Saturday 21 May 2011

அவப்பெயர் பெற்ற தலைவர்களில் ஸ்பெக்ட்ரம் ராஜாவுக்கு இரண்டாமிடம்


நியூயார்க்: அமெரிக்காவின், "டைம்ஸ்' இதழ் வெளியிட்டுள்ள, முறைகேடாக அதிகார துஷ்பிரயோகம் செய்து அதனால் அவப்பெயர் பெற்ற தலைவர்கள் பட்டியலில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவுக்கு இரண்டாமிடம் கிடைத்திருக்கிறது.
நியூயார்க்கில் இருந்து வெளியாகும், "டைம்ஸ்' இதழின் இப்பட்டியலில், முதலிடத்தில் இருப்பவர் டேனியல் எல்ஸ்பெர்க். இவர், அமெரிக்க முன்னாள் அதிபர் ரிச்சர்டு நிக்சன் அரசில், அந்நாட்டு ராணுவ ரகசியங்களை கசிய விட்டவர். இரண்டாம் இடத்தில் இருப்பவர், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலில் குற்றம் சாட்டப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா. லிபியா ஆட்சியாளர் முவாம்மர் கடாபி, வடகொரியா சர்வாதிகார ஆட்சியாளர் கிம் ஜாங் - 2, இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி ஆகியோரை பந்தயத்தில் முந்தி, ராஜா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். இவர்கள் எல்லாம் பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், ராஜா குறித்து, "டைம்ஸ்' இதழ் வெளியிட்டுள்ள செய்தியில், "முன்னர், அசைக்க முடியாத அளவிற்கு அதிகாரத்தில் பீடத்தில் அமர்ந்திருந்த இந்திய கூட்டணி ஆட்சிக்கு, தற்போது, "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் சவாலாக அமைந்துள்ளது. இந்தியாவில் எப்போதும் நடைபெறும், குதிரை பேரத்தின் மூலம் மத்திய அமைச்சர் பதவியை பெற்றவர் ராஜா. "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலால், இந்திய அரசுக்கு 32 ஆயிரத்து 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய வரலாற்றிலேயே, இது மிகப்பெரிய ஊழல். இந்த ஊழலால், ராஜாவைச் சேர்ந்த கட்சி கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் பெரும் தோல்வியைத் தழுவியது. இந்திய நீதிமன்றத்தில், இந்த வழக்கு இஞ்ச், இஞ்சாக நகர்ந்து முன்னேறி வருகிறது' என்று அதில் கூறப்பட்டுள்ளது. இப்பட்டியலில், டைகோ தலைமை செயல் அதிகாரி டென்னிஸ் கோஸ்லோஸ்கி, இஸ்ரேல் முன்னாள் அதிபர் மோசி கத்சவ், சீனாவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் தலைவர் ஜெங் ஜியாவ்யு மற்றும் 1992ம் ஆண்டில் அமெரிக்காவின் உள்துறை அமைச்சராக இருந்த ஆல்பர்ட் பால் ஆகியோரின் பெயர் இடம் பெற்றுள்ளது.

சரித்திரம் திரும்புமா?

தி மு க தலைவர் கருணாநிதி அவர்களுக்கு: அன்று தமிழருக்காக குரல் கொடுத்தீர்கள் கட்சியும் வளர்ந்தது, தங்களும் வளர்ந்தீர்கள், உங்கள் குடும்பமும் வளர்ந்தது.

சமூக நீதிக்காக குரல் கொடுத்தாய், தீண்டாமையே எதிர்த்த காரணத்தினால் ஜாதி வெறியர்களின் எதிர்ப்பை சம்பாதித்தாய், ஹிந்தியை எதிர்த்தாய், பிற்படுத்தப்பட்ட மக்கள்ளுக்காக குரல் கொடுத்தாய்!

பெரியாரின் வழியில் ஹிந்துத்துவா பாசிஸ்டுகளை எதிர்த்தாய், ஈழத்தமிழருக்காக குரல் கொடுத்தாய், இதெல்லாம் நீ செய்யும் போது வெற்றி மேல் வெற்றி பெற்றாய்.

நீ பெற்ற வெற்றி குறிப்பாக ஹிந்துத்துவா பாசிஸ்டுகளின் கோபத்தை கிளறியது. அப்போதெல்லாம் தேர்தலில் நீ வெற்றியும் ,தோல்வியும், கண்டிருக்கிறாய் ஆனால் கேவலபடவில்லை!

என்று நீ கொள்கையில் இருந்து மாறி குடும்பத்திற்காக ஹிந்துத்துவா பாசிஸ்டுகளுடன் கூட்டணி வைத்தாயோ? அன்றிலிருந்து உன்னுடைய கேவலம் தொடங்கிவிட்டது.

பதிமூன்று வருடகாலம் நீ எதிர்க்கட்சி தலைவராக இருந்தாய் MGR ஆட்சியில் உன்னை தொடுவதற்கு யாருக்கும் தைரியம் வரவில்லை. ஏன்? சதிகாரர்கள் அன்று உன்னுடன் இல்லை! ஆனால் இன்று நீ சதிகாரர்களின் சகலப்படியாக மாறிவிட்டாய் .

ஒன்றை நினைவில் வைத்துக்கொள்! ஹிந்த்துதுவா பாசிஸ்டுகள் என்றுமே தாழ்த்தப்பட்டவர்களை வாழ விடமாட்டார்கள்! இது நான் சொல்லித்தான் உனக்கு தெரிய வேண்டும் என்றில்லை. என்றாலும் ஒரு சின்ன உதாரணம்:


கோடி கோடியாக ஊழல் செய்த ஜெயலலிதா, பாபர் மஸ்ஜித் இடித்த அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, அரஸ்ட் வாரன்ட் கோர்ட் கொடுத்ததும் அரஸ்ட் செய்யப்படாத பால்தாக்கரே, மனித குலவிரோதி நரேந்திரமோடி,

ISI யிடம் பணம் பெற்று இந்தியா முழுவதும் குண்டு வெடிப்புகளை நடத்தி பாமர முஸ்லிம், ஹிந்து மக்களை வீரோதிகளாக மாற்ற முயற்சித்த RSS தலைவர்கள்,


இவர்கள் எல்லாம் வெளியில்! இந்த 2 ஜி ஸ்பெக்ட்ராம் ஊழலை தொடக்கி வைத்த BJP தலைவர்களும், அருண் சொறியும் வெளியில்!
ஏன் என்றால் அவர்கள் உயர் ஜாதி.
ஏதோ எல்லா அரசியல்வாதிகளும் செய்வதை போல் செய்த உன் குடுப்பத்திற்கு மட்டும் ஜெயில்.சமூகத்தில் தாழ்த்த பட்டவர்களையும், முஸ்லிம்களையும், ஏழைகளையும் அரஸ்ட் பண்ணுவதற்காக, மட்டுமே வாரன்ட் தயாரிப்பதற்கு உயர் ஜாதி பார்பனர்களின் கோர்ட் .
இனியும் காலம் கடந்து விடவில்லை. உயர் ஜாதி ஹிந்துத்துவா வெறியர்களின் அநீதிர்க்கு எதிரான போரை தொடங்கு! தமிழர்களும், முஸ்லிம்களும் ,தாழ்த்தப்பட்டவர்களும், உன்னுடன் நிற்ப்பார்கள், உன் வெற்றி உறுதி! நிச்சயம்!!

உன்னால் பாதிக்கப்பட்ட ஈழதமிழர்களின் குடும்பங்கள், கோயம்புத்தூர் குடும்பங்கள் இவர்களின் ஆத்மா சாந்தி அடையவேண்டும் என்றால், என்றும் இவர்களுக்கும், உனக்கும் எதிரியான ஹிந்துவா சக்திகளையும், சிங்கள பேரினவாதத்தையும் எதிர்த்து போராடு.

பெரியார் தொடக்கி வைத்த போரை மீண்டும் தொடங்கு இல்லையென்றால்! பாசிஸ்டுகள் மக்களையும், உன் குடும்பத்தையும் கேவலபடுதிவிடுவார்கள் .

மறந்து விடாதே! அன்று ஹிந்துத்துவா பயங்கரவாதி வாஜ்பேய் ஆட்சி செய்யும் போது நீஅவாள்களின் கூட்டணியில் தான் இருந்தாய்! அன்றும் நீ கைது செய்யப்பட்டாய்.
நீ காங்கிரசின் கூட்டணியில் தான்
 இருக்கிறாய் இன்று உன் குடும்பமே தீஹாரை நோக்கி. பாசிஸ்டுகளின் பாசறைகள் சந்தோஷத்தில்! தமிழர்களோ சங்கடத்தில்! இன்றும்
ஒன்றை நினைவில் வைத்துகொள்! நல்லவர்கள் ஒரு நாளும் ஹிந்துத்துவாவுடன் சேரமாட்டார்கள்
!

தவறை திருத்து 
தமிழர்களின் பக்கம் திரும்பு!!!!

51 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம்

மே 20:

தமிழகத்தில் 51 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒரே நாளில் மாற்றப்பட்டுள்ளனர். புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ள துறைகளில் மூத்த, அனுபவம் வாய்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள




ஷீலா பாலகிருஷ்ணன், சமூக நலத் துறை செயலாளராக பொறுப்பேற்றுள்ளார்.



இதுகுறித்து, தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி



வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவு (அடைப்புக்குள் பழைய பதவி):


ஷீலா பாலகிருஷ்ணன் (அண்ணா மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநர்) சமூக நலத் துறை, சத்துணவுத் திட்டத் துறை செயலாளர்


டி.எஸ்.ஸ்ரீதர் - (தொல்லியல் மற்றும் அருங்காட்சியங்கள் துறை ஆணையாளர்) - சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை முதன்மைச் செயலாளர்



என்.சுந்தரதேவன் - (வருவாய் நிர்வாக ஆணையாளர்) - தொழில் துறை முதன்மைச் செயலாளர்



எம்.குற்றாலிங்கம் - (சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் துறை முதன்மைச் செயலாளர்) பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை முதன்மைச் செயலாளர்



ரமேஷ்ராம் மிஸ்ரா- (போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர்) - தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலாளர்



ஆர். கண்ணன் - (பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை (பயிற்சி) முதன்மைச் செயலாளர்) - உயர் கல்வித் துறை முதன்மைச் செயலாளர்



என்.எஸ். பழனியப்பன் - (தமிழ்நாடு சிறு தொழில்கள் மேம்பாட்டுக் கழக தலைவர்) -மேலாண் இயக்குநர் - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர்



சாந்தினி கபூர் - (கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு அலுவலர் மற்றும் மேலாண் இயக்குநர்) - இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர்



வி.கே.ஜெயக்கொடி - (வருவாய்த் துறை முதன்மைச் செயலாளர்) - சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை முதன்மைச் செயலாளர்



ஆர்.ராஜகோபால் - (கைத்தறி, துணிநூல் துறை முதன்மைச் செயலாளர்) - வருவாய்த் துறை முதன்மைச் செயலாளர்



ராஜீவ் ரஞ்சன் - (தொழில்துறை முதன்மை செயலாளர்) - சர்க்கரைத் துறை ஆணையாளர்



கே.அருள்மொழி - (மாநில திட்ட ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர்) - வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர்



முகமது நசிமுதீன் - (வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறை செயலாளர்) - போக்குவரத்துத் துறை செயலாளர்



கே.பணீந்திர ரெட்டி - (தமிழ்நாடு நகர்ப்புற கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர்) - வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர்



சி.முத்துக்குமாரசாமி - (நில சீர்திருத்தத் துறை ஆணையாளர்) - கைத்தறி, துணி நூல் துறை செயலாளர்



விபு நாயர் - (நீர் வள மேலாண்மை திட்ட இயக்குநர்)- ஆவின் நிறுவன மேலாண் இயக்குநர்



எஸ்.கருத்தையா பாண்டியன் - (பொதுத் துறை செயலாளர்) - நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர்



ஏ.எஸ்.ஜீவரத்தினம் - (தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண் இயக்குநர்) ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை செயலாளர்



ஜி.சந்தானம் - (நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர்) பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை செயலாளர்



சந்தோஷ்பாபு- (எல்காட் நிறுவன மேலாண் இயக்குநர் ) - தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர்



சிவ தாஸ் மீனா - ( தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் மேலாண் இயக்குநர்) - சிறப்பு திட்டங்கள் அமலாக்கத் துறையின் செயலாளர்



சுனில் பாலீவால் - ( தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண் இயக்குநர் ) - வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறை செயலாளர்



ககன்தீப் சிங் பேடி - ((தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய மேலாண் இயக்குநர்) - கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை செயலாளர்



எம். சாய்குமார் - (சர்க்கரைத் துறை ஆணையாளர்) - பொதுப்பணித் துறை செயலாளர்



டி.கே.ராமச்சந்திரன்- (தமிழ்நாடு காகித ஆலை நிறுவன மேலாண் இயக்குநர்) - நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை செயலாளர்



சி.பி.சிங் - (தமிழ்நாடு மின்வாரியத் தலைவர் ) தொல்லியில் துறை ஆணையாளர்



கே.ஞானதேசிகன்- (உள்துறை முதன்மைச் செயலாளர்) வருவாய்த் துறை நிர்வாக ஆணையாளர்



கே.தீனபந்து- ( முன்னாள் துணை முதல்வரின் செயலாளர்) மறுவாழ்வுத் துறை ஆணையாளர்



அசோக் டோங்ரே- ( வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வசதித் துறை முதன்மைச் செயலாளர்) சமூக பாதுகாப்புத் துறை இயக்குநர்


வெ. இறையன்பு - ( வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலாளர்) பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை (பயிற்சி) செயலாளர்


எஸ்.எஸ்.ஜவஹர்- ( மாற்றுத் திறனாளிகள் துறை செயலாளர்) அருங்காட்சியகங்கள் துறை ஆணையாளர்


எஸ்.கே.பிரபாகர்- ( முன்னாள் முதல்வரின் செயலாளர்) நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத் துறை-சுனாமி பிரிவு


கே.ரகுபதி- ( முன்னாள் துணை முதல்வரின் துணைச் செயலாளர்) ஊரக வளர்ச்சித் துறை (பயிற்சி) இயக்குநர்


பி.ஆர்.சம்பத்- ( இந்து சமய அறநிலையங்கள் துறை ஆணையாளர்) - மாற்றுத் திறனாளிகள் நலத் துறை


மாநில ஆணையாளர்


சூசன் மேத்யூ- ( சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவர்) தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர்


டேவிதார் - ( தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர்) தமிழ்நாடு உப்புக் கழகத்தின் மேலாண் இயக்குநர்


அதுல் ஆனந்த் - ( வேளாண் துறை ஆணையாளர்) எல்காட் நிறுவன மேலாண் இயக்குநர்


ஸ்வரன் சிங்- ( கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர்) தமிழ்நாடு மின்வாரியத் தலைவர்


சி.வி.சங்கர் - ( மத்திய பணியில் இருந்து திரும்புதல) தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண் இயக்குநர்


வி.கே.சுப்புராஜ்- ( சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர்) அறிவியல் நகரத்தின் துணைத் தலைவர்


கே.கணேசன்-( உயர்கல்வித் துறை செயலாளர்) தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் வளர்ச்சி மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநர்


கே.அலாவுதீன்- ( ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை முதன்மைச் செயலாளர்) தமிழ்நாடு சிறு தொழில்கள் மேம்பாட்டு


கழகத்தின் (டான்சி) மேலாண் இயக்குநர்


எம்.முத்தையா கலைவாணன்-( மறுவாழ்வுத் துறை இயக்குநர்) இந்து சமய அறநிலையத் துறை ஆணையாளர்


டி.என்.ராமநாதன்- ( மண்ணியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையாளர்) தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள்,


செய்தித் துறை செயலாளர்


ஹித்தேஷ் குமார் எஸ்.மக்வானா- ( தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநர்) சுங்கம் மற்றும் கலால் துறை ஆணையாளர்

செய்திகள்

டி.விவேகானந்தன்- ( வேளாண் வர்த்தகம் மற்றும் விற்பனைத் துறை இயக்குநர்) டாஸ்மாக் மேலாண் இயக்குநர்

ஏல‌க்கா‌யி‌ன் மரு‌த்துவ குண‌‌ங்க‌ள்

ஏல‌க்கா‌ய் எ‌ன்பது இ‌ஞ்‌சி செடி வகை‌யை‌ச் சே‌ர்‌ந்தது. ப‌ச்சை ‌நிற‌க் கா‌ய்களை‌க் கொ‌ண்டது. ஏல‌க்கா‌ய் ப‌ச்சை ‌நிற‌த்‌திலு‌ம், அட‌‌ர் பழு‌ப்பு ‌நிற‌த்‌திலு‌ம் இரு‌க்கு‌ம்.

ஏல‌க்கா‌ய் நறுமண‌ப் பொருளாக ம‌ட்டு‌ம் இ‌ல்லாம‌ல், பல மரு‌த்துவ‌க் குண‌ங்களை‌க் கொ‌ண்டதாகு‌ம்.

மன இறு‌க்க‌த்தை‌க் குறை‌த்து உட‌ல் பு‌த்துண‌ர்‌ச்‌சி பெற ஏல‌க்கா‌ய் பய‌ன்படு‌கிறது.

ப‌ல் ம‌ற்று‌ம் வா‌ய் தொட‌ர்பான பல ‌பிர‌ச்‌சினைகளு‌க்கு ஏல‌க்கா‌ய் ந‌ல்ல ‌தீ‌ர்வாக அமையு‌ம்.

செ‌ரிமான‌த்‌தி‌ற்கு உதவு‌ம். இதனா‌ல்தா‌ன் நெ‌ய் சே‌ர்‌த்து செ‌ய்ய‌ப்படு‌ம் இ‌னி‌ப்பு‌க‌ளி‌ல் அவ‌சியமாக ஏல‌க்காயை சே‌ர்‌ப்பா‌ர்க‌ள்.

குர‌ல் வளை ம‌ற்று‌ம் தோ‌ல் தொட‌ர்பான நோ‌ய்களை‌த் ‌தீ‌ர்‌க்கு‌ம் ‌ஆ‌ற்ற‌ல் ஏல‌க்கா‌ய்‌க்கு உ‌ண்டு.

மல‌ட்டு‌த் த‌ன்மையை‌ப் போ‌க்குவத‌ற்கு‌ம் ஏல‌க்கா‌‌ய் பய‌ன்படு‌த்த‌ப்படு‌கிறது.

இதய நோ‌ய்களு‌க்கு‌ம் வை‌த்‌திய‌ம் உ‌ண்டு

தாமரை இதழ்களை நிழலில் உலர்த்திக் காயவைத்து இடித்துப் பொடியாக்கி 5 கிராம் பொடியைத் தேன்விட்டு குழப்பி 2 வேளை சாப்பிட்டு வர, இருதயம் பலப்படும். இரத்தத்தை உடலின் பல பாகங்களுக்கும் சீராக அனுப்பும்.

செந்தாமரை பூவின் இதழ்களை 10 கிராம் எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு 1/4 லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி 2 வேளை குடித்துவர உடல் சூடு தணியும்.

தாமரை விதைகள் நன்றாகக் காய்ந்ததாக ஒரு கையளவு எடுத்து 1 டம்ளர் பசும் பாலில் 12 மணிநேரம் இரவில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் இந்தப் பாலை மட்டும் குடித்துவர, உடல் குளிர்ச்சி அடைந்து மூத்திரம் வெள்ளையாகப் பிரிந்து போகும்.

தாமரை விதையை 1 கிராம் எடுத்து அதை 1 டம்ளர் பாலில் கலந்து 2 வேளை குடித்துவர உடல் சூடு தணிந்து தாது வளர்ச்சி அடையும்.

கல்தாமரையை பாலில் அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து 1 டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை குடித்து வர, வீரிய விருத்தியும், தேக பலமும் உண்டாகும். (குட்ட வியாதி உள்ளவர்களுக்கு இது ஆகாது.)

நக‌ங்க‌ள் ‌மீது தேவை கவன‌ம்

பல‌ர் முக‌த்தை அழகா‌க்‌கி‌க் கொ‌ள்வ‌தி‌ல் ‌நிறைய கவன‌ம் செலு‌த்துவா‌ர்க‌‌ள். ஆனா‌ல் நக‌ங்களை கவ‌னி‌க்காமலே ‌வி‌ட்டு‌விடுவா‌ர்க‌ள். அக‌த்‌தி‌ன் அழகு முக‌த்‌தி‌ல் தெ‌ரிவது போல, உட‌ல்‌நிலையை நா‌ம் நக‌த்‌தி‌ல் தெ‌ரி‌ந்து கொ‌ள்ளலா‌ம்.

ஏ‌ன் எ‌னி‌ல் உட‌லி‌ல் ஏ‌ற்படு‌ம் ப‌ல்வேறு ‌பிர‌ச்‌சினைகளை நக‌ம் நம‌க்கு எடு‌த்து‌க் காட‌்டு‌கிறது. உட‌லி‌ல் ஏ‌ற்படு‌ம் ஒ‌வ்வொரு பா‌தி‌ப்‌பி‌ற்கு‌ம் ஒ‌வ்வொரு ‌விதமான ‌பிர‌ச்‌சினைகளை நக‌ம் கா‌ட்டு‌கிறது. ஏதேனு‌ம் ஒரு உட‌ல் உபாதை‌க்காக நா‌ம் மரு‌த்துவ‌ரிட‌ம் செ‌ல்லு‌ம் போது, ‌சில‌ர் ந‌ம் கை ‌விர‌ல்களை ப‌‌ரிசோ‌தி‌ப்பா‌ர்க‌ள். ஏனெ‌னி‌ல் அவ‌ர்க‌ள் ச‌ந்தே‌கி‌க்கு‌ம் நோ‌ய் நம‌க்கு ஏ‌ற்ப‌ட்டிரு‌ப்‌பி‌ன் அத‌ற்கான ஆதார‌ம் நக‌‌ங்க‌ளி‌ல் தெ‌ரி‌கிறதா எ‌‌ன்பதை அ‌றி‌ந்து கொ‌ள்ள‌த்தா‌ன்.

கோடை‌‌க் கால நோ‌ய்‌களை‌த் த‌வி‌ர்‌க்க...

வெயில் காலம் வந்துவிட்டால், வெக்கைக்குப் பஞ்சமிருக்கிறதோ இல்லையோ, வெயில் கால நோய்களுக்கு ஒரு பஞ்சமும் இல்லை. வெயில் காலத்தில் ஏற்படும் நோய்கள் பொதுவாக நம் வீட்டு வாண்டுகளைத் தான் பெரும்பாலும் வாட்டி எடுக்கிறது. வெயில் காலத்தில் ஏற்படும் நோய்க்கு வெயிலை குறைசொன்னால் மட்டும் போதாது. நோய் ஏற்படும் அளவிற்கு நம் உடம்பை கவனிக்காமல் விடுவதில்தான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது...

வெயில் காலங்களில் ஏற்படும் நோய்கள் :

ஃபாஸ்ட் புட் விபரீதம்

இந்தியாவில் துரித உணவை சாப்பிடுகிறவர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. காய்கறிகள் சிப்ஸ்களாகவும், ப்ரெஞ்ச் ஃபிரையாகவும் உட்கொள்ளப்படுகின்றன. இதனால் சிறுவயதிலேயே உடல்பருமன் நோய் அதிகரித்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் கூல்டிரிங்க்ஸ்களின் உபயோகம் முந்நூறு மடங்கு அதிகரித்துள்ளது.

சிறுவர்கள் தினமும் செலவழிக்கும் கலோரியின் அளவை விட நூற்றுபத்து முதல் நூற்று எண்பது கலோரிகள் அதிகமாக உட்கொள்கின்றனர். இதனால் பத்து ஆண்டுகளில் இவர்களது எடை இருபத்தைந்து கிலோ அதிகரித்து விடுகிறது. ஒரு தலைமுறை இடைவெளியில் இருபது சதவீத அளவிற்கு அதிகமாக கலோரிகள் உட்கொள்ளப்பட்டுள்ளன.

இதனால் உடற்பருமன், இரத்தக்கொதிப்பு, சர்க்கரை, இருதயநோய்கள் என பல நோய்கள் சிறுவயதிலேயே ஏற்படுகின்றன. இந்த உடற்பருமனை உடற்பயிற்சியாலும் பிற்காலத்தில் கட்டுப்படுத்த முடிவதில்லை என்பதே உண்மை.

புற்றுநோயைத் தடுக்கும் ஆப்பிள்

“நாளும் ஒரு ஆப்பிள் பழத்தை நாடும் மனிதனை மருத்துவன் நாடமாட்டான்” என்றொரு பழமொழி உண்டு. பழமொழிகள் பொய்ப்பதில்லை என்பது மறுபடியும் மெய்பிக்கப்பட்டிருக்கிறது.

கார்னல் பல்கலைக்கழக பேராசிரியர் ரூய் ஹாய் லியு என்பவர் ஆப்பிள் பழம் பெண்களின் மார்பகப் புற்றுநோயை தடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக தன்னுடைய ஆய்வுக்கட்டுரையில் தெரிவிக்கிறார்.

ஆப்பிள் பழம் மட்டுமல்லாது காய்கறிகளும் இதே பண்புகளைக் கொண்டிருப்பதாக இவரது கட்டுரை தெளிவாக்குகிறது. புதிய ஆப்பிள் பழச்சாறு கொடுக்கப்பட்டதால் எலிகளின் பால்சுரப்பிகளில் தோன்றிய கட்டிகள் சிறியதாகிப்போயின.

குடும்ப நல நீதிமன்றங்கள்

1984 ஆம் ஆண்டு குடும்ப நீதிமன்றங்கள் சட்டம் நிறைவேற்றப்பட்டது. உயர்நீதிமன்றங்களைக் கலந்தாலோசித்து, மாநிலங்கள் குடும்ப நீதிமன்றங்களை அமைக்க வழிவகை செய்யப்பட்டது.

வீரரா, சவார்க்கர்? - சிறை சொல்லும் வரலாறு

மூஞ்சே, ஹெட்கேவர், கோல்வால்கர் தொடங்கி நிறைய பேர் இருக்கும் போது, 'ஆர்.எஸ்.எஸ். & கோ'வினரால் அதிகம் அடையாளம் காட்டப்படுவோர் வீரசிவாஜி, வீரசவார்க்கர், பாலகங்காதர திலக் ஆகியோரே. அதற்குக் காரணமும் இருக்கவே செய்கிறது. முடிசூடுவதற்காக பார்ப்பனர்களிடம் அடி பணிந்த சிவாஜியாக இருந்தாலும், காங்கிரஸ் மாநாட்டில் செருப்பை விட்டெறிந்து ரகளையில் ஈடுபட்ட 'திலக்'காக இருந்தாலும், காந்தியார் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சவார்க்கராக இருந்தாலும் அவற்றை மறைத்து தேசியம் என்ற பொதுத் தலைப்பின்கீழ் இவர்களை அறிமுகப்படுத்தலாம் என்பதுதான் அது. இந்துத்வா என்னும் நஞ்சை புகட்டுவதற்காக சேர்க்கப்படும் தேசபக்தித் தேனாக இருக்கும் சவார்க்கருக்கு ஆபத்து என்றால், அவர்கள் தாண்டிக் குதிக்கத் தகுந்த காரணமில்லையா இது?

அக்பரின் மதச்சார்பின்மை

அக்பர் தன்னுடைய தாயிடம் பேரன்பும் பெருமதிப்பும் கொண்டவர். அவர் சொல்லை எப்போதும் தட்டாதவர். ஒரு முறை ஆக்ராவுக்கும் லாகூருக்கும் இடையே உள்ள ஓர் ஆற்றைக் கடந்து செல்ல வேண்டியிருந்தபோது, பணியாளர்களுடன் சேர்ந்து அக்பரும் தாயின் பல்லக்கை சுமந்திருக்கிறார். அந்தளவிற்குத் தாயை மதித்து வந்தார். அப்படிப்பட்டவர் ஒரு முறை தாயின் கட்டளையை ஏற்க மறுத்து விட்டார்.

போர்ச்சுகீசியர் ஒரு முறை முஸ்லீம்களின் கப்பல் ஒன்றைக் கைப்பற்றினார்கள். அந்தக் கப்பலில் கிடைத்த ‘குர்ஆன்’ நூலை ஒரு நாயின் கழுத்தில் கட்டி, ஓர் மூஜ் நகரத் தெருவிவிலே விட்டு, அடித்துத் துரத்தி விட்டார்கள். இதற்குப் பதில் நடவடிக்கையாக கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளை ஒரு கழுதையின் கழுத்தில் கட்டியடிக்க வேண்டும் என்று அக்பரின் தாய் அவரிடம் கூறினார்.

அதற்கு அக்பர், “அக்கிரமத்திற்கு அக்கிரமத்தால் பதிலளிப்பது ஓர் அரசனுக்கு அழகல்ல. எந்த மதத்தைப் பழித்துக் கூறினாலும் அது கடவுளை அவமதிப்பதேயாகும். எனவே உயிரற்ற அந்தப் புத்தகத்தின் மீது வஞ்சம் தீர்த்து, அந்த மதத்தினரைப் பழிக்க நான் விரும்பவிலை” என்று கூறிவிட்டார். 

இந்திய சுதந்திரப் போர் வரலாறு காலவரிசைப்படி

1498 - வாஸ்கோடகாமா இந்திய வருகை

1600 - இந்தியாவில் வாணிபம் செய்ய கிழக்கிந்திய கம்பெனிக்கு அனுமதி

1615 - ஜஹாங்கீர் அரண்மனைக்கு கம்பெனியார் வருகை

1757 - பிளாசி யுத்தம்

1770 - வங்காளப் பஞ்சம், சன்னியாசி எழுச்சி

1779 - கட்டபொம்மன் தூக்கு

1806 - வேலூர் கோட்டை புரட்சி

1857 - முதல் இந்திய சுதந்திரப் போர்

இந்திய தேசியக் கொடி உருவான வரலாறு

20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்கான இந்திய சுதந்திர போராட்டத்தில், மக்களின் போராட்ட ஆளுமையை தகுந்தவாறு ஒருமைப்படுத்த, ஒரு கொடி தேவைப்பட்டது. 1904ஆம் ஆண்டு, சுவாமி விவேகானந்தரைக் குருவாக கொண்ட நிவேதிதா அவர்கள் முதன்முதலாக, ஒரு கொடியை உருவாக்கினார். அதுவே பின்னர் நிவேதிதாவின் கொடி என கூற்று கொண்டது.

கோல்கத்தாவில் பார்சி பாகன் சதுக்கத்தில் 1906 ம் ஆண்டு ஓர் இந்தியக்கொடி ஏற்றபட்டது. அது சிவப்பு, பச்சை, மஞ்சள் என்று கிடைமட்டமாக அமைந்து, பச்சை நிறம் மேலிலும், இளஞ்சிவப்பு நடுவிலும், சிவப்பு அடியிலும் கொண்டது. பச்சை நிறம் இசுலாமியத்தை குறிப்பதாகவும்,

மறக்கடிக்கப்பட்ட மாவீரன் திப்புசுல்தான்

1799 மே மாதம் நான்காம் தேதி சாதாரண சிப்பாய் போல் ஆங்கிலேய அந்நிய படைக்கெதிராக களமிறங்கி தனது உடலில் கடைசி மூச்சு நிற்கும் வரை உறுதியுடன் போராடி உயிர் தியாகியானார் மாவீரன் திப்பு. அந்த வீரத் திருமகனின் வரலாற்றை நினைவு கூறுவது இந்திய தேசத்தின் விடுதலை வரலாற்றையே நினைவு கூறுவதற்கு சமமாகும்.

‘கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்’ - திப்புசுல்தானின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இதுவாகும். இந்தியாவில் ஆங்கிலேயர்களின் உள்ளங்களில் பீதியை விதைத்த தீரர்தான் திப்பு. அதனால்தான் திப்பு சுல்தான் தனது இன்னுயிரை தியாகம் செய்த வேளையில் அவரின் வீரமரணத்தைக் கேள்விப்பட்டு மனம் மகிழ்ந்த ஆங்கிலேய ஜெனரல் ஹாரிஸ் இவ்வாறு கூறினான்: ‘இன்று முதல் இந்தியா நம்முடையது’ என்று.

திப்பு சுல்தான் ஆட்சியிலும் பார்ப்பன ஆதிக்கம்

கடந்த இரண்டாயிரம் ஆண்டு இந்திய வரலாற்றில் பார்ப்பனர்கள் ஆதிக்கம் இல்லாத அரசுகளைக் காண இயலவில்லை. இந்தியாவை அரசாண்ட இசுலாமியர் ஆட்சி நிருவாகங்களிலும் பார்ப்பனர்களின் ஆதிக்கம் இருந்தது என்பதை வரலாறு நமக்குக் காட்டுகிறது. அந்த வகையில் 1760 முதல் 1800 வரை மைசூரை ஆண்ட ஐதர் அலி, அவருடைய மகன் திப்பு சுல்தான் ஆகியோரின் ஆட்சிக் காலங்களில் அரசு நிருவாகங்களில் பார்ப்பனர் பெற்றிருந்த ஆதிக்கத்தை இக்கட்டுரையில் காணலாம்.

ஐதர்அலி, திப்புசுல்தான் ஆகிய இருவரும் சிருங்கேரி சங்கராச்சாரிக்கு எழுதிய மடல்களையும், அவற்றுக்குப் பதிலளித்துச் சிருங்கேரி சங்கராச்சாரி எழுதிய மடல்களையும் ஆய்ந்து திருமதி ஜலஜா சக்திதாசன் என்கிற பார்ப்பன அம்மையார் ‘திப்பு மதவெறியரா?’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் நூலாக எழுதியுள்ளார். அந்நூலிலிருந்து சில முக்கியப் பகுதிகளை மட்டும் தமிழாக்கம் செய்து இங்கே தருகிறோம். ஐதர்அலி சிருங்கேரி சங்கராச்சாரிக்கு எழுதிய மடல். மடல் எண். 42 : (1760 - 1761)

தமிழக முதல்வருக்கு பாப்புலர் ப்ரண்ட் கோரிக்கை!!

        மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்கும் ஜெயலலிதா அவர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

இதன் மாநில பொதுச்செயலாளர் எம்.நிஜாம் முஹைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

மாற்றத்தை விரும்பியே தமிழக மக்கள் வாக்களித்துள்ளார்கள். மாற்றத்திற்கு வித்திடும் வகையில் மே 16 அன்று முதல்வராக பொறுப்பேற்றவுடன் நிறைவேற்றப்பட்ட உத்தரவுகளும் சிறப்பான தொடக்கமாக அமைந்தது.

தேசிய அளவில் இஸ்லாத்தை அறிவோம் பயிற்சி முகாம் - PFI

21 May 2011

இஸ்லாம் காட்டிதந்த வாழ்வியல் நெறியை கடைபிடிக்கவும், இன்றைய சமூகத்தில் நடைபெறும் சீர்கேட்டை அகற்றும் வழிமுறைகள் பற்றியும், ஒரு குடும்பத்தை இஸ்லாமிய ரீதியாக நடத்திச் செல்வது பற்றியும், தனி மனித வாழ்வில் மாற்றம் கொண்டு வருவது மற்றும் அதன் மூலம் சமூகத்தில் மாற்றம் கொண்டு வருதல் போன்ற விஷயங்களை போதிக்கும் முகமாக இஸ்லாத்தை அறிவோம் என்ற பயிற்சி முகாமை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக இந்தியா முழுவதும் நடத்தப்பட உள்ளது.

இறைத்தூது.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவன் மனிதர்களுக்கு நேர்வழி காட்டிடுவான் வேண்டி எண்ணற்ற நபிமார்களை அனுப்பி வைத்தான். ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு வழிகாட்டி – இறைத்தூதர் அனுப்பப்பட்டுள்ளார். இறைவனின் தூதர்கள் அத்தனை பேரும் சீரிய ஒழுக்கங்களின் சிகரங்களாய் திகழ்ந்தனர். அவர்களை இறைவன், தனது வழிகாட்டுதலை மனிதர்களுக்கு வழங்குவதற்காக பயிற்றுவித்தான். அவர்களது நேர்மை, நாணயம், அறிவின் ஆழம் இவைகள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவைகளாக இருந்தன. அவர்கள் இறைவனின் வழிகாட்டுதல்களை மீறி நடந்ததே இல்லை. இந்த வகையில் அவர்கள் பாவங்களே செய்தவர்களல்ல எனக் கொள்ளலாம். ஆனால் அவர்களும் மனிதர்கள் என்ற வகையில் தங்களை அறியாமல் சில தவறுகளைச் செய்திருக்கலாம். சில முடிவுகளில் அவர்கள் தவறி இருக்கலாம். ஆனால் அவர்கள் இறைவன் வகுத்துத் தந்த வரையறைகளை மீறியதே கிடையாது.

மீண்டும் ஒலிக்குமா ? அஹமது அலியின் குரல் !!

ர் உயிர் ஒரு நபர் 1950 நவம்பர் 14 ம் நாள் என் வி. முகமது அலி மற்றும் கதீஜா பீவி தம்பதியருக்கு மகனாக பிறந்தார். அவருடைய பெயர் "அஹமது அலி" என்பதாகும். மக்களால் "பழனி பாபா" என்று அழைக்கப்பட்டார் .பழனியிலிருந்து 4 கி.மீ தொலைவில் திண்டுக்கல் செல்லும் பாதையில் உள்ளது புது ஆயக்குடி என்னும் கிராமம். இதுதான் தாய்வழி பூர்வீகம். தந்தை நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்தவர். பெற்றோரின் அரவணைப்பில் சீரும் சிறப்புமாக வாழ்ந்த பாபாவும், அவரது சகோதர சகோதரிகளும் குன்னூரில் உள்ள செயிண்ட் ஜோஸப் காண்வென்ட்டில் கல்வி பயின்றனர். பெற்றோர்களின் மறைவுக்குப்பின் புது ஆயக்குடியில் உள்ள முதலாளி குடும்பம் என்று சொல்லப்படும் குடும்பத்தில் சின்னத்தம்பி என்று அழைக்கப்படும் தாய்மாமன் அப்துல் ரஹ்மான் அவர்களது பராமரிப்பில் பழனி கல்லூரியில் பட்டப்படிப்பை தொடங்கினார். படிக்கும் காலத்திலேயே தொடங்கிய துணிச்சலான பொதுவாழ்க்கை நடவடிக்கைகளால் குடும்பத்தார்களுக்கு சங்கடம் என்பதால் பாசப்பிணைப்புகளை விட்டு விலகி வாழ்ந்து வந்தார். இல்லற வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாமல் தனக்கென ஒரு பாதையை வகுத்துக் கொண்டவர் பாபா. 

துப்பாக்கிகளும், துர்பாக்கியங்களும்!!

May 20, உலகமகா பயங்கரவாதி என சித்தரிக்கப்பட்ட பின்லேடன் கொல்லப்பட்டு விட்டார்.

இனி உலக மக்கள் அரசியல், கலாசார ரீதியான வாழ்கையை சுதந்திரமாக எந்தவித அச்சுறுத்தலும் இன்றி வாழலாம் என்ற இந்த அறிவிப்பு ரஷ்யாவிடம் இருந்து வந்தால் ஆச்சரியம் இல்லை.

ரஷ்யாவின் நாடு பிடிக்கும் கொள்கைக்கு எதிராக அணி திரண்டு போராடியவரை முகம் மாற்றி, சாயம் ஏற்றி பயங்கரவாதியாக அடையாளப்படுத்திய துரதிஷ்டத்தை அரசியல் அறிவுடையோர் எளிதில் புரிந்து கொள்வார்கள்.

இந்திய அரசியலில் இருந்து பாரதிய ஜனதாவுக்கு குட்பை!!

May 20, தமிழ் நாட்டில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளில் தமிழக மக்கள் குறிப்பாக இந்து இனவாதத்தை அடியோடு நிராகரிக்கும் மனப்பாங்கை துல்லியமாக வெளிப்படுத்தியுள்ளனர்.

பாரதிய ஜனதா கட்சியின் படுதோல்வி இதற்கு சிறந்த சான்று. அதன் முன்னிலை தலைவர்கள் டிபோசிட்டை இழந்தது தமிழ் நாட்டில் ஹிந்துத்துவா அரசியல் என்பது வெறும் கனவே என்பதை தெளிவுபடுத்தி உள்ளது.

ஆறு பலஸ்தீனர்களைக் கடத்திய இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம்!



நேற்று (வியாழக்கிழமை - 19.05.2011) அதிகாலை மேற்குக் கரைப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆறு பலஸ்தீனர்களை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம் கடத்திச் சென்றுள்ளது.

'தேடுதல் வேட்டை' என்ற போர்வையில் அதிகாலை நேரத்தில் பலஸ்தீனர்களின் வீடுகளில் அத்துமீறிப் பிரவேசித்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம், அவ்வீடுகளில் இருந்த பெண்களையும் குழந்தைகளையும் அச்சுறுத்திப் பெரும் அட்டகாசம் புரிந்ததாக உள்ளூர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜாதிவாரி ஜனத்தொகை மற்றும் ஏழைகள் கணக்கெடுப்பு : மத்திய அரசு அனுமதி!


ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ளவர்கள் கணக்கெடுப்பு நடத்த, மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. ஏழை மக்களைக் கண்டறிய,  இந்திய அளவில் கணக்கெடுப்பு நடத்தப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
 இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜனத்தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படுகிறது.  ஆனால் ஜாதி அடிப்படையில் எடுக்கப்படுவதில்லை. 80 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் அரசால் 1931ஆம் ஆண்டு, ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. 
நேற்று டெல்லியில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ளவர்கள்கணக்கெடுப்பு நடத்த முடிவெடுக்கப்பட்டது.