர்களை பயன்படுத்தவும் ஏதுவாக அமைந்தது என்று குறிபிடலாம் 27 ஏப்ரல் 1909 இல் கலீபா அப்துல் ஹமீது கலீபா பதவியில் இருந்து அகற்றப்பட்டார் இந்த தீர்மானத்தை கலீபா முன் சென்று நான்கு நபர்கள் வாசித்தனர் இவர்களில் இருவர் முஸ்லிம்கள் மற்ற இருவரில் ஒருவர் எமானுவேல் கரசா என்ற யூதன் இந்த கட்டம் மிக தெளிவாக மேற்கினதும் யூதர்களினதும் சதியை காட்டுகின்றது இது யூதர்களின் பலி வாங்கும் சந்தர்பமாக இருந்தது கலீபா அப்துல் ஹமீது பதவியில் இருந்து அகற்றபட்ட பின்னர் பிரிட்டன் அதிபர் பெல்பௌர்- belfour- 1917 ஆம் ஆண்டில் இஸ்ரேல் என்ற ஒரு நாட்டை உருவாக்க பிரிட்டன் ஆயத்தங்களை செய்வதாக பிரகடனபடுத்தினார் என்பது குறிபிடதக்கது இது யூதர்கள் இஸ்லாமிய சாம்ராஜியத்தை அழிக்க உதவியதற்கு நன்றிகடனாக இருக்கலாம்.
27 ஏப்ரல் 1909 ஆம் ஆண்டில் கலீபா அப்துல் ஹமீது பதவியில் இருந்து அகற்றபட்ட பின்னர் துருக்கி தேசிய வாலிபர் அமைப்பு தனது பிடியை படிப்படியாக இருக்க தொடங்கியது 240 உறுபினர்களை கொண்ட ஒஸ்மானிய மந்திரி சபை அப்துல் மஜீத் என்ற கலீபாவை 1922 இல் நியமித்தது இவர்தான் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் இறுதி கலிபாவாக பார்க்கப்படுகின்றார் முஸ்தபா கமால் என்ற மேற்கின் பொம்மை துருக்கி நாட்டின் அதிகாரத்தினை கையில் எடுத்தவுடன் மிகவும் வேகமாக கிலாபத் அழிப்பை தொடங்கியது , 1924 கலீபா அப்துல் ஹமீது பதவியில் இருந்து அகற்றபட்டார் இறுதியாக இருந்த கிலாபத்தின் எச்சசொச்சங்கள்   3.3.1924 உலகில் இருந்து அகற்றபட்டது கிலாபத் கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு அதே நாள் கலீபா குடும்பத்துடன் நாடு கடத்தபட்டார் 3.3.1924 அன்று மேற்கின் சதிநாச வேலைகளால் கிலாபத் அழிக்கப்பட்ட பின்னர் அன்றைய பிரிட்டிஷ் வெளிநாட்டு செயலாளர் லோர்ட் குர்சொன் – Lord Curzon- பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இப்படி கூறினான் “இந்த விவகாரத்தில் முக்கிய விடையம் என்னவென்றால் துருக்கி அழிக்கபட்டுகொண்டிருகின்றது அது மீண்டும் ஒரு போதும் எழுச்சி பெறாது காரணம் துருக்கியின் ஆத்மாத்த பலமான கிலாபத்தையும் , இஸ்லாத்தையும் நாம் அழித்து விட்டோம்” என்றான்.
கிலாபதின் இறுதி அழிப்புபை செய்தவன் முஸ்தபா கமால் என்ற துரோகி இவன் வெறும் கிலாபத் அழிப்புபை மட்டும் செய்யவில்லை இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் புதிய சந்ததியை இஸ்லாம் என்றால் என்ன என்று கேட்க வைக்கும் அளவிற்கு முஸ்லிம் சமுகத்தில் இருந்து இஸ்லாத்தை மிகவும் அந்நியபடுத்த தேவையான மேற்கில் இருந்து இறக்குமதியான திட்டங்களை அமுல்படுத்தினான் என்று வரலாறு குற்றம் சாட்டுகின்றது .
கிலாபத் கலைக்கபட்டதாக அறிவிக்கப்பட் பின்னர் முஸ்தபா கமால் இஸ்லாத்துக்கு எதிரான அத்தனை சட்டங்களையும் அமுலுக்கு கொண்டு வந்தான் நாடு பூராவும் அரை நிர்வாண முழு நிர்வாண பெண்களின் நடன விடுதிகளை ஆரம்பித்தான் இதை எதிர்த்து கருத்து சொன்ன ஒரு புத்திஜீவியை தனது கை தடியால் அடித்து துரத்தியதுடன் அல்குர்ஆன் பிரதி ஒன்றாலும் அவர் மீது வீசி எறிந்தான் அரபு மொழியை முழு அளவில் தடை செய்தான் , அரபு கற்க முற்பட்டால் தேச துரோகமாக அறிவித்தான் , அரபு மொழியில் பாங்கு சொல்வதை தடை செய்தான் இஸ்லாமிய உடையை தடை செய்தான் , எதிர்க்கும் மனிதர்களை , கொலை செய்தான் சிறையில் அடைத்தான், நாடு கடத்தினான் எல்லாவற்றுக்கும் மேலாக அல்லாஹ் என்று சொல்வதை தடை செய்தான் அல்லாஹ் என்று சொல்லுக்கு பதிலாக “தன்றி” -Tanri-என்ற சொல்லை அறிமுகபடுத்தினான் அல்லாஹு அக்பர் என்று சொன்னதுக்காக பலரை சிறையில் அடைத்தான் ஒரு சமயம் மஸ்ஜிதின் மினாரா ஒன்றில் இருந்து வந்த பாங்கு தனது இசை நிகழ்ச்சிக்கு இடையூறு விளைவித்தாதாக கூறி அந்த மஸ்ஜிதின் மினாராவை இடித்து தகர்த்தான்.
அரபு எழுத்துகளை பாவிப்பதை தடை செய்தான் , ஒரு தடவை தான்தான் இறைவன் என்று கூட கூறினான் முஸ்லிம் பெண்களை ஐரோப்பிய வெறியர்கள் முன் நிர்வாணமாக ஆடவிட்டு ரசித்தான் பெண்களை காம நடன நங்கைகளாக உருவாக்க பாடசாலைகளை உருவாக்கினான் மேற்கு காமநடன ஆசான்கள் இவர்களுக்கு கற்பித்தனர் பால் கவர்ச்சியை தூண்டும் உடைகளை உடுத்தவும் தைக்கவும் மேற்கு ஆசான்கள் கொண்டுவரபட்டனர் இஸ்லாத்துக்கும் அடுத்த சந்ததிக்கும் உள்ள அணைத்து தொடர்பு களையும் மேற்கின் உதவியுடன் துண்டித்தான் ஒரு தடவை இவன் தனது இராணுவ சிப்பாயை பார்த்து who is God where does he live ? இறைவன் யார் அவன் எங்கு இருக்கின்றான் என்று கேட்டான் அதற்கு அந்த இராணுவ சிப்பாய் முஸ்தபா கமால் பாஷா இறைவன் அவர் அங்கோர வில் இருக்கின்றார் என்று பதில் சொன்னதாக ஒரு பதிவு இருக்கிறது.
இங்கு கவனிக்க பட வேண்டிய விடயம் ஒன்று இருக்கிறது முஸ்தபா கமால் பாஷா தான் அதிகாரத்துக்கு வரமுன்னர் ஐந்து வேலை தொழுபவனாக , நோன்பு நோற்பவனாக , ஹஜ் செய்பவனாக, அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்பவனாகவும் இருந்தான் அதிகாரம் கைக்கு வந்தவுடன் நேர் மாறாக மாறினான் இந்த சடுதியான மாற்றம் இவனின் உண்மையான உருவத்தை வெளிக்காட்டியது என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்
இவன் இஸ்லாத்தை தழுவியவர்கள் போல் நடித்த அல்லது இஸ்லாத்தில் சில பகுதிகளையும் யூத மதத்தில் சில பகுதிகளையும் பின் பற்றும் ஒரு யூத கோத்திரம் ஒன்றை சார்ந்தவன் இவனில் கோத்திரம் இஸ்லாமிய சாம்ராஜ்யத்துக்கு உட்பட்டிருந்த சலோனிக்க Salonika என்ற தேசத்தை சேர்ந்தது இவர்களில் 1913 இல் 300 யூத குடும்பங்கள் இஸ்லாத்தை தழுவியதாகவும் அவர்கள் இஸ்லாத்தை தழுவினாலும் யூத மத வழிபாடுகளை தொடர்ந்தும் செய்து வந்ததாகவும் வரலாறு கூறுகின்றது இவர்கள் முஸ்லிம்களால் திம்மிகள் Doemeh-என்று அழைக்க பட்டதாகவும் , முஸ்லிமகள் போன்று இஸ்லாமிய கடமைகளில் முனைப்பாக இருந்ததாகவும் ஆனால் முஸ்லிம் பெண்களை இவர்கள் கண்டிப்பாக திருமணம் முடிக்க கூடாது என்ற யூத கொள்கையில் இருந்ததாகவும் வரலாறு கூறுகின்றது முஸ்தபா கமால் பாஷா மற்றும் நிதித் துறை அமைச்சராக அதிகாரத்தில் இருந்த ஜாவிட் பெய்யும் – Djavid Bey- இந்த யூத திம்மி – Doemeh-பிரிவை சார்ந்தவர்கள் என்பது வரலாறு இப் போது சில விடையங்கள் உறவு முறைகள் தெளிவாக தெரிகின்றது – The Secret Jews by Joachim Prinz 1973,pp. 111-122-
இது யூத சியோனிச வாதிகள் எப்போதும் மிகவும் கடமை உணர்வுடன் யூத தேசத்துக்காக இயங்கிகொண்டிருந்ததைதான் காட்டு கின்றது யூதர்கள் மேற்குலகுடன் இணைந்து தாம் நினைத்ததை சாதித்தார்கள் இன்றும் மேற்கு உலகின் சிந்தனையை தீர்மானிக்கும் சிந்தனை சாரதிகளாக உருவாகியுள்ளனர் நாம் கிலாபத்தை இழந்து ௮௬ வருடங்களை அடைந்தும் கிலாபத்துக்கு என்ன நடந்தது என்பதை பாடசாலையில் உயர்தர வகுப்பில் இஸ்லாமிய நாகரிகம் என்ற பாடத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கூறப்படும் சம்பவங்களை பற்றி மட்டும் தெரிந்துகொண்டு இஸ்லாமிய கிலாபத் தின் வரலாற்றை தவறாக விளங்கி கொள்கின்றோம் அல்லது அவை எமக்கு எந்த உணர்வு பூர்வமான அறிவையும் தராமல் வெறும் சில தகவல்களை அதுவும் முஸ்லிம்களின் ஒற்றுமை இன்மை பற்றிய செய்திகளை மட்டும் எமக்கு போதிக்கும் பாடமாக இருக்கிறது
கிலாபத் இன்றி முஸ்லிம்கள் சறுகுகளை போன்று எந்த பலமும் இன்றி இருகின்றனர் முஸ்லிம்கள் தொகையில் அதிகம் , வளத்தில் அதிகம் , பணத்தில் அதிகம் ஆனால் ஒரு தலைமைத்துவம் இன்றி சறுகுகளை போன்று எந்த பலமும் இன்றி இருகின்றனர் எங்கும் அடிவாங்கும் வரலாறு எதிலும் பின்னடைவு
உலக மக்கள் தொகையில், 19.2 வீதம் முஸ்லிம்கள் எனவும், 17.4 வீதம் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் என்றும் கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைவராக உள்ள “போப்” பின் ஆளுகைக்குட்பட்ட வத்திகான் நகரத்தில் இருந்து வெளிவரும் லொசெர்வேடோர் ரொமானோ (L’Osservatore Romano) என்ற செய்திப் பத்திரிகை தெரிவிக்கின்றது.
இன்று உலகில் யூதர்கள் 140 லட்சம் பேர் இந்தோனேசியாவில் மட்டும் முஸ்லிம்களின் தொகை 19 கோடி. இதுதான் உலகிலேயே அதிக முஸ்லிம்கள் வசிக்கும் நாடு ,உலகில் முஸ்லிம்கள் தொகை 150 கோடிக்கு மேல்  உலக  அளவில் மக்கள் தொகையில் ஐவரில் ஒருவர் முஸ்லிமாக இருக்கிறான் முஸ்லிம் நாடுகள் காம்பியாவில் இருந்து இந்தோனேசியா வரை 55 நாடுகள் உள்ளன
சில ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த கணக்கெடுப்பின்படி, கடந்த 12 ஆண்டுகளில் 1200 புதிய பள்ளிவாசல்கள் அமெரிக்காவில் கட்டப்பட்டுள்ளன. அதாவது ஆண்டுக்கு, 100 புதிய பள்ளிகள் ஒரு வாரத்திற்கு இரண்டு பள்ளிவாசல்கள் அமெரிக்காவில் கட்டப்படுகின்றன. பிரபல அமெரிக்க செய்தி ஊடகமான சி.என்.என். (CNN) இந்த தகவலை தெரிவிப்பதாக ஒரு அறிக்கை குறிபிடுகின்றது
முஸ்லிம் நாடுகளில் உள்ள எண்ணை வளம் 74% வீதமாகும் இது முழு உலக எண்ணை உற்பதியின் வீதமாகும் இன்றைய நாளைய உலகை இயக்கும் பலம் என்று குறிபிடலாம் காஸ் எரிவாயு இது அமெரிக்க , ஐரோப்பா , சீனா போன்ற நாடுகளின் மொத்த வளத் தொகையுடன் ஒப்பிடும்போது 57% வீதமான காஸ் எரிவாயு முஸ்லிம் நாடுகளில் தான் அதிகம் இருக்கிறது தங்கம் விளையும் பூமியாக வும் 1 ட்ரில்லியன் தங்க சேமிப்பை கொண்ட நாடுகளாகவும் முஸ்லிம் நாடுகள்தான் இருக்கிறது இந்த 1 ட்ரில்லியன் தங்க சேமிப்பு அமெரிக்க , ஐரோப்பா நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்த நாடுகளை விடவும் முஸ்லிம் உம்மாஹ் விடம்தான் அதிகமான தங்கவளம் இருக்கிறது , இராணுவ துறையை எடுத்துகொண்டால் 47லட்சம் ஆயுத படை வீரர்கள் முஸ்லிம் நாடுகளில் இருகின்றார்கள் இது அமெரிக்க , ஐரோப்பா , இந்தியா போன்ற நாடுகளின் மொத்த ஆயுதப்படை வீரர்களை விடவும் மிகவும் அதிகமானது என்று ஒரு ஆவணம் குறிபிடுகின்றது இது சரியாக ஆராயப்படவேண்டியது எனிலும் ஒரு ஒப்பீட்டுக்கு இதை எடுத்துகொள்ள முடியும்.
ஆனால் எங்களிடம் இஸ்லாம் கடமையாக்கிய கிலாபத் இல்லை இதுதான் இன்றைய எமது பிரதான பலவீனம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு முன்னறிவிப்பு செய்தார்கள் ‘அல்லாஹ் விரும்பும் காலம் வரைக்கும் நுபுத்துவம் இருக்கும், அவன் நாடும் போது அதை நீக்கி விடுவான். பின் அல்லாஹ் விரும்பும் காலம் வரைக்கும் நுபுத்துவத்தின் வழிமுறையிலான கிலாபத் இருக்கும், அவன் நாடும் போது அதை நீக்கி விடுவான். அதற்கு பின் பரம்பரை ரீதியிலான ஆட்சிமுறை இருக்கும், அவன் நாடும் போது அதை நீக்கி விடுவான். அதற்கு பின் கொடுங்கோலர்கள் ஆட்சி அல்லாஹ் நாடும் வரை இருக்கும், அவன் நாடும் போது அதையும் நீக்கி விடுவான். பின் நுபுத்துவத்தின் வழிமுறையான கிலாபத் (இறையாட்சி) ஏற்படும் என்று கூறி விட்டு பின் அமைதியாக இருந்து விட்டார்கள்’ -ஹீதைபா (ரலி) – முஸ்னத் அஹ்மத், திர்மிதி எண் 5378-
கிலாபத் உதையமாகும் காலம் மிகவும் அண்மிப்பதை போல் உணர முடிகின்றது கிலாபத் மீண்டும் ஏற்படுத்த பட்ட வேண்டும் அது தான் முழு மனித சமுகதுக்குமான விடுதலையாக அமையும்.

நன்றி! நன்றி!! நன்றி!!!



அன்புடையீர்,




அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் நடந்து முடிந்த தமிழகம் & புதுவை சட்டமன்றத் தேர்தல்களில் SDPI

சமூக நலனை மட்டுமே முன்னிறுத்தி தனித்துப் போட்டியிட்டது தாங்கள் அறிந்ததே.





கட்சி ஆரம்பித்து ஒன்றரை வருடங்களே ஆன நிலையில் இந்தத் தேர்தலைச் சந்தித்த SDPI, கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.





அதுவும் தி.மு.க.வுக்கெதிரான கடுமையான எதிர்ப்பலையிலும் SDPIக்கு இந்த வாக்குகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.





எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறவில்லை என்று சிறிதும் நாங்கள் ஆதங்கப்படவில்லை. மாறாக, SDPIக்குக் கிடைத்த கணிசமான வாக்குகள் இன்னும் அதிகம் சமுதாயத்திற்காக உழைத்திட வேண்டும் என்ற எண்ணத்தையே எங்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. இன்னும் அது எங்களுக்கு ஊக்கத்தையும், ஆக்கத்தையும் தந்துள்ளது.





அல்லாஹ்வின் பேருதவியால் பாளையங்கோட்டை, கடையநல்லூர், பூம்புகார் ஆகிய தொகுதிகளில் SDPI மூன்றவாது இடத்தைக் கைப்பற்றியுள்ளது.





தொண்டாமுத்தூர், திருப்பூர்-தெற்கு, துறைமுகம் ஆகிய தொகுதிகளில் SDPI நான்காவது இடத்தைக் கைப்பற்றியுள்ளது.



SDPIக்காக வாக்களித்த வாக்காளர் பெருமக்களுக்கும், அதன் வெற்றிக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தித்தவர்களுக்கும், அயராது உழைத்த கர்ம வீரர்களுக்கும், அனைத்து வகையிலும் SDPIக்கு ஆதரவளித்து, உதவிகள் பல புரிந்த நல்லுள்ளங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.





ஜஸாக்கல்லாஹு ஃகைர்.





இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் காலங்களிலும் SDPIக்கு உங்கள் உதவிகளையும், ஒத்துழைப்பையும், துஆவையும் தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்.





மீண்டும் நன்றி.





வஸ்ஸலாம்.





இப்படிக்கு,





மாநிலத் தேர்தல் பணிக்குழு

SDPI

இரத்த சோகை

இரத்த சோகை என்பது இரத்த சிவப்பணுக்களில் உள்ள mm 3 ஹீமோகுளோபின் என்ற வேதிப்பொருள் குறைவாக இருத்தலே ஆகும். சாதாரணமாக ஆண்களுக்கு 5 மில்லியன்/mm3 சிவப்பணுக்களும் 15 கிராம் சதவிதம் ஹீமோகுளோபின் இருக்கும். பெண்களுக்கு 4.5 மில்லியன்/mm3 சிவப்பணுக்களும் 14.5 கிராம் சதவிதம் ஹீமோகுளோபின் இருக்கும்.




ஆனால் நம் நாட்டில் அனைவருக்கும் இப்படி உள்ளதா என்றால், அது முற்றிலும் தவறு. அப்படியானால் நாம் அனைவரும் இரத்த சோகை உள்ளவரா என்று கேள்வி நிச்சயம் எழும்.



நடைமுறையில் ஆண்,பெண் இருபாலருக்கும் சுமாராக 10.5 கிராம் முதல் 12 கிராம் வரை இருந்தாலே இவர்கள் நல்ல உடல் நலத்துடன் உள்ளனர் என்று நாம் எடுத்துக்கொள்ளலாம். நம் நாட்டில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்குத்தான் இரத்த சோகையினால் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது எனினும் ஆண்களும் இதற்கு விதிவிலக்கல்ல.



இரத்த சோகைக்கான காரணங்கள்:



1. இரும்புச்சத்து, புரதச்சத்து மற்றும் வைட்டமின்கள் குறைவான உணவுப்பொருட்களை உட்கொள்ளுதல்.



2. உண்ட உணவில் உள்ள சத்து சரியான விகிதத்தில் உறிஞ்சப்படாமையும், மேலும் பயன்படுத்தப்படாமையும் காரணமாக இருக்கலாம்.



3. கிருமிகள் தொற்று (கீரைப்பூச்சி, நாக்குப்பூச்சி, நாடாப்பூச்சி) சிறுநீரின் தொற்று ஆகியவையும் காரணமாக இருக்கலாம்.



4, இரத்தப்போக்கு.



அ) பல நாள்பட்ட இரத்தப்போக்கு

1. பெண்களுக்கு மாதந்தோறும் 30 லிருந்து 50 மில்லி என்ற அளவில் இல்லாமல் அதிக அளவில் மாதவிடாய்.



2. மூலத்தினால் மலக்குடலில் இரத்தக்கசிவு (மூலவியாதி).



3. உணவுக் குடலில் இரத்தக்கசிவு (பெப்டிக்அல்சர்,இரத்தக்கசிவு).



ஆ) திடீர் இரத்தப்போக்கு

1. பிரசவத்தின் போது (அ) கருக்கலைதலின் போது ஏற்படும் இரத்தப்போக்கு



2. விபத்தினால் ஏற்படும் இரத்தப்போக்கு



3. அடிக்கடி மகப்பேறு மற்றும் பிறப்பிற்கு பின் குறைவான கால இடைவெளியில்



இரத்த சோகை உடையவரின் தோற்றம்:



பார்ப்பதற்கு அழகாக மஞ்சள் பூத்த முகத்துடனோ, அழகான உப்பிய முகத்துடனோ, வறண்ட மெலிந்த செம்பட்டையான தலைமுடியோடோ, வற்றிய வறண்ட கன்னத்தோடும், குழி விழுந்த கண்களோடும், கருவளையத்தோடும், பட்டாம்பூச்சி போன்ற படர் முகத்தோடும், சோர்ந்தும், நாவில் பல வண்ணமும், பலவித கோலங்களும், வெளுத்தும், படபடக்கும் நெஞ்சத்தோடும் மூச்சிரைப்போடும், மெலிந்த கரத்தோடு, உப்பிய வயிறு, ஊதிய கால்கள், அழகற்ற நொடிந்து போகக்கூடிய வளைவுகள் மிகுந்த குழிவான நகத்தோடு காணப்படுவர்.



ஒரு சிலர் சாதாரணமாகவே நடந்து செல்லக்கூட முடியாத நிலையில் இருப்பதும். அதுவே அதிக அளவில் இரத்த சோகை காணப்பட்டால் மூச்சுத் திணறல் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. பசியின்மை, சோர்வு, வழக்கமாக செய்யக்கூடிய வேலைகளை செய்ய முடியாத நிலை ஆகியவை ஏற்படும்.



சிறு குழந்தை முதல் பெரியவர் வரை இரத்த சோகையை எப்படி கண்டறிவது என மேற்கூறிய அறிகுறிகளை விட்டுவிட்டு வேறெங்கும் நாம் தேடிச்செல்ல வேண்டிய அவசியமில்லை.



சிறு குழந்தை ஒடிவிளையாடாமல் சோர்ந்த முகத்தோடு சூம்பி அமர்ந்து மற்ற குழந்தைகள் விளையாடுவதை ஏக்கத்தோடு கவனித்து கொண்டிருக்கும். அதிகளவில் தூக்கம், உணவு உட்கொள்ளாமல் சூம்பிய கை கால்களுடன் வயிறு மட்டும் வீங்கிக் காணப்படும். உணவு உட்கொண்ட உடனே மலம் கழிக்க ஓடுகையில் கண்கூடாக பூச்சிகள் வயிற்றிலிருந்து வெளியேறுவதைக் காணலாம்.



அதே சற்று வளர்ந்த குழந்தை படிப்பில் நாட்டமின்மை, எந்த வகையான போட்டியாக இருந்தாலும் தனக்கும், அதற்கும் எந்த தொடர்பும் இல்லை என ஒதுங்கிவிடுதல், எளிதில் சோர்ந்து காணப்படுதல்.



வளரிளம் பருவத்தினராகிய பெண்கள் பூப்படைவதில் தாமதம் அல்லது மாதவிடாய்க் கோளாறு, அதுவே ஆண்களாக இருந்தால் துள்ளித்திரியும் இவ்வயதில் சோர்ந்து காணுதல் மேலும் படிப்பிலும், தான் செய்யும் வேலையிலும் ஆர்வமின்றி காணப்படுவர்.



இரத்த சோகை பாதிக்கப்பட்ட மகளிருக்கு பிறக்கும் குழந்தை சவலக்குழந்தையாக, எடைகுறைவாக(3 கிலோவுக்கும் குறைவாக) பலகீனமான குழந்தையாக பிறக்க வாய்ப்புள்ளது. போலிக் அமிலம் குறைவாக இருந்தால் இவர்களுக்கு நரம்பு மண்டல பாதிப்பு (மண்டை ஒடு அற்ற நீர்க்குடம் போன்ற முதுகெலும்பில் விண்ணம்) ஏற்பட வாய்ப்புள்ளது.



தாய்மார்களின் இறப்பு 20 விழுக்காடு நேரிடையாகவும், மேலும் 20 விழுக்காடு மறைமுகமாகவும் ஏற்படும் நிலை உள்ளது. இவர்களுக்கு பிறக்கும் குழுந்தைகளின் இறப்பு விகிதமும் கணிசமாக காணப்படுகிறது.



ஆண்களோ தன் உடல்நிலை பாதிப்பால் குடும்பத்தை சரிவர பராமரிக்க இயலாத நிலையும் இதனால் குடும்பத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழே படும் பல அவலங்களும் கண்கூடு.



இவற்றை தடுப்பது எப்படி? ஆதலால் 12வயது வரும்போதே நம் இளம் சிறார்கள் 12/12 என்ற விகிதத்தில் அதாவது 12வயது உடையவர் 12 கிராம் ஹீமோகுளோபின் இருப்பதற்கு நம்மால் ஆவன செய்ய வேண்டும். முதலில் நம் நாட்டில் உள்ள எளிமையான, உன்னதமான உணவை உட்கொண்டாலே போதும்.



அதற்கு சத்தான உணவு உட்கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.



என்ன உணவு?



இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் பி12



போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி. கால்சியம் சத்து நிறைந்த உணவுப்பொருட்கள்



தானிய வகைகள்: கேழ்வரகு, கொள்ளு, சாமை, பொட்டுக் கடலை, சோயா பீன்ஸ் மற்றும் பட்டாணி.



கீரை வகைகள்: முருங்கைக்கீரை, புளிச்சக்கீரை, தண்டுக்கீரை, முளைக்கீரை, சிறுகீரை, அரைக்கீரை, குப்பைக்கீரை, மற்றும் மணத்தக்காளி கீரை.



காய் வகைகள்: பாகற்காய், சுண்டைக்காய், கொத்தவரை, வாழைக்காய், பீன்ஸ்.



கனி வகைகள்: பேரீட்சை, உலர்ந்த திராட்சை, சீத்தாப்பழம், அன்னாசிப்பழம், மாதுளை, தர்பூசணி, வெல்லம்.



அசைவ உணவு: ஈரல், இறைச்சி, முட்டை, மீன், இறால்.



இரும்பு பாத்திரங்களில் சமைத்தல் என்பது மிக முக்கியமானதாகும். மேலும், மலம் கழிக்கும் முன்னும், பின்னும் கை கழுவுதல், எங்கும் செருப்பு அணிந்து செல்லுதல் என்பதும் முக்கியமானதாகும். மேற்கூறியவை அனைத்தும் இரத்த சோகை வராமல் தடுக்க நாம் பின்பற்ற வேண்டும்.இரத்த சோகையின் அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி ஹீமோகுளோபின் அளவு மற்றும் இரத்த சோகைக்கான காரணங்களை கண்டறிந்து இரத்த சோகையின் வீரியத்திற்கு தகுந்தாற்போல் மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.



மிதமான இரத்த சோகை இரும்புச் சத்து மாத்திரைகள், போலிக் அமிலம், கால்சியம் மற்றும் சத்தான உணவுஅதிகமான இரத்த சோகை ஊசி மூலம் இரும்புச் சத்து செலுத்துதல், இரும்புச் சத்து மாத்திரைகள், சத்தான உணவுமிக அதிகமான இரத்த சோகை தீவிர தொடர் கவனிப்பு பகுதியில் சேர்க்கப்பட்டு இரத்தம் ஏற்றுதல் அல்லது சமமான மாற்று சிகிச்சை மேற்கூறியபடி செயல்பட்டு இரத்த சோகையற்ற திடமான,வளமான, இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் இணைந்து பாடுபடுவோம்.
  

குஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா?

2002 ஆம் ஆண்டில் இஸ்லாமிய இனப் படுகொலையை நடத்தியவர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. இப்போது, அவர், இந்தியாவிலேயே நல்லாசி நடத்தி, சாதனை படைப்பதாக பார்ப்பன ஏடுகளும், ‘இந்துத்துவா’ சக்திகளும் புகழ் மாலை சூட்டத் தொடங்கியிருக்கின்றன. தமிழின உரிமை பேசும் நமது தோழர்களும்கூட இந்த பிரச்சார மாயை உண்மையென நம்பி மோடிகளின் புகழ் பாடத் தொடங்கியிருக்கிறார்கள். மோடி குஜராத்தில் நடத்தும் ஆட்சியின் கதை என்ன? அதையும் பார்ப்போம்.


 

பிரபல இந்தி நடிகையான ஷெர்லின் சாப்ரா என்பவர், குஜராத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது, நரேந்திர மோடியைத் தூக்கி வைத்துப் புகழ்ந்து, தான் அவரை சந்தித்ததே இல்லை என்றும், அவரிடம் உதவியாளராகப் பணியாற்றக் கூட தயாராக இருப்பதாகவும் பேசினார். அவர் பேசிய இடம் குஜராத் தொழிலதிபர்கள் நடத்திய நிகழ்ச்சி.



அடுத்ததாக ஊழல் எதிர்ப்பு இயக்கம் தொடங்கியுள்ள அன்னா அசாரேயிடமிருந்து, பாராட்டு மாலை வந்து விழுந்தது. மோடி - குஜராத் மாநிலத்தை வெகுவேகமாக வளர்ச்சிப் பாதையில் அழைத்துப் போகிறார் என்று. தமிழ்நாட்டில், குருமூர்த்திகளும் சோ இராமசாமிகளும் தீவிரப் பரப்புரை செய்து வருகிறார்கள். இந்தியாவின் பிரதமர் பதவி வேட்பாளருக்கு மோடியை முன்னிறுத்துவதே, இந்தப் பரப்புரையின் உள்நோக்கம். இந்த நாடகங்கள் நடந்து கொண்டிருக்கும்போது, மோடியின் உண்மை முகத்தை வெளிப்படுத்தும் மற்றொரு நிகழ்வும் நடந்தது. அதுதான் சஞ்சீவ் ராஜேந்திரபத் என்ற குஜராத்தின் முன்னாள் அய்.பி.எஸ். போலீஸ் அதிகாரி தாமாகவே முன்வந்து உச்சநீதிமன்றத்தில் மோடிக்கு எதிராக தாக்கல் செய்துள்ள வழக்கு. குஜராத் கலவரத்தைப் பற்ற வைத்தவரே மோடி தான் என்பது இவரது குற்றச்சாட்டு.



கலவரத்தின்போது உயர்மட்ட காவல்துறை அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டிய மோடி, ‘முஸ்லீம்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார் என்பதே வழக்கு. அந்த உயர்மட்ட அதிகாரிகள் கூட்டத்தில், இருந்தவர், இந்த அதிகாரி. கொடூரமான குஜராத் இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பித்து கரை சேர்ந்து விட்டதாக நம்பிக் கொண்டிருந்த மோடிக்கு, இது ஒரு பேரிடி. இந்த அதிகாரி, பிரமாண வாக்குமூலமாக வழக்கை தாக்கல் செய்துள்ளார். வாக்குமூலத்தில் தவறான தகவல் இடம் பெற்றிருந்தால் - அது கடுமையான குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.



சபர்மதியில், கரசேவகர்கள் பயணம் செய்த ரயில் பெட்டி தீ வைக்கப்பட்டதைத் தொடர்ந்து குஜராத் கலவர பூமியானது. அப்படி ஒரு கலவரம் இந்தியாவில் நடந்ததே இல்லை. மூன்றே நாட்களில் குஜராத்தின் 19 மாவட்டங்களில் 2500 முஸ்லீம்கள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டனர். மோடி அமைச்சரவையில் வருவாய்த் துறை அமைச்சராக இருந்தவர் ஹேரன் பாண்டி. இவர் ஆர்.எஸ்.எஸ். பின்னணியிலிருந்து வந்தவர்தான். அவராலேயே இதை சகித்துக் கொள்ள முடியவில்லை. இந்தப் படுகொலைகள் பற்றி சிறப்பு புலனாய்வுக்குழு உச்சநீதிமன்ற ஆணையின் கீழ் நியமிக்கப்பட்டு விசாரித்தது. ஆனால், ஆட்சி நிர்வாகம் மோடியிடம் இருந்ததால் உயர் அதிகாரிகள் உண்மையை வெளிப்படையாகக் கூறத் தயாராக இல்லை. சிறப்புப் புலனாய்வுக் குழுவும் நேர்மையாக செயல்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்களை சிறப்பு புலனாய்வுக் குழுவே பதிவு செய்ய மறுத்தது. இந்த நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் பி.பி.சவந்த் மற்றும் ஹோஸ்பர்ட் சுரேஷ் ஆகியோரைக் கொண்ட ‘குடிமக்கள் பேராயம்’ என்ற சுயேச்சையான விசாரணை மையம் பல உண்மைகளைப் பதிவு செய்து சிறப்பு விசாரணைக் குழுவிடம் அளித்தது.



இந்த நீதிபதிகள் முன் தோன்றி மோடிக்கு எதிராக சாட்சியளித்தவர்களில் ஒருவர் வருவாய்த் துறை அமைச்சர் ஹிரேன் பாண்டியா, பிப். 27 ஆம் தேதி மோடி தனது வீட்டில் நடத்திய கூட்டத்தில் தானும் கலந்து கொண்டதாகவும், அப்போது இந்துக்கள் நடத்தும் தாக்குதல் நடவடிக்கைகளை காவல்துறை தடுக்க வேண்டாம் என்று - மோடி உத்தரவிட்டதாகவும் கூறினார். பின்னர் மர்மமான முறையில் அவர் கொலை செய்யப்பட்டார். மோடிக்கு ஆதரவாக உண்மைகளை மறைத்த காவல்துறை அதிகாரிகளான பி.சி. பாண்டே, பி.கே. மிஸ்ரா, அசோக் நாராயணன் போன்ற பார்ப்பன அதிகாரிகளுக்கு அவர்கள் பதவி ஓய்வுக்குப் பிறகு, வேறு பதவிகளை பரிசாக வழங்கினார் மோடி. இப்போது மனுதாக்கல் செய்துள்ள காவல்துறை அதிகாரி சஞ்சீவ் ராஜேந்திரபத், மோடி நடத்திய கூட்டத்தில் பங்கேற்கவே இல்லை என்று அரசு தரப்பில் மறுக்கப்பட்டது.



அப்போது உளவுத் துறையில் துணை ஆணையாளர் என்ற நிலையில் தான் அவர் இருந்தார். எனவே உயர்அதிகாரிகள் மட்டும் பங்கேற்ற கூட்டத்துக்கு அவர் எப்படி வந்திருப்பார் என்பது, அரசு தரப்பு எழுப்பும் மறுப்பு. அப்போது உளவுத் துறையின் தலைமை ஆணையர் ஜி.சி. ராஜ்கர் விடுப்பில் இருந்தார். எனவே தன் சார்பாக இராஜேந்திர பத்தை, கலந்து கொள்ளுமாறு அவர் பணித்ததால், பத், அந்தக் கூட்டத்தில் பங்கேற்றார். மோடியின் கட்டுப்பாட்டில் இருந்த சிறப்புப் புலனாய்வுக் குழு இராஜேந்திர பத் அக்கூட்டத்தில் பங்கேற்கவே இல்லை என்று தடாலடியாகக் கூறிவிட்ட பிறகு, நீதிமன்றமும் அதை ஏற்றுக் கொண்ட பிறகு, இப்போது நேரடியாகவே இராஜேந்திர பத் மோடிக்கு எதிரான வலிமையான சான்றுகளுடன் நீதிமன்றம் வந்து விட்டார். இந்த அதிகாரியின் வாகன ஓட்டுனரும், மோடி கூட்டிய கூட்டத்தில், அவர் பங்கேற்றதை உறுதிப்படுத்தியிருக்கிறார். பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதிமன்றத்தில் போராடி வரும், மனித உரிமைப் போராளியும், பெண் பத்திரிகையாளருமான தீஸ்த்தா செட்டால் வத், மோடிக்கு எதிராக நேரடியான குற்றச்சாட்டு, இப்போது தான் முதன்முதலாக வந்துள்ளது. உண்மைகள் வெளியே வரத் தொடங்கியுள்ளன என்று கூறியுள்ளார்.



மோடி நிர்வாகத்தில் பணிபுரிந்த சிறீகுமார், ராகுல் சர்மா போன்ற நேர்மையான அதிகாரிகள், கலவரங்கள் பற்றி சிறப்பு புலனாய்வில் பதிவு செய்த உண்மையான தகவல்களும் நிராகரிக்கப்பட்டு விட்டன. உண்மையைப் பேசியதற்காக, மோடி ஆட்சியில், இந்த அதிகாரிகள் பழிவாங்கப்பட்டனர். இந்த சூழ்நிலையில் தனது குற்றச்சாட்டுகளுக்கு நீதி கிடைக்குமா என்ற சந்தேகம் ராஜேந்திர தத்துக்கு ஏற்படுவது நியாயம் தானே! அந்த தயக்கமே, அவரை காலம் கடந்து, நீதிமன்றம் வரக் காரணமாக இருந்துள்ளது. இப்போது உச்சநீதி மன்றம் சிறப்பு புலனாய்வுக் குழு அறிக்கையை மட்டுமே ஏற்க வேண்டும் என்ற அவசியமில்லை; சுதந்திரமான அமைப்புகள் நடத்திய விசாரணை களையும் பரிசீலிக்கலாம் என்று அதிரடியாக அறிவித்துள்ளது.



மோடி - குஜராத் கலவரத்துக்குப் பிறகு இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றுவிட்டார். அவர் நாட்டை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு சென்று, வளர்ச்சித் திட்டங்களில் கவனம் செலுத்துவதே அவரது வெற்றிக்கான காரணம் என்ற பிரச்சாரம் பார்ப்பன வட்டாரங்களில் தீவிரமாக முடுக்கி விடப்படுகிறது!



பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலுக்கு தாராளமாகக் கதவு திறந்து விட்டுள்ள மோடியை அவர்கள் நடத்தும் ஊடகங்கள் புகழ் பாடுவதில் வியப்பு எதும் இல்லை.



• ‘என்.சி.ஏ.பி.ஆர்.’ என்ற பொருளாதார ஆய்வு மய்யம் அண்மையில் குஜராத்தில் சிறுபான்மையினர் நிலை பற்றிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டு அறிக்கையாக வெளியிட்டுள்ளது. ஏழ்மை, வறுமை, கல்வியின்மை, பாதுகாப்பற்ற நிலையில் - இந்தியாவிலேயே ஒரிசா, பீகார் மாநிலங்களைப்போல் மிக அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பவர்கள் குஜராத்தில் வாழும் முஸ்லீம்கள் என்று அந்த ஆய்வு கூறுகிறது.



• குஜராத்தில் முஸ்லீம்களின் வறுமையின் அளவு உயர்சாதி இந்துக்களைவிட 50 சதவீதம் அதிகம். வங்கிக் கணக்கு வைத்துள்ள முஸ்லீம்கள் எண்ணிக்கை 12 சதவீதம் மட்டுமே. வங்கிக் கடன் வாங்கியவர்கள் 2.6 சதவீதம்.



• தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் முஸ்லீம்கள் புறக்கணிப்பு பெருமளவில் உள்ளது.



• 2002 கலவரத்தால் பாதிக்கப்பட்ட 23000 முஸ்லீம்கள் இப்போதும் தற்காலிக முகாம்களிலேயே அகதிகளாக வாழ்கிறார்கள். நிரந்தர முகாம்கள்கூட அமைக்கப்படவில்லை. பல லட்சம் மதிப்புள்ள வீடுகளை இழந்தவர்களுக்கு அரசு தரும் இழப்பு ஈடு ரூ.10,000 அல்லது ரூ.15,000 மட்டுமே.



• கிராம சாலைகள்; வீடுகளுக்கு மின் இணைப்பு; குடிநீர் இணைப்பு போன்ற அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டிருந்தாலும், மனித சமூக மேம்பாடு வளர்ச்சி மிகவும் குறைவாகவே உள்ளது. காரணம், ஊழல்கள் பெருகி நிற்பது தான்.



• கடந்த 2 ஆண்டுகளில் மூன்று பெரும் ஊழல்கள் நடந்துள்ளன. 17000 கோடி செலவில் குளங்களை வெட்டும் திட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத் திட்டத்தின் பெயர் ‘சுஜாலம் சஃபாலம்’; இதில் வேலை செய்யும் தொழிலாளருக்கு, உள்நாட்டு சந்தையில் கோதுமைக்கான விலை நிர்ணய அடிப்படையில் கூலி வழங்கப்பட வேண்டும். தொழிலாளர்களுக்கான ஊதியத்தை மொத்தமாக முன் கூட்டியே ஒப்பந்தக்காரர்களுக்கு அரசு வழங்கி விட்டது. ஆனால் தொழிலாளர்களுக்கு அரிசி விலைக்கான கூலியே தரப்படுகிறது. பல குளங்கள் காகிதத்தில் மட்டுமே வெட்டப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்காக வழங்கப்பட வேண்டிய அரிசி - பெருமளவில் மகாராஷ்டிராவுக்கு கடத்தப்படுகிறது.



• 2009 இல் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்துக்காக ரூ.260 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், எந்த வேலையும் கிடைக்கவில்லை. வேலை நடப்பதாக கணக்கு எழுதப்பட்டு, பணம் ஒப்பந்தக்காரர்களால் சுருட்டப்பட்டு விட்டது.



• 2010 இல் உருவாக்கப்பட்ட மீன் வளர்ப்புத் திட்ட ஊழல்களால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.600 கோடி. இதற்கான டெண்டர் விடப்பட்டதில் ஊழல்கள் நடந்தன.



• பெருமளவில் அன்னிய தொழில் முதலீடுகளுக்கு குஜராத்தில் மோடி கதவு திறந்து விட்டுள்ளார். அன்னிய முதலீட்டை எதிர்ப்பதாக கட்டுரைகள் எழுதும் பார்ப்பன குருமூர்த்திகள், மோடி அதே வேலையை செய்யும்போது தொழில் வளர்ச்சி என்று பாராட்டுகிறார்கள். குஜராத்தில் 2003 இல் மோடி அன்னிய முதலீடுகளை வரவேற்கும் திட்டத்தைத் தொடங்கியபோது, ரூ.69 கோடி முதலீடு வந்தது. 2005 இல் ஒரு லட்சம் கோடி; 2007 இல் 4 லட்சம் கோடி; 2009 இல் 12 லட்சம் கோடி; 2011 இல் 21 இலட்சம் கோடியாக பன்னாட்டு மூலதனம் அதிகரித்து நிற்கிறது.



• இந்த பன்னாட்டு பெரும் தொழில் நிறுவனங்களுக்கு அவர்கள் விரும்புகிற இடங்களில் நிலம் தாராளமாக ஒதுக்கப்படுகிறது. 5 ஆண்டுகளுக்கு எந்த வரி விதிப்பும் கிடையாது. தொழிலாளர் நல சட்டங்களிலிருந்தும் விதி விலக்கு. விவசாய நிலங்கள், பழங்குடியினருக்கானவனப் பகுதிகள், பெரும் தொழில் நிறுவனங்களின் வசமாகி விட்டன. சுற்றுச் சூழல் பாதிப்பு காரணமாக நீதிமன்றமே தலையிட்டு, பல தொழிற்சாலை களை மூட உத்தரவிட்டுள்ளது. உடனே - மோடி ஆட்சி, அவர்களுக்கு வேறு இடங்களை ஒதுக்கித் தருகிறது. இந்த பெரும் தொழில் நிறுவனங்கள் வரத் தொடங்கிய பிறகு, மக்களின் சுகாதாரம், பொருளாதாரம், கல்விச் சேவைகள் மிகவும் குறைந்துவிட்டன. பெண்கள், குழந்தைகள், மைனாரிட்டியினர் வாழ்நிலை மிகவும் பின்னுக்குப் போய்விட்டன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.



• பெரும் தொழில் நிறுவனங்கள் வந்த பிறகும் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கவில்லை. படித்த வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சமூக சேவையாளர் தீஸ்கா செடல்வாட் ஆய்வு வழியாக அம்பலப்படுத்தியுள்ளார்.



• குஜராத்தில் மகுவா பகுதியில் விவசாயிகள் மோடி அரசுக்கு எதிராக கடும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். விவசாயத்தை நம்பி வாழும் இப்பகுதியில் பாசன வசதிக்காக அணைகட்டுவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தை மோடி பூமிக்கடியில் உள்ள சுண்ணாம்புக் கல்லைத் தோண்டி எடுத்து சோப்பு தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க அனுமதித்து விட்டதால், அப்பகுதி மக்கள் உள்ளூர் பா.ஜ.க. ஆதரவுடன், மோடியை எதிர்த்து போராடி வருகின்றனர். குண்டர்களை வைத்து போராடும் மக்களை ஒடுக்குகிறது மோடி ஆட்சி. 1400 கோடி செலவில் 214 ஹெக்டர் நிலப்பரப்பில் உருவாகும் இந்தத் தொழிற்சாலைக்காக, 5000 குடும்பங்களைச் சேர்ந்த 30,000 மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்படுகின்றனர்.



• சவுராஷ்டிரா பகுதியில் வாங்கனர் மாவட்டத்தில் ‘ஒர்பட்’ நிறுவனத்துக்கான 40 ஹெக்டர் நிலத்தை ஒரு சதுர மீட்டர் ரூ.40 என்ற விலையில் வழங்கினார் மோடி. அந்தப் பகுதி மக்களின் பாசனத்துக்கும், குடிநீருக்கும் ஆதரமான இந்த ஒரே இடத்தை பெரும் தொழில் நிறுவனத்துக்கு ‘தாரை’ வார்த்ததை எதிர்த்து உள்ளூர் மக்கள் கடந்த மார்ச் மாதம் உயர்நீதிமன்றம் போய் தடை வாங்கியுள்ளனர்.



• உதோராவில் உள்ள ‘கலாச்சாரம் மற்றும் மேம்பாடு ஆய்வு நிறுவனம்’, அரசு ஆவணங்களைக் கொண்டு நடத்திய ஆய்வில், 1947-லிருந்து 2004 ஆம் ஆண்டு வரை குஜராத் மக்கள் தொகையில் வளர்ச்சித் திட்டங்களினால் 5 சதவீத மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே காலகட்டத்தில் 33 லட்சம் ஹெக்டர் நிலம் பெரும் தொழில் நிறுவனங்களுக்காக கையகப்படுத்தப்பட்டிருக்கிறது என்று கூறுகிறது.



• “சர்வாதிகாரமும் வளர்ச்சியும் கைகோர்த்துக் கொண்டு வரும்போது மக்களுக்கு அத்தகைய ஒரு வளர்ச்சியே தேவை இல்லை. ஜனநாயகம் வாழும் ஒரு சமூகத்தில் வளர்ச்சி சற்று குறைவாக இருப்பினும் அதுவே நன்மை பயக்கும்” என்கிறார் மதச் சார்பற்ற எழுத்தாளரும், சிந்தனையாளருமான ராம் புனியானி.



• மோடிக்கு எதிராக அங்கே எவரும் பேச முடியாது. சட்டமன்றங்கள் அவர் புகழ் பாடும் மன்றங்களாகவே செயல்படுகின்றன.



• தலித் சமூகத்தின் மீதான அடக்குமுறை தலைவிரித்தாடுகிறது. தலித் மாணவர்களையும் பிறசாதி குழந்தைகளையும் ஒன்றாக அமர வைத்து ஒற்றுமை பற்றி பேசியதற்காக ஒரு ஆசிரியை உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டார். ‘இந்துத்துவாவின் பரிசோதனைக் களம்’ என்று அறிவிக்கப்பட்ட ஒரு மாநிலத்தில் அச்சத்தின் பிடியில் மைனாரிட்டிகளும் தலித் மக்களும் வாடும் நிலையில், பார்ப்பனர்களும், பட்டேல்களும் பன்னாட்டு நிறுவனங்களுடன் சுரண்டி கொழுத்து வரும்போது வளர்ச்சிப் பாதையில் நடைபோடுகிறது என்று பேசுவது என்ன நியாயம்? கருவுற்ற தாய்மார்களின் இரத்தத்தில் இருக்க வேண்டிய சிகப்பணுக்களின் எண்ணிக்கை குஜராத் மாநிலப் பெண்களிடம் தான் மிகக் குறைவாக இருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு முறையான இட ஒதுக்கீடோ, இலவசக் கல்வியோ, அங்கே இருக்கிறதா? என்ற கேள்விக்கு, இவர்களிடமிருந்து பதில் இல்லை. இதுதான் மோடி ஆட்சியின் சாதனைகளா?