Wednesday 22 May 2013

காலித் முஜாஹித் மரணம்: விசாரணை நடத்தக் கோரி உ.பி மாநில சட்டப்பேரவையை நோக்கி எஸ்.டி.பி.ஐ பேரணி!


உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில் 2008 டிசம்பரில் எஸ்.டி.எஃப் படையினரால் கைதுச் செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர் காலித் முஜாஹிதின் மர்மமான கஸ்டடி மரணம் குறித்து விசாரணை நடத்தக்கோரி சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா(எஸ்.டி.பி.ஐ) உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவையை நோக்கி பேரணி நடத்தியது.

யாசின் மாலிக்கை அழைத்தது எப்படி பிழையாகும்? - சீமான்!


சென்னை: "ஜம்மு – காஷ்மீர் விடுதலை முன்னணி  தலைவர் யாசின் மாலிக்கை அழைத்து இந்திய அரசு பேசினால், அது சரி! நாங்கள் அழைத்து பேச வைத்தால் அது மட்டும் தவறா?" என நாம் தமிழர் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. கடலூரில் மே-18 எழுச்சி நாள் கூட்டத்தில் காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக்கை நாம் தமிழர் கட்சி அழைத்து பேசவைத்தது தொடர்பாக பல்வேறு தரப்பிலிருந்து ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுவருகிறது. சீமானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது.

இஷ்ரத் ஜஹான் நிரபராதி : சரத்பவார்!


மும்பை: குஜராத் போலீஸ் போலி என்கவுண்டர் மூலம் கொலைச் செய்த மும்பை கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் நிரபராதியான கல்லூரி மாணவி என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மத்திய அமைச்சருமான சரத் பவார் கூறியுள்ளார்.

போலி என்கவுண்டரில் போலீஸ் என்னை கொலைச் செய்ய முயன்றது – லியாகத் அலி ஷா!


புதுடெல்லி:போலி என்கவுண்டர் மூலம் டெல்லி போலீஸ் தன்னை கொலைச் செய்ய முயன்றதாக முன்னாள் ஹிஸ்புல் முஜாஹிதீன் உறுப்பினரான லியாகத் அலி ஷா கூறியுள்ளார்.