Sunday 2 October 2011

துபாய் வாழ் முத்துப்பேட்டை நண்பர்கள் பேரூராட்சி தேர்தலில் SDPI க்கு ஆதரவு!!





துபாய் : துபாய் ஹோர் அல் அன்ஜ் முத்துப்பேட்டை நண்பர்கள் ரூமில் நடை பெற்ற கூட்டத்தில் நமதூர் ஊராட்சி மன்ற தேர்தலில் யாருக்கு நமது வாக்கு என்ற தலைப்பில் விவாதிக்க பட்டது. 

அதில் தேர்தலில் பங்குபெறும் அணைத்து சகோதர்களும் நல்ல நிய்யத்தோடு செயல் படுகிரவர்கல்தான் என்றும் அதே சமயத்தில் கடந்த சில ஆண்டுகளாக சமுதாயத்திற்காக சிறப்பாக செயல் படுபவர் யார் என்று அனைவரிடமும் தனி தனியாக கேட்டு, ஒருமனதாக முடிவெடுக்கபட்டது. 

அதில் மச்சான் என்று அழைக்கப்படும் எஸ் டி பி ஐயின் வேட்பாளர் A.அபுபக்கர் சித்திக் அவர்கள் தான் நமதூருக்கு சரியான வேட்பாளர் என்று முத்துப்பேட்டை நண்பர்கள் அனைவரும் சேர்ந்து முடிவெடுத்துள்ளனர்.

ஆகையால் முத்துப்பேட்டை வாசிகள் அனைவரும் நமது வேட்பாளர் சித்திக் அவர்களுக்கு வாக்களிக்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம். இங்கு அணைத்து ரூமிற்கும் சென்று எடுத்து சொல்வதற்காக ஒரு கமிட்டியும் தேர்ந்தெடுத்துள்ளனர். இப்படிக்கு கடல் கடந்து வாழும் முத்துப்பேட்டை நலன் விரும்பிகள்.


source from muthupettai express

1 comment: