Tuesday 28 June 2011

பாகிஸ்தானில் பரபரப்பு: கூட்டணி கட்சி அமைச்சர்கள் ராஜிநாமா

இஸ்லாமாபாத், ஜூன் 28- பாகிஸ்தானின் கூட்டணி ஆட்சியில் இடம்பெற்றிருந்த முத்தஹிதா குவாமி இயக்கத்தைச் (எம்க்யூஎம்) சேர்ந்த 3 அமைச்சர்களும் திடீரென ராஜிநாமா செய்துள்ளனர்.


அவர்கள் மூவரும் தங்கள் ராஜிநாமா கடிதத்தை அதிபர் ஜர்தாரிக்கு இன்று அனுப்பியுள்ளனர்.

சிங்கூர் நில விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் டாடா அப்பீல்

டெல்லி: சிங்கூர் நிலத்தை விவசாயிகளுக்கு நிலத்தை திருப்பி அளிக்கும் மேற்குவங்க அரசின் முடிவுக்கு இடைக்காலத் தடைவிதிக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் மறுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அப்பீல் செய்துள்ளது.



எம்.பி.பி.எஸ்: தேனி, திருவாரூர் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை- பெற்றோர் மகிழ்ச்சி

சென்னை:  தேனி அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் அளித்துள்ளது. நடப்புக் கல்வியாண்டில் மாணவர்களை சேர்க்க திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.




கம்போடியா இனப்படுகொலை வழக்கு

கம்போடியாவில்  இடம்பெற்ற
இனப்படுகொலைக்காக விசாரணை நடத்தும்
நீதிமன்றம் தலைநகர் நாம்பென்னில்
விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பொல்பொட் தலைமையிலான கெமரூஜ் என்ற கம்யூனிசக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் 1970களின் இறுதியில் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் கம்போடியர்கள் கொல்லப்பட்டனர்.


இ-சலான், நடமாடும் தானியங்கி சிக்னல்: ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

சென்னை:  (டிஎன்எஸ்) இன்று (ஜுன் 28) தமிழக முதல்வர் ஜெயலலிதா, சென்னை அண்ணா சாலை காவல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்படும் உடனடி அபராதங்களுக்கு மின்னணு ரசீது வழங்கும் திட்டத்தையும் , எளிதில் எடுத்துச் செல்லத்தக்க சூரிய சக்தியால் இயங்கும் போக்குவரத்து செல்லும் திசைகாட்டும் கருவி முறையினையும் தொடங்கி வைத்தார்.

புதுவை சபாநாயகராக என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. சபாபதி போட்டியின்றி தேர்வு

புதுவை சட்டசபை சபாநாயகர் பதவிக்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் சபாபதி எம்.எல்.ஏ. சட்டசபை செயலாளர் சிவ பிரகாசத்திடம் மனு தாக்கல் செய்தார். அப்போது முதல் அமைச்சர் ரங்கசாமி உள்ளிட்ட என்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

அமெரிக்கா ஏவுகணை வீசித் தாக்குதல்: 26 பேர் பலி

பாகிஸ்தானில் வசிரிஸ்தான் பகுதியில் தலிபான்கள் பயிற்சி முகாம்களை அமைத்துள்ளனர். எனவே அவர்களை அழிக்கும் நடவடிக்கையில் அமெரிக்க ராணுவம் ஈடுபட்டுள்ளது.


இந்த நிலையில் தெற்கு வசிரிஸ்தானில் ஷாவால் பள்ளத்தாக்கில் உள்ள ஸ்ராகாவ்ரா மலைப்பகுதியில் தீவிரவாதிகள் நடமாடி வருவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.

கேஸ் விலை: சிலிண்டருக்கு ரூ.40 வரை குறைத்தது டெல்லி அரசு!!

டெல்லி:  விற்பனை வரி குறைப்பு மூலம் சமையல் எரிவாயு விலையை சிலிண்டருக்கு ரூ 40 வரை குறைத்துள்ளது டெல்லி அரசு.


கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு டீசல், மண்ணெண்ணெய், கேஸ் விலைகளை உயர்த்தியது. நாடு முழுவதும் எதிர்கட்சியினர் விலை உயர்வை கண்டித்து கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர்.

மக்களிடம் ஆட்சியை ஒப்படைக்க ராணுவ ஆட்சியாளர்கள் விருப்பம்

எகிப்தில் விரைவில் தேர்தல் நடத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியிடம் பொறுப்பை ஒப்படைக்க ராணுவ ஆட்சியாளர்கள் விருப்பம் தெரிவித்து இருப்பதாக அமெரிக்க செனட் சபை உறுப்பினர் ஜான் மிக்கெய்ன் தெரிவித்துள்ளார்.


தற்போது ஆட்சி செய்து வரும் ராணுவ ஆட்சியாளர்கள் முபாரக்கிற்கு ஆதரவானவர்கள், ஆதலால் விரைவில் அவர்களை ஆட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும். புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கும் வரை தேர்தல் நடத்த தாமதம் செய்தால் இது இஸ்லாமிய கட்சிகளுக்கு ஆதரவாகிவிடும் என்று மதச்சார்பற்ற மற்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தனர்.

மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் ஜூன் 30-ல் ஆரம்பம்!

எம்பிபிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான கவுன்சிலிங் வரும் ஜூன் 30-ம் தேதி சென்னையில் ஆரம்பமாகிறது.


கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்தில் இந்த கவுன்சிலிங் நடக்கிறது.

ஏழைகளுக்கு 35 கிலோ அரிசி: ரங்கசாமி

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வசிக்கும் ஏழைகளுக்கு ஜூலை மாதம் 1 ம் தேதி முதல் 35 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்று முதல்வர் என். ரங்கசாமி கூறினார்.


இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி,

திருவாரூர் மாவட்ட பி.ஆர்.ஓ. பொறுப்பேற்பு

திருவாரூர் : திருவாரூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக எம். ராஜேந்திரன் (படம்) திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியைச் சேர்ந்த இவர் தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியாற்றி வந்தார். அண்மையில் தமிழக அரசு தமிழகம் முழுவதும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது.

இதில் திருவாரூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியிட மாறுதல் பெற்ற ராஜேந்திரன், திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இங்கு பணியாற்றிய செந்தில்குமார் திண்டுக்கல் மாவட்டத்துக்கு பணியிட மாறுதலில் சென்றார்.

சோட்டா ராஜன் உத்தரவால் பத்திரிகையாளரைக் கொன்றோம்


பத்திரிகையாளர் ஜோதிர்மய தேவ் கொலை வழக்கு தொடர்பாக மும்பையில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்ட 7 பேர். (வலது) கொலையாளிகள் பயன்படுத்திய ஆயுதங்கள்

மும்பை, ஜூன் 27: எண்ணெய் மாஃபியா கும்பலால் கொல்லப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட பத்திரிகையாளர் ஜோதிர்மய தேவ் கொலை வழக்கு தொடர்பாக 7 பேரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சட்டத்தின் ஓட்டைகள்!

நமது நாட்டில் சட்டம் இயற்றுவதில் நாம் காட்டும் சுறுசுறுப்பையும் வேகத்தையும் அந்தச் சட்டங்களை முறைப்படி நடைமுறைப்படுத்துவதில் காட்டுவதில்லை என்பதற்குப் பல உதாரணங்களைக் கூற முடியும். அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் உணவு என்று கடந்த ஐந்து ஆறு வருடங்களில் மெய்சிலிர்க்க வைக்கும் பல சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. இதனாலெல்லாம் பட்டினி கிடப்பவர்களின் எண்ணிக்கையோ, பள்ளிக்குப் போகாத குழந்தைகளின் எண்ணிக்கையோ குறைந்திருக்கிறதா என்பது உலகறிந்த ரகசியம்.

மு.க.ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து வீடியோ ஆதாரங்களுடன் சைதை துரைசாமி வழக்கு

சென்னை: சென்னை கொளத்தூர் தொகுதியில் மோசடி செய்து மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளதால் அதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி வீடியோ ஆதாரங்களுடன் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த சைதை துரைசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்தியாவின் புதிய வெளியுறவுத்துறை செயலாளர் ரஞ்சன் மத்தாய்

டெல்லி:  இந்தியாவின் புதிய வெளியுறவுத்துறைச் செயலாளர் ரஞ்சன் மத்தாய் நியமிக்கப்பட்டுள்ளார். இப்போது இவர் பிரான்ஸ் நாட்டுக்கான இந்தியத் தூதராக உள்ளார்.


வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த நிருபமா ராவ் அந்தப் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார். இதையடுத்து அவர் அமெரிக்காவிற்கான இந்திய தூதராக நியமிக்கப்பட உள்ளார்.

லிபிய அதிபர் மும்மர் கடாபிக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட்

லிபிய அதிபர் மும்மர் கடாபி, அவரது மகன் சைப் அல் இஸ்லாம், உளவுத்துறைத் தலைவர் அப்துல்லா அல் சனுசி ஆகியோருக்கு கைது வாரண்ட்டை பிறப்பித்துள்ளது தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்.




மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை நிகழ்த்தியதாகவும், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி உத்தரவிட்டதாகவும் கடாபி மீது நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது.

தமிழக அமைச்சரவையில் மாற்றம்- சிறுபான்மை நலத்துறை புதிய அமைச்சராக முகம்மது ஜான் நியமனம்

தமிழக அமைச்சரவையில் இன்று சிறிய அளவிலான மாற்ற் மேற்கொள்ளபப்ட்டது. புதிய அமைச்சராக ராணிப்பேட்டை எம்.எல்.ஏ. முகம்மது ஜான் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் புதன்கிழமை பதவியேற்கிறார்.



 

ஹிந்துதுவாவின் சூழ்ச்சியை முறியடிக்க வருகிறார் ராகுல் காந்தி!

புதுடில்லி: "மத்திய அரசுக்கு நெருக்கடி தரும், போலிசாமியார் பாபா ராம்தேவ், அன்னா ஹசாரே போன்றவர்களுக்கு பதிலடி கொடுக்க, ராகுல் தான் சரியான ஆள். அவர்களுக்கு எதிராக, ராகுலை முழு வீச்சில் களம் இறக்கிவிட வேண்டும்' என, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கருதுகின்றனர்.


வகுப்புவாத வன்முறையின் பின்னணியில் அமெரிக்காவும், இஸ்ரேலும்-எகிப்து

கெய்ரோ:எகிப்தில் அண்மையில் நடந்த வகுப்புவாத வன்முறையின் பின்னணியில் அமெரிக்காவும், இஸ்ரேலும் செயல்பட்டுள்ளதாக எகிப்தின் துணைப்பிரதமர் யஹ்யா அல் ஜமால் தெரிவித்துள்ளார். நாட்டின் வளர்ச்சியை தடுப்பதற்காக இவ்விரு நாடுகளும் வகுப்புவாதத்தை வளர்த்துவதாக அவர் தேசிய தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தலை ஒட்டிப் பிறந்த இரட்டையர்களின் சாதனை

தலை ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் வயலின் இசையில் சாதனை படைத்து வருகின்றனர்.


அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தை சேர்ந்த தம்பதி டிம் டெல்ப் - நான்சி ஹோப்மன். திருமணமாகி 4 வருடங்கள் கழிந்த நிலையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.

சீனாவில் பிரபல மனித உரிமை ஆர்வலர் விடுதலை

சீனாவின் பிரபல மனித உரிமை ஆர்வலர் ஹூ ஜியா மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டார். எதிர்காலத்தில் தாம் மிகுந்த கவனத்துடன் இருப்பேன் என அவர் தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.


சிறையில் இருந்து வெளிவந்த பின்னர் எனது பெற்றோர், எனது மனைவி மற்றும் எனது குழந்தை ஆகியோருக்காக நிறைய செய்ய வேண்டி உள்ளதை உணர்ந்தேன். எனது குடும்பத்தினருக்காக ஒன்றுமே செய்யவில்லை என நெகிழ்ச்சியுடன் அவர் கூறினார்.