Tuesday 19 July 2011

தமிழகத்தின் மக்கள் தொகையில் 52 சதவீதம் பேர் கிராமவாசிகள்: ஆய்வுத் தகவல்

தமிழக மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 52 சதவீதம் பேர் கிராமப்புறங்களில் வசிப்பவர்கள்.
இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

கடன் தொகையை உடனே தராவிட்டால் கச்சா எண்ணை தர மாட்டோம்: இந்தியாவுக்கு ஈரான் எச்சரிக்கை

கச்சா எண்ணை இறக்குமதிக்கு இந்தியா பெரிதும் வளைகுடா நாடுகளையே நம்பி உள்ளது. சவூதி அரேபியாவில் இருந்து தான் அதிகமான அளவுக்கு கச்சா எண்ணை இந்தியாவுக்கு கிடைக்கிறது. அரேபியாவுக்கு அடுத்தபடியாக ஈரான் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு அதிகப்படியான கச்சா எண்ணை கிடைக்கிறது.

சென்னையில் 200 அடுக்குமாடி கட்டிடங்கள் இடிக்கப்படுகிறது: பெருநகர வளர்ச்சிக்குழுமம் நோட்டீசு

சென்னை : அனுமதியின்றியும், விதிமுறைகளை மீறியும் கட்டப்பட்டுள்ள சுமார் 200 வணிக நிறுவன கட்டிடங்களை இடிப்பதற்கு நோட்டீஸ் அனுப்ப பெருநகர வளர்ச்சிக்குழுமம் முடிவு செய்துள்ளது.

பகவத் கீதை படியுங்கள், இல்லாவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுங்கள்- கர்நாடக அமைச்சர் பேச்சு

பெங்களூர்: பகவத் கீதையைக் கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டும். அப்படி படிக்க விரும்பாதவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கர்நாடக கல்வி அமைச்சர் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி பேசியுள்ளதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நல்லொழுக்க பயிற்சி(தஸ்கியா)முகாம்


                  
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஒரு நாள் நல்லொழுக்க பயிற்சி முகாம் பேட்டை சுத்தமல்லி பள்ளியில் வைத்து நடைபெற்றது.இதில் திரளான மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.ஒரு நாள் முழுவதும் நடந்த இந்த நிகழ்ச்சி இஷா முதல் மறுநாள் சுபு வரைக்கும் நடைபெற்றது. 

நெல்லை மண்டலம் சார்பில் சுதந்திர அணிவகுப்பு கலந்தாய்வு கூட்டம்




வருகின்ற ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர அணிவகுப்பு நெல்லையில் நடைபெற இருக்கிறது.ஆகையால் நெல்லை மண்டலம்  சார்பில் சுதந்திர அணிவகுப்பு எவ்வாறு கொண்டாடுவது  சம்பந்தமாக என் சம்பந்தமாக கலந்தாய்வு கூட்டம் மேலப்பாளையம் ராஜ் மகாலில் வைத்து நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு நெல்லை மாவட்ட செயலாளர் ஹைதர் அலி முன்னிலை வகித்தார்.

பலஸ்தீன அவலங்கள்...

பலஸ்தீன மக்களின் அவலங்களை வெளிப்படுத்தும் நோக்கில் 'எமது கதை' எனும் தலைப்பிலான கண்காட்சி கொழும்பிலுள்ள ரஷ்ய கலாசார நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

VAO தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

சென்னை: கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிவுகள் பெரும் இழுபறிக்குப் பின்னர் இன்று வெளியிடப்பட்டது. இணையதளத்தில் முடிவுகளைக் காண தமிழ்நாடு அரசுப் பணிகள் தேர்வாணையம் ஏற்பாடு செய்துள்ளது.

பாக்தாத் வீழ்ந்த போதெல்லாம்....!


இந்தக் கட்டுரை ஈராக் போர் மிக உக்கிரமாக நடக்கும்போது எழுதப்பட்டதாகும்.

ஈராக்..!

வல்லரசுகளின் வயிற்றுப் பசிக்கு இரையாகிக் கொண்டிருக்கின்றதொரு பூமி. மனிதன் நாகரீகமானவன். அவன் மிருகங்களை விட மேலானவன். என்றெல்லாம் மனிதனின் தகவமைப்பைப் பற்றிக் கூறப்படுகின்றன. ஆனால், நாகரீகம் என்ற போர்வையில் இன்றைக்கு நச்சுப் பாம்புகளாக மனிதன் மாறித்தான் போனான் என்பதை ஈராக் நிரூபித்துக் காட்டிக் கொண்டிருக்கின்றது.

எளிய மருத்துவக் குறிப்புகள்

அருகம்புல்லை சுத்தமாகக் கழுவி நன்றாக மென்று பல் வலி உள்ள இடத்தில் அடக்கி வைத்துக் கொண்டால் பல் வலி குறையும்.
சாதாரண வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் நீர் மோரில் உப்பு, கறிவேப்பிலை கலந்து, திரியும் வரை சுடவைத்து இரண்டு மூன்று முறை அருந்தினால் குணமாகும்.

நோய் தடுப்பில் இந்தியாவை தாண்டிய சீனா


ழை, எளிய மக்களைப் பாதிக்கும் தொற்று நோய்களை தடுப்பதிலும், நகர மயமாக்கால் அதிகரிக்கும் உயிர்கொல்லி தொற்று நோய்களால் பாதிக்கப்படுவோரை குறைப்பதிலும் இந்தியாவை விட சீனா மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது என்று ஐ.நா.வின் உலக நல்வாழ்வு அமைப்பு அறிக்கை தெரிவித்துள்ளது.

67 ஆயிரம் கோடி கடன் சுமையில் தவிக்கும் ஏர் இந்திய நிறுவனம்: 1200 கோடி நிதி உதவி அளிக்கிறது மத்திய அரசு

ஏ‌ர் இ‌ந்‌தியா ‌நிறுவன‌த்து‌க்கு ரூ.1,200 கோடி ‌நி‌தி உத‌வி வழ‌ங்க ம‌த்‌திய அரசு ஒ‌ப்புத‌ல் ‌அ‌ளி‌த்து‌ள்ளது.
மத்திய அரசின் ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதுடன் ஏறத்தாழ 67 ஆயிரம் கோடி கடன் சுமையில் சிக்கித்தவிக்கிறது.

ஐ.ஏ.எஸ்., காவ‌ல்துறை அதிகாரிகள் இடமாற்றம்

4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், 3 காவ‌ல்துறை அ‌திகா‌ரிகளை த‌‌மிழக அரசு இடமாற்றம் செய்து‌ள்ளது.
தமிழ்நாடு காதி மற்றும் கிராம தொழில்கள் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி சந்திரகாந்த் பி.காம்ளே மாற்றப்பட்டு, மீன்வளத் துறை ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார். அவரே, தமிழ்நாடு மீன்வள மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குனராகவும் பணியாற்றுவார் எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

எம்.பி.பி.எஸ். 2வது கல‌ந்தா‌ய்வு 28ஆ‌ம் தேதி தொடங்குகிறது

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேருவதற்கான 2வது கட்ட கல‌ந்தா‌ய்வு வரு‌ம் 28ஆ‌ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 4‌ஆ‌ம் தேதி வரை நடைபெறும் என்று மருத்துவ கல்வி கூடுதல் இயக்குனரும், தேர்வுக்குழு செயலாளருமான டாக்டர் ஷீலா கிரேஸ் ஜீவமணி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

புதிய காபிரைட் வாரியத் தலைவராக நீதிபதி சோப்ரா நியமனம்

புது தில்லி : புதிதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ள காபிரைட் (காப்புரிமை) வாரியத்தின் தலைவராக நீதிபதி ரமேஷ் சந்திர சோப்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.  

சோமாலியாவில் ஏற்பட்ட வறட்சி குறித்து ஐ.நா அவசர கூட்டம்: பிரான்ஸ் அமைச்சர் தகவல்

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியா மிக கடுமையான வறட்சி நிலையை எட்டி உள்ளது.

அந்த நாட்டை சேர்ந்த 15 லட்சம் மக்கள் உயிர் பிழைக்க அருகாமையில் உள்ள நாடுகளுக்கு ஓடி வந்துள்ளனர்.