Friday 2 September 2011

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு: இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டப் படிப்பு மற்றும் அதற்கு மேல் கல்வித் தகுதியுடைய இளைஞர்கள் அரசு சார்பில் அளிக்கப்பட்டு வரும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.   

இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ச. முனியநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:   

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இருதரப்பினர் இடையே மோதல்: பெண் பலி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் இடையே இரு தரப்பினரிடையே நடந்த மோதலில் பெண் ஒருவர் பலியானார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்தி மிக விமரிசையாக நேற்று கொண்டாடப்பட்டது. கோவில்களில், விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. களிமண்ணால் செய்யப்பட்ட சிறு விநாயகர்சிலைகள், அனைத்துசாலைகளிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டு, 20 லிருந்து 250 ரூபாய் வரை விற்கப்பட்டன.

அரசு கேபிள் டிவி சேவை ஒளிபரப்பு : ஜெ.தொடக்கி வைக்கிறார்

சென்னை: தமிழ்நாடு  அரசு கேபிள் டிவியை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று (செப்.2)  வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைத்தார். தமிழ்நாடு அரசு கேபிள்  கார்ப்பரேஷனின் ஒளிபரப்பு தொடக்க நிகழ்ச்சி இன்று சென்னை கோட்டையில் நடைபெற்றது. கோட்டையில் உள்ள முதலமைச்சர் அறையிலிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலமாக இந்த ஒளிபரப்பை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்து பேசினார்.