Sunday 29 May 2011

வகுப்பு கலவரங்களை தடுக்க ஆணையம்


புதுடெல்லி:வகுப்பு கலவரங்களை தடுக்கவும், சமூகத்தில் நல்லிணக்கத்தை உருவாக்கவும் மத்திய, மாநிலங்கள் அளவில் ஆணையம் உருவாக்கப்படவேண்டும் என மத்திய அரசு நிறைவேற்றவிருக்கும் கலவர தடுப்பு மசோதா கூறுகிறது.
மத்திய அரசுடன் கலந்தாலோசித்து வகுப்பு கலவரங்களை தடுக்க அளவுகோல்களை வெளியிடவும், மறுவாழ்வு திட்டங்களை தயாராக்கவும் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கப்படும் என வரைவு மசோதா தெரிவிக்கிறது.
சேர்மன், துணை சேர்மன் தவிர ஐந்து உறுப்பினர்களை கொண்ட ஆணையத்தில் ஒருவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவராக இருக்கவேண்டும் எனவும், மீதம் 4 பேர் பெண்கள் எனவும் மசோதா கூறுகிறது. ஆணையத்தின் உறுப்பினர்கள் மீது எவ்வித வழக்குகளும் இருக்க கூடாது.