Saturday 15 October 2011

தீவிரவாதம் என்ற வார்த்தைக்கு புதிய இலக்கணம் வகுக்க மத்திய அரசு முடிவு


புதுடெல்லி:சட்டவிரோத செயல்களின் சட்ட வரம்பில் உள்ள தீவிரவாதம் என்ற வார்த்தைக்கு மத்திய அரசு புதிய இலக்கணம் வகுக்க முடிவு செய்துள்ளது. ஒரு நபர் மட்டும் திட்டம் தீட்டி செய்யும் செயல்களையும் தீவிரவாதம் என்ற வார்த்தையில் உட்படுத்தி புதிய இலக்கணம் வகுக்கப்படுகிறது.
தற்போதைய இலக்கணப்படி ஏதேனும் சட்டவிரோத அமைப்பின் கீழ் செயல்படும் நபர்கள் கூட்டாக திட்டம் தீட்டி நடைமுறைப்படுத்தும் செயல்கள் தீவிரவாதமாக கருதப்பட்டு வருகிறது. புதிய இலக்கணத்தின்படி திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நபருக்கு ஏதேனும் அமைப்புடன் தொடர்பிருக்குமா? இல்லையா? என்பதை ஆராயாது.

முத்துப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் SDPI-ன் வேட்பாளர் அ.அபுபக்கர் சித்திக் அவர்களுக்கு கை கடிகாரம் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்


அன்னா ஹசாரே தாக்கப்படுவாரா?



சிலவருடங்களுக்கு முன் தஸ்லீமா நஷ்ரீன், சல்மான் ருஸ்டி, போன்றவர்களுக்கு வக்காலத்து வாங்கியது ஹிந்துத்துவா பயங்கரவாத கூட்டம். 

இந்த ஹிந்துத்துவா வர்ணாசிரம கூட்டம்போட்ட பிச்சையை வாங்கிக்கொண்டு பார்ப்பன பத்திரிக்கைகள் பேச்சு சுதந்திரத்தை முஸ்லிம்கள் பறிக்கிறார்கள் என்று கூப்பாடு போட்டார்கள்.

இன்று ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா கூட்டம் பேச்சு சுதந்திரத்தை, கருத்து சுதந்திரத்தை பறிக்கிறது. கஷ்மீர் விசயத்திலே வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று தனது கருத்தை சொன்ன காரணத்திற்க்காக ஸ்ரீராம் சேனா என்கிற வானர கூட்டத்தால் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தாக்கப்பட்டார்.