Monday 22 August 2011

அன்னா ஹஸாரே போராட்டத்தில் முஸ்லீம்கள் பங்கேற்க வேண்டாம்- டெல்லி தலைமை இமாம் சையது புகாரி அறிவிப்பு

டெல்லி: டெல்லியில் அன்னா ஹஸாரே நடத்தி வரும் போராட்டத்தில் முஸ்லீம்கள் பங்கேற்காமல் விலகியிருக்க வேண்டும் என்று டெல்லி ஜும்மா மசூதி இமாம் சையத் அகமது புகாரி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ராம்லீலா மைதானத்தில் நடந்து வரும் போராட்டத்தில் வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெய் ஆகிய கோஷங்கள் நிரந்தரமாகி விட்டன. இவை இஸ்லாமுக்கு எதிரானவையாகும்.

உத்தர பிரதேசத்தில் டிராக்டர் விபத்து - 41 பேர் பலி

உத்தரபிரதேசத்தில் டிராக்டர் துரோலி ஒன்று சாலையோர பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 41 பயணிகள் உயிரிழந்துள்ளனர். 20 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். லக்னோவிலிருந்து 300 கி.மீ தொலைவில் நாக்லா பகுதியின் பாலியா எனுமிடத்தில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

அமெரிக்க நிதிச் சரிவால் கனடா வங்கிகளின் வளர்ச்சி பாதிக்கும் அபாயம்

அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிதி நெருக்கடியால் அருகாமையில் உள்ள கனடாவின் வங்கிகளின் வளர்ச்சி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இதே கால் இறுதி ஆண்டில் கனடா வங்கிகளுக்கு பலவீனமான வளர்ச்சி காணப்பட்டது. ஆனால் நடப்பு கால் இறுதி ஆண்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெறலாம் என அவை திட்டமிட்டுள்ளன.

திரிபோலியை நோக்கி முன்னேறி வரும் லிப்ய எதிர்பாளர்கள்

லிபியத் தலைநகர் திரிபோலியின் புறநகர்ப் பகுதிகளில் நேற்று எதிர்ப்பாளர்கள் புகுந்து கடாபி ராணுவம் மீது கடும் தாக்குதல் நடத்தினர்.

இதனால் இன்னும் ஓரிரு நாட்களில் கடாபி ராணுவம் தோல்வி அடையக் கூடும். அதே நேரம் லிபிய அரசுத் தரப்பில் உடனடிப் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.