Friday 7 June 2013

மாலேகான் குண்டுவெடிப்பு:முஸ்லிம் இளைஞர்களை கைது செய்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது! – மத்திய உள்துறை இணை அமைச்சர்!

புதுடெல்லி: 2006-ஆம் ஆண்டு மாலேகானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கில் முஸ்லிம் இளைஞர்களை மஹராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படையும், சி.பி.ஐயும் குற்றவாளிகளாக சேர்த்து கைதுச் செய்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங் கூறியுள்ளார். இத்தகைய தவறுகள் இனி  நடக்காது என்றும், இவ்வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு ஏஜன்சியிடம்(என்.ஐ.ஏ) ஒப்படைத்தது சரியான நடவடிக்கை என்றும் சிங் மேலும் தெரிவித்துள்ளார். 

மன்னர் திப்பு சுல்தானுக்கு மணி மண்டபம்!: கண்டன சுவரொட்டி ஒட்டிய பயங்கரவாதி கைது!

திண்டுக்கல்: ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவில் ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய மன்னர்களுள் மைசூர் புலி ஹைதர் அலீயும் அவர் மகன் திப்பு சுல்தானும் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த இரு மன்னர்களுக்கும் திண்டுக்கல் மாவட்டத்தில் மணிமண்டபம் அமைக்கப் போவதாக தமிழக அரசு அண்மையில் அறிவித்திருந்தது. இதனையொட்டி, மாவட்ட நிர்வாகம் சார்பில் அதற்கான இடங்களை அடையாளங் காணும் பணி தொடங்கி சுமார் 10 இடங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன.

யு.ஏ.பி.ஏ (UAPA) சட்டத்திற்கு எதிராக தொடர் பிரச்சார இயக்கம்!-எஸ்.டி.பி.ஐ மாநில செயற்குழு தீர்மானம்!

எஸ்.டி.பி.ஐ(சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா) கட்சியின் மாநில செயற்குழு நேற்று  (06.06.2013) மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி தலைமையில் நடைபெற்றது.  மாநில துணைத்தலைவர் எஸ்.எம்.ரபீக் அஹமது வரவேற்றார், மாநில பொதுச் செயலாளர்கள் நெல்லை முபாரக். நிஜாம் முகைதீன், பி. அப்துல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.