Friday 20 May 2011

நன்றி! நன்றி!! நன்றி!!!



அன்புடையீர்,




அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் நடந்து முடிந்த தமிழகம் & புதுவை சட்டமன்றத் தேர்தல்களில் SDPI

சமூக நலனை மட்டுமே முன்னிறுத்தி தனித்துப் போட்டியிட்டது தாங்கள் அறிந்ததே.





கட்சி ஆரம்பித்து ஒன்றரை வருடங்களே ஆன நிலையில் இந்தத் தேர்தலைச் சந்தித்த SDPI, கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.





அதுவும் தி.மு.க.வுக்கெதிரான கடுமையான எதிர்ப்பலையிலும் SDPIக்கு இந்த வாக்குகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.





எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறவில்லை என்று சிறிதும் நாங்கள் ஆதங்கப்படவில்லை. மாறாக, SDPIக்குக் கிடைத்த கணிசமான வாக்குகள் இன்னும் அதிகம் சமுதாயத்திற்காக உழைத்திட வேண்டும் என்ற எண்ணத்தையே எங்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. இன்னும் அது எங்களுக்கு ஊக்கத்தையும், ஆக்கத்தையும் தந்துள்ளது.





அல்லாஹ்வின் பேருதவியால் பாளையங்கோட்டை, கடையநல்லூர், பூம்புகார் ஆகிய தொகுதிகளில் SDPI மூன்றவாது இடத்தைக் கைப்பற்றியுள்ளது.





தொண்டாமுத்தூர், திருப்பூர்-தெற்கு, துறைமுகம் ஆகிய தொகுதிகளில் SDPI நான்காவது இடத்தைக் கைப்பற்றியுள்ளது.



SDPIக்காக வாக்களித்த வாக்காளர் பெருமக்களுக்கும், அதன் வெற்றிக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தித்தவர்களுக்கும், அயராது உழைத்த கர்ம வீரர்களுக்கும், அனைத்து வகையிலும் SDPIக்கு ஆதரவளித்து, உதவிகள் பல புரிந்த நல்லுள்ளங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.





ஜஸாக்கல்லாஹு ஃகைர்.





இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் காலங்களிலும் SDPIக்கு உங்கள் உதவிகளையும், ஒத்துழைப்பையும், துஆவையும் தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்.





மீண்டும் நன்றி.





வஸ்ஸலாம்.





இப்படிக்கு,





மாநிலத் தேர்தல் பணிக்குழு

SDPI

No comments:

Post a Comment