Friday 30 August 2013

முத்துப்பேட்டை: கலவரத்தை தூண்டி அரசியல் ஆதாயம் தேடும் பா.ஜா.க! -எஸ்.டி.பி.ஐ.கண்டனம்!

முத்துப்பேட்டை: இன்று 30/08/13 எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருவாரூர் மாவட்ட பொதுசெயலாலர் நெய்னா முகம்மது வெளியிட்ட அறிக்கையில் முத்துப்பேட்டையில் தொடர்ந்து  விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் BJP கட்சியின் குண்டர்கள்  முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் புகுந்து கலவரம் ஏற்படுத்தி வருகின்றனர்.


அதேபோன்று கடந்த 9-8-13 அன்று கலவர நோக்கத்துடன் முஸ்லிம்களின் ரம்ஜான் தினத்தன்று தனி நபர் பிறந்த நாள் எனக்கூறி  ஊர்வலம் வந்து பள்ளிவாசல் முன்பு வெடிகள் வெடித்து மதத்துவேச கோஷமிட்டு வெறியாட்டம் நடத்தினர்.

காவல் துறையின் ஒரு தலைபட்ச நடவடிக்கையால் முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு இன்று வரை சிறையில் வாடுகின்றனர். இதை தொடர்ந்து இன்னும் சில நாட்களில் விநாயகர் ஊர்வலம் வர இருக்கும் நிலையில் முஸ்லிம்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர்.

இந்த ஊர்வலத்தை முஸ்லிம்கள் வசிக்கிகும் பகுதிக்குள் அனுமதிக்காமல்  E.C.R. ரோடு வழியாக கொண்டு செல்ல மற்றும் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்க காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும். தொடர்ந்து கலவரத்தை தூண்டி அரசியல் ஆதாயம் தேடும் பா.ஜா.கட்சியை இந்தியா முழுவதும் தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


1 comment: