Friday 30 August 2013

முத்துப்பேட்டையில் அரசர் குளம் மேம்பாட்டிற்கு 29 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது!

முத்துப்பேட்டை உள்ள அரசர் குளத்தை தூர்வாரி பராமரிக்க வேண்டும் என்பது 9வது வார்டு மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. 
அதனடிப்படையில் வார்டு கவுன்சிலர் பாவாபகுருதீன் அவர்களின் கடும் முயற்சியால் குளம் தூர் வார மற்றும் அதை சுற்றி நடைபயிற்சி பாதை அமைக்க ரூ.29 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.


இன்னும் சில தினங்களில் அதன் பணிகள் தொடங்கப்படவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

No comments:

Post a Comment