Tuesday 28 May 2013

மௌலான காலித் முஜாஹிதீன் அடித்து படுகொலை! : SDPI கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!

உத்தர பிரதேசத்தில் 2007ம் ஆண்டு நடைபெற்ற குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட காலித் முஜாஹித் விசாரணைக்காக நீதி மன்றம் அழைத்து வரும் வழியில் போலிசாரால் அடித்தே கொலை செய்யப்பட்டுளார். 

காலித் முஜாஹிதின் மரணம்:பாரபட்சமற்ற விசாரணை-முஸ்லிம் தலைவர்களிடம் அகிலேஷ் யாதவ் உறுதி!


இச்சம்பவம் தொடர்பாக உள்ளார்ந்த நேர்மையுடனும் மிக கவனத்துடனும் செயல்படுவோம் என்று தன்னை சந்தித்த முஸ்லிம் தலைவர்களிடம் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.காலித் முஜாஹிதின் உறவினர்களுக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கை சிபிஐக்கு மாற்ற மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை!

பெங்களூரு : பெங்களூரூ பாஜக அலுவலகம் அருகே நடந்த குண்டு வெடிப்பில் அப்பாவிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் உண்மையை வெளிக்கொணர இவ்வழக்கை சிபிஐ வசம் மாற்ற வேண்டும் என்றும் மனித உரிமை அமைப்புகள் கோரியுள்ளன.

முஸ்லிம்கள் நிரபராதிகள் என்று தெரிந்தே வழக்கில் சிக்கவைத்து சித்திரவதைச் செய்யும் போலீஸ்!

தீவிரவாத வழக்குகளை குறித்து விசாரணை நடத்தும் பல்வேறு புலனாய்வு ஏஜன்சிகள் முஸ்லிம் இளைஞர்கள் நிரபராதிகள் என்று தெரிந்தே வழக்குகளில் சிக்கவைத்து, மிருகத்தனமாக சித்திரவதைச் செய்து சிறையில் அடைக்கின்றனர் என்று பிரபல புலனாய்வு செய்தியாளரும், ஊடகவியலாளருமான ஆஷிஷ் கேதானின் புதிய புலனாய்வு அறிக்கை கூறுகிறது. ஆஷிஷ் கேதானின் செய்தி இணையதளமான குலைல் நியூஸில் இந்தியாவின் போலீஸ், உளவுத்துறை ஏஜன்சிகளின் பட்டவர்த்தனமான முஸ்லிம் எதிர்ப்பு அணுகுமுறையை தோலுரித்துக் காட்டும் புலனாய்வு அறிக்கை வெளியாகியுள்ளது.