Friday 3 June 2011

மனிதர்களை கொல்லும் இ.கோலி பக்டீரியா: உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவல்


இ.கோலி பக்டீரியாவுக்கு 17வது நபர் ஜேர்மனியில் பலியாகி உள்ளார். பயங்கர நச்சுப்பொருளுடன் புதிய வகை பக்டீரியாவாக இ.கோலி பக்டீரியா உருவாகி உள்ளது.
இந்த நுண் பக்டீரியாவானது புதிய மரபணு மாற்றத்துடன் உருவாகியுள்ளது. இதில் மனிதர்களை கொல்லும் ஜூன்கள் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஸ்பெயினில் இருந்து ஜெர்மெனி போன்ற நாடுகளுக்கு வெள்ளரிக்காய் உள்பட காய்கறிகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த வெள்ளரிக்காயை சாப்பிட்டதால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்  பக்டீரியாவான இ.கோலி பரவி உள்ளது என ஜேர்மனி முதலில் குறிப்பிட்டது.

ஆபாச எதிர்ப்பு பிரசாரம் – பாப்புலர் ஃப்ரண்ட்



புதிய தலைமைச் செயலக கட்டுமானப் பணிகள் நிறுத்தம்-விசாரணை நடத்தப்படும்: ஆளுநர்


சென்னை: புதிய தலைமைச் செயலக கட்டுமானப் பணிகள் நிறுத்திவைக்கப்படுகின்றன. கட்டுமானப் பணிகள் குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்தப்படும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள 14வது சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. காலை அவை கூடியதும் ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா தனது உரையை தொடங்கினார்.

+1, +2 மாணவர்களுக்கு இலவச லேப்டாப்...

ஜெயலலிதா முதல் அமைச்சராக பதவி ஏற்ற பிறகு, புதிய அரசின் முதலாவது சட்டசபை கூட்டம் இன்று (03.06.2011) கூடியது. காலை 10 மணிக்கு தமிழக கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா சட்டசபையில் உரையாற்றினார்.


கவர்னர் உரையில், 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப்புகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாட்டு இறட்சியும்! ராம கோபால ஐயரும்!


உத்தரப்பிரதேச இறைச்சிக்கூடங்களை எதிர்த்து ஜைன துறவி ப்ரபாசாகர்ஜி உண்ணாவிரதம் மேற்கொண்டாராம். அவரை கைது செய்த போலீசார் வண்டியில் கொண்டு சென்றார்களாம். 

ஜைன துறவிகள் எப்போதும் கால்நடையாக செல்வதால் இப்படி வண்டியில் கொண்டு சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறதாம்.

போலீசு கைது செய்தால் ஜீப்பில்தான் ஏற்றுவார்கள், அவன் ஜைனனோ இல்லை பொறுக்கி சங்கராச்சாரியோ இல்லை பிட்டுப் பட பூசாரி தேவநாதனோ யாராக இருந்தாலும் இதுதானே நடைமுறை? 

ராம்தேவின் ஊழல் எதிர்ப்பு நாடகம்:அதிகரித்து வரும் எதிர்ப்பு


மும்பை/டெல்லி:ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ்ஸின் யோகா குருவும், ஆன்மீகத்தின் பெயரால் மக்களை ஏமாற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோடிகளை சம்பாதித்துள்ள பாபா ராம் தேவ் நடத்தவிருக்கும் ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரத நாடகத்திற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ராம் தேவின் ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரத போராட்டம் அரசியல் நாடகம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் எஸ்.ராமச்சந்திர பிள்ளை தெரிவித்துள்ளார்.

சிறையில் கொடுமை:அப்துல் நாஸர் மஃதனி புகார்


பெங்களூர்:தன்னை சிறை அதிகாரிகள் மனோரீதியாகவும், உடல்ரீதியாகவும் கொடுமைக்கு ஆளாக்குவதாகவும், நோயால் பாதிக்கப்பட்ட தனக்கு சிகிட்சை வசதிகள் அளிக்கவேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை கடைப்பிடிக்க தயாராகவேண்டும் எனவும் அப்துல்நாஸர் மஃதனி புகார் அளித்துள்ளார்.

பெங்களூர் மத்திய சிறையின் சூப்பிரண்டிற்கு இந்த புகாரை அவர் அளித்துள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது: ஊனமுற்ற நான் நீரழிவு நோய்,உயர்ந்த இரத்த அழுத்தம்,அல்ஸர் போன்ற நோய்களால் அவதியுறுகிறேன்.