Monday 20 May 2013

காலித் முஜாஹிதின் மரணம்! - சி.பி.ஐ விசாரணைக்கு பரிந்துரை!


தீவிரவாத வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காலித் முஜாஹித் போலீஸ் கஸ்டடியில் வைத்து மர்மமான முறையில் மரணித்த நிகழ்வு குறித்து சி.பி.ஐ விசாரணை கோரி உ.பி மாநில அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. 2007-ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் குற்றம் சாட்டப்பட்ட காலித் முஜாஹிதை ஃபைசாபாத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு லக்னோ சிறைக்கு கொண்டு செல்லும்போது போலீஸ் வாகனத்தில் வைத்து மரணித்ததாக போலீஸ் கூறுகிறது.
அவர் சூரிய ஒளியின் தாக்குதலால் மரணமடைந்தார் என்று போலீஸ் கூறுகிறது. காலிதை பொய் வழக்கில் சிக்கைவைத்ததாகவும், அவரது மரணம் கொலை என்றும் குற்றம் சாட்டி அவரது மாமனார் ஸஹீர் ஆலம் ஃபலாஹி அளித்த புகாரின் அடிப்படையில் 42 போலீஸ் அதிகாரிகள் மீது பாராபங்கி போலீஸ் வழக்கு பதிவுச் செய்துள்ளது.

குஜராத் இன அழிப்பு குற்றவாளி அமித்ஷாவுக்குப் பதவி!


புது டெல்லி: குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இன அழிப்பு வழக்கில் குற்றவாளியான குஜராத் உள்துறை முன்னாள் அமைச்சரும் மோடிக்கு நெருக்கமானவருமான அமித்ஷாவுக்கு பாஜகவில் பதவி வழங்கப்பட்டுள்ளது.

பிரமுகர்! Vs. பயங்கரவாதி!!


கடந்த மாதம் 17 ஆம் தேதி பெங்களூருவில் பா.ஜ.க அலுவலகம் அருகே குண்டு வெடித்ததைத் தொடர்ந்து 16பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அப்பாவிகள் என்பதால் தமிழக இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ச்சியான போராட்டங்களையும் கண்டன ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.