Saturday 18 May 2013

கேரளாவில் 21 அப்பாவி முஸ்லிம்கள் கைது சம்பவம்! - போலீஸாரால் ஜோடிக்கப்பட்டது! - மனித உரிமை அமைப்பு அறிக்கை!


கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள நாராத் பகுதியில் வெடிக்குண்டுகளுடன் ஆயுதப் பயிற்சில் செய்ததாக கூறி 21 பேரை கைது செய்த சம்பவம் போலீஸாரால் ஜோடிக்கப்பட்டது என்று உண்மைக் கண்டறியும் குழுவினர் தெரிவித்துள்ளனர். தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பான என்.சி.ஹெச்.ஆர்.ஓ குழுவினர் சம்பவம் நடந்த இடத்தில் நடத்திய தீவிர விசாரணையில் போலீசாரின் குற்றச்சாட்டுக்கள் பொய் என்பது நிரூபணமாகியுள்ளது. தமிழகத்தை சேர்ந்த பேரா.மார்க்ஸ், புதுவை ஜி.சுகுமாரன் ஆகியோர் அடங்கிய இந்த உண்மை அறியும் குழு இந்த விசாரணையை நடத்தியுள்ளது.