Sunday 26 June 2011

பிரான்சில் இ.கோலி பக்டீரியா பரவியதில் பிரிட்டன் விதை நிறுவனத்திற்கு தொடர்பு

இ.கோலி என்ற பயங்கர பக்டீரியா தற்போது ஐரோப்பிய நாடுகளில் கடுமையாக பரவி வருகிறது. இந்த நுண் உயிரி மனித உடலுக்கு அபாயத்தை விளைவிப்பதாகவும் உள்ளது.


இந்த இ.கோலி பக்டீரியா முதலில் ஜேர்மனியில் பரவி அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. குறிப்பிட்ட வெள்ளரிக்காய் மூலம் இ.கோலி பக்டீரியா பரவியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வெள்ளரிக்காய் மற்றும் தக்காளி ஆகியவற்றை சில நாட்களுக்கு தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் அகதிகளின் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரிப்பு

முந்தைய ஆண்டை காட்டிலும் 2011ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் இருந்து புகலிடம் தேடி வேறு இடம் செல்லும் அகதிகள் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்து உள்ளது.


இடம் பெயர்ந்த மக்களுக்கு வழிகாட்டும் அமைப்பான சர்வதேச அகதிகள் அமைப்பு இதனை தெரிவித்து உள்ளது. 2011ஆம் ஆண்டில் முதல் 5 மாதங்களில் 91 ஆயிரம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு அகதிகளாக வெளியேறி உள்ளனர்.

இஸ்லாத்தைக் குறித்து பேஸ்புக்கில் அவதூறு கருத்துக்களை வெளியிட்ட இஸ்ரேல் பிரதமரின் மகன்

டெல் அவிவ்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நதன்யஹூவின் 19 வயது மகனும், ராணுவ செய்தித் தொடர்பாளருமான யாயிர் நதன்யஹூ, முஸ்லீம்கள் குறித்தும், இஸ்லாம் குறித்தும் அவதூறான கருத்துக்களை பேஸ்புக்கில் வெளியிட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டீசல்,சமையல் எரிவாயு,மண்ணெண்ணெய் விலை உயர்வை உடனடியாக வாபஸ் பெறவேண்டும்-எஸ்.டி.பி.ஐ

புதுடெல்லி:டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையை உயர்த்திய மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெறவேண்டுமென சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா(எஸ்.டி.பி.ஐ) கோரிக்கை விடுத்துள்ளது.



வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவை அரசே ஏற்க குரேஷி எதிர்ப்பு

லண்டன் : தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான செலவை அரசே ஏற்றுக்கொள்ளுவதை நடைமுறைப்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி தெரிவித்தார்.


லண்டனில் இந்திய பத்திரிகையாளர்கள் சங்கம் சனிக்கிழமை ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில் குரேஷி இதைத் தெரிவித்தார்.

பாரம்பரிய தலத்தை பாதிக்கும் காற்றாலை திட்டத்தை பிரான்ஸ் நிறுத்த வேண்டும்: ஐ.நா உத்தரவு

உலக பாரம்பரிய தலத்திற்கான பட்டியலில் உள்ள மான்ட் செயின்ட் மைக்கேல் ஆலயம் நார்மாண்டி கடல் பகுதியின் பாறை தீவில் அமைந்துள்ளது.


ஐ.நா.வின் யுனஸ்கோ கலாச்சார   அமைப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்த ஆலயத்தின் தர நிலையை பாதிக்கும் வகையில் திட்டங்கள் மேற்கொள்ளக்கூடாது என ஐ.நா அமைப்பு அறிவுறுத்தி உள்ளது.

வெளியூர்களில் மின்வெட்டு நேரம் 3 மணியிலிருந்து 1.30 மணி நேரமாகக் குறைப்பு

சென்னை: சென்னை தவிர வெளியூர்களில் மின்வெட்டு நேரத்தை 1.30 மணி நேரமாகக் குறைத்துள்ளது தமிழக அரசு.


கடந்த ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் கடுமையான மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது. சில பகுதிகளில் அறிவிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதனால் தொழில்கள், விவசாய பணிகள் கடும் பாதிப்பு அடைந்தது.

அடுத்த வாரம் அமைச்சரவை மாற்றம்- தயாநிதி மாறன் நீக்கப்படுகிறார்?

டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவை மாற்றத்திற்குத் தயாராகி விட்டார். அடுத்த வாரம் அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என்று தெரிகிறது. அமைச்சரவை மாற்றத்தின்போது ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் கழற்றி விடப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வருடம் முழுவதும் வாக்காளர் பெயர் சேர்க்க தேர்தல் ஆணையம் முடிவு!

இனி வருடம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் விடுபட்ட பெயர்களை சேர்க்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. இதற்காக வாக்குச் சாவடியில் புதிதாக அலுவலர்களை நியமிக்கப்பட உள்ளனர்.

கடந்த காலங்களில் தேர்தல் சமயங்களில் மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், பெயர் மற்றும் முகவரி மாற்றம், தொகுதிக்குள் இடமாற்றம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.இதனால் பணியாளர்களுக்கு தேவையில்லாத பணிச்சுமை ஏற்பட்டது

உலகின் முதன் முறையாக 7 வயது சிறுமிக்கு மூன்று செயற்கை இதயங்கள்

Muthupet PFI -- JUNE 26
உலக நாடுகளில் பெரும் மருத்துவ சாதனையை எட்டிய நோயாளியாக 7 வயது சிறுமி ஹன்னா அட்னன் உள்ளாள்.


இவரது உயிரை காப்பாற்றுவதற்கு மூன்று முறை செயற்கை இதயங்கள் பொருத்தப்பட்டு உள்ளன. ஹன்னா எடின்பர்க் பகுதியைச் சேர்ந்தவர்.