Thursday 23 June 2011

டி.சி.எஸ். நிறுவனத்தில் 31,500 பேர் வெளியேறினர்

சாஃப்ட்வேர் ஏற்றுமதியில் முதலிடத்தில் உள்ள டி.சி.எஸ். நிறுவனத்தில், சென்ற 2010 11 ஆம் நிதி ஆண்டில் நிகர அடிப்படையில் 38,185 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகி உள்ளது.

அந்த நிதி ஆண்டில், இந்நிறுவனம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலுமாக மொத்தம் 69,685 பொறியியல் வல்லுனர்களை தேர்ந்தெடுத்துள்ளது. அதேசமயம், 31,500 பேர் வேலையை விட்டு விலகியதால், நிகர வேலைவாய்ப்பு 38,185 ஆக உள்ளது.

மக்கள் மீது நேட்டோ தாக்குதல்: ஐ.நா தனி விசாரணை கோருகிறார் கடாபி

Muthupet PFI -- 23/June/2011
லிபியாவில் கர்னல் மோமர் கடாபி ராணுவத்தை ஒடுக்க நேட்டோ படைகள் முகாமிட்டு உள்ளன. இந்த பன்னாட்டு படைகள் தாக்குதலில் பொது மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகுகிறார்கள்.

தலைநகர் திரிபோலியில் நேட்டோ சமீபத்தில் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பெரும் சேதம் அடைந்ததுடன் உயிர் சேதமும் ஏற்பட்டது.

2012ம் ஆண்டு அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்படும்: ஒபாமா

Muthupet PFI -- 23/June/2011
ஆப்கானிஸ்தானில் இருந்து 2012ம் ஆண்டு கோடைகாலத்திற்கு முன்பாக அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்படும் என்று அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.


வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பொ‌றி‌யி‌ய‌ல் ரேங்க் பட்டியல் நாளை வெளி‌யீடு

பொ‌றி‌யிய‌ல் படி‌ப்பு‌க்கான ரே‌ங்‌க் ப‌ட்டி‌யலை அ‌ண்ணா ப‌ல்கலை‌க்கழக‌ம் நாளை வெ‌ளி‌யிட உ‌ள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 494 பொ‌றி‌யிய‌ல் கல்லூரிக‌ளி‌ல் பி.இ., பி.டெக். படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் சேருவதற்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்கு வருடந்தோறும் அண்ணா பல்கலைக்கழகம் கல‌ந்தா‌ய்வு நடத்தி வருகிறது.

3 மாதங்களுக்குள் அரசு கேபிள் டி.வி.: முதல்வர் உறுதி

சென்னை, ஜூன் 22: தமிழகத்தில் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை மூன்று மாதங்களுக்குள் கொண்டு வர முதல்வர் ஜெயலலிதா உறுதி அளித்துள்ளதாகத் தெரிகிறது.


உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாகவே கேபிள் டி.வி. நிறுவனம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



பென்டகன் புதிய தலைவர் லியோன் பனெட்டா

அமெரிக்க இராணுவத்தின் தலைமையகமான பென்டகனின் புதிய தலைவராக லியோன் பனெட்டா நியமிக்கப்பட்டுள்ளார்.


அமெரிக்க உளவு ஏஜென்சியான சிஐஏ-வின் தலைவர் பதவியை வகித்த இவரது நியமனத்திற்கு, அமெரிக்க செனட் சபை முறைப்படி ஒப்புதல் அளித்துள்ளது.

3 வருட கியாரண்டியுடன் 9.12 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப்-அரசு திட்டம்

சென்னை:  3 வருட உத்தரவாதத்துடன், தரமான லேப்டாப்களை 9.12 லட்சம் மாணவர்களுக்கு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு எல்காட் நிர்வாக இயக்குநர் அதுல் ஆனந்த் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.


சாய்பாபா ஆசிரமத்தில் பல கோடி கொள்ளை...சென்னை தொழிலதிபர் மற்றும் ரத்னாகருக்கு சம்மன்!!

புட்டபர்த்தி: சாய்பாபாவின் தனி அறையிலிருந்த பல கோடி ரூபாய் பணம் மற்றும் விலை உயர்ந்த நகைகள் ஒரே நேரத்தில் பல்வேறு நபர்களால் கடத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதற்கு பாபா அறக்கட்டளை உறுப்பினர்களே துணைபோயுள்ளனர்.



பாபாவின் பக்தர்களை இது பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் ஆசிரமம் அமைத்து ஆன்மீக பணியில் ஈடுபட்டு வந்த சத்யசாய்பாபா கடந்த மாதம் மரணம் அடைந்தார். அவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சமயத்தில் சாய்பாபா ஆசிரமத்தில் இருந்து லாரி மூலம் விலை உயர்ந்த பரிசுபொருட்கள் மற்றும் பணம் கடத்திச் செல்லப்பட்டதாக பக்தர்கள் புகார் கூறினார்கள். ஆனால் இதை போலீசார் கண்டுகொள்ளவில்லை.

லோக்பால் மசோதா தொடர்பாக ஜூலை 3ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்

டெல்லி: லோக்பால் மசோதா குறித்து ஜூலை 3ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.


அரசு மற்றும் ஊழலுக்கு எதிராக போராடி வரும் சமூக ஆர்வலர்கள் தயாரித்துள்ள வரைவு மசோதா குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

புதிய தலைமைச் செயலக கட்டுமானம் குறித்து நீதி விசாரணை-அரசு உத்தரவு

சென்னை: புதிய தலைமைச் செயலக கட்டுமானப் பணியில் நடந்துள்ளதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து நீதி விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


இதுதொடர்பான விசாரணை அறிக்கை 3 மாதங்களில் தாக்கல் செய்யப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

லிபியாவின் 9 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை

Muthupet PFI -- 23/June/2011
லிபிய அதிபர் மோமர் கடாபியின் 9 நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை
விதித்துள்ளது.

லிபிய அதிபர் கடாபியை பதவியில் இருந்து நீக்க அமெரிக்கா தீவிரமாக முயன்று வருகிறது. இதற்காக அமெரிக்கா தலைமையில் பன்னாட்டுப் படைகள் லிபியா மீது விமானங்கள் மூலம் குண்டு வீசி வருகின்றன. ஆனால் கடாபி பதவி விலக மறுத்து அமெரிக்காவின் தாக்குதலை சமாளித்து வருகிறார்.

மூன்றே மாதங்களில் மீண்டும் உயிர்தெழுந்த ஜப்பான்

கடந்த மார்ச் 11ம் திகதி ஜப்பானை புரட்டிப் போட்டது சுனாமி. நூறாண்டுகளில் இல்லாத பாதிப்பாக இது அமைந்தது. காணாமல் போனவர்களையும் கணக்கில் சேர்த்தால் 23 ஆயிரம் பேர் பலி.


1.25 லட்சம் கட்டிடங்கள் நாசம். ரூ.13.5 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு. அதிகபட்சமாக 128 அடி உயரத்துக்கு ஆழிப்பேரலை எழுந்து ஊருக்குள் 10 கி.மீ. தூரம் வரை பாய்ந்தது.