Tuesday 7 June 2011

அரோரியா துப்பாக்கிச்சூடு - பீஹார் காவல்துறையின் வெறித்தனம்!


Muthupet PFI : பாட்னாபீஹார் மாநிலத்தில் காவல்துறையினர் கொடூரமான முறையில் நடந்து வருகிறார்கள். ஜனதா தளம் கட்சியின் முதல்வர் நிதிஷ் குமார் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டும் சமீபத்தில் பீஹார் மாநிலத்தில் ஆட்சியை பிடித்தார். பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பார்கள், அதே போன்று ஃபாஸிச பயங்கவரவாத கட்சியான பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்துக்கொண்டால் நல்ல சிந்தனைகளா வரப்போகிறது? இந்த நாட்டின் அமைதியை எப்படி சீர்குலைக்கலாம்? முஸ்லிம்களை எப்படி கொன்று குவிக்கலாம்? என்ற சிந்தனை தான் வரும் என்ற அடிப்படையில் கடந்த 6 மாதங்களில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியான அராரியா மாவட்டத்தில் காவல்துறையினர் முஸ்லிம்களுக்கு எதிராக கொடூரமான தாக்குதல்களை இரு வேறு சந்தர்பங்களில் அரங்கேற்றியுள்ளனர்.

பலஸ்தீனயர்களின் மரண சடங்குகளில் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தியது இஸ்ரேல்


Muthupet PFI : இஸ்ரேல் - சிரிய எல்லையில் கூடிய பாலஸ்தீனியர்களின் பேரணியில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 25 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். எவ்வித ஆயுதங்களமற்று நிராயுத பாணியாக இருந்த மக்கள் மீது இஸ்ரேல் துருப்புக்கள் பதுங்கியிருந்து நடத்திய இத்தாக்குதலின் அகோரத்தை அல்ஜசீரா தொலைக்காட்சி படம்பிடித்து வீடீயோ காட்சிகளாக வெளியிட்டுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய வியாதி ஊழல் - எப்படி ஒழிப்பது? இளைஞர்கள் கேட்கின்றனர் - அப்துல் கலாம்


Muthupet PFI : நாட்டின் மிகப்பெரிய வியாதியாக ஊழல் உள்ளது அதை எப்படி ஒழிப்பது என இளைஞர்கள் கேட்கின்றனர் என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்தார். விழுப்புரத்தில் சமூக நல கூட்டமைப்புகள் சார்பில் 2020ல், விழுப்புரத்தின் முன்னேற்றம் என்ற தலைப்பில் (லீடு விழுப்புரம் 2020) நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசுகையில்;

விழுப்புரத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல, "லீடு விழுப்புரம் 2020' திட்டத்தை ஒருங்கிணைந்து செயல்படுத்துவது சிறப்பம்சம். இத்திட்டத்தின் மூலம், 6.5 கோடி மரக்கன்றுகளை நட்டு சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் செயல், பாராட்டத்தக்கது. ஒவ்வொரு மரமும், ஓராண்டில் 20 கிலோ கிராம் கார்பன் டை ஆக்சைடை உள்வாங்கி அழிக்கிறது. 14 கிலோ ஆக்சிஜனை வெளியிடுகிறது.விழுப்புரத்தில் நட உள்ள, 6.5 கோடி மரக்கன்றுகள், 15 லட்சம் டன் கார்பன் டை ஆக்சைடை அழித்து, 10 லட்சம் டன் ஆக்சிஜனை வெளியிடும். சுற்றுச்சூழலை பாதுகாத்து, நாட்டை வளப்படுத்தும் நிலைப்பாட்டை, மக்களிடம் கொண்டு வர வேண்டும்.

இது தான் இவர்களது ஊழலுக்கு எதிரான போரா(ஆ)ட்டம் !!!

Muthupet PFI :பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷ்மா சுவவராஜ், பொதுமக்கள் முன்னிலையில் நள்ளிரவில் ஆடிய நடனம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சவூதியில் மதுபானம் விற்ற இலங்கையருக்குக் கடும்தண்டனை...


சவூதி அரேபியாவில் வசித்துவந்த இலங்கையர் ஒருவர் அங்கு மதுபான விற்பனையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டார். குற்றம் நிரூபணமானதையடுத்து அவருக்கு சவூதி அராபிய நீதிமன்றம் ஐந்து தவணைகளில் 430 கசையடிகளும் ஐந்து வருட சிறைத் தண்டனையும் வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.
சவூதி அரேபியாவில் மதுபானம் அருந்துவதோ விற்பனை செய்வதோ முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி, இச்செயல்கள் தண்டனைக்குரிய குற்றமாகவும் கருதப்பட்டு வருகிறது.

சுதந்திர தின அணிவகுப்புக்கான பயிற்சிகள்...


வாருங்கள் சுதந்திரத்தின் காவலர்களாக! என்ற முழக்கத்தோடு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தமிழகத்தில் கடந்த 3 வருடங்களாக சுதந்திர தின அணிவகுப்பு நடத்தி வருகிறது. தீண்டாமை இல்லாத இந்தியா, வகுப்பு வாதம் இல்லாத‌ ஊழல் இல்லாத இந்தியா உருவாக்கப்பட வேண்டும் என்றும், அனைத்து சமுதாய மக்களுக்கு குறிப்பாக முஸ்லிம் சமுதாய மக்களுக்கு சுதந்திர உணர்வை ஊட்ட வேண்டும்,

துபாயில் இஸ்லாமிய சமூக நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடக்கிறது


Emirates India Fraternity Forum (EIFF) நடத்தும்

Better Family! Better Society!!

இஸ்லாமிய சமூக நிகழ்ச்சி
நாள் : 10.06.2011 (வெள்ளிக்கிழமை)
நேரம் : மாலை சரியாக 6.00 மணி முதல் 9.00 மணி வரை
இடம் : சென்ட்ரல் ஸ்கூல், NMC மருத்துவமனை அருகில், அல் கிஸைஸ், துபாய்

உரை தலைப்புகள் :

“நம்மை நாமே புனரமைப்போம்!”  -  சகோ.  வலசை ஃபைஸல்

“குடும்பத்தைப் புனரமைப்போம்!” –  சகோ.  எம்.எஸ். அப்துல் ஹமீது

“சமூகத்தைப் புனரமைப்போம்!”    -  சகோ.  செய்யது அலீ

நம்மை நாமே சுயமாய் அறிந்து…
குடும்பத்தின் குதூகலத்தில் மகிழ்ந்து…
சமூகத்தைப் புடம் போட்டிட…
சங்கமிப்போம் ஒன்றாய்…!

குடும்பத்துடன் பங்கேற்கலாம்.  பெண்களுக்குத் தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.

மேலதிக விவரங்களுக்கு தொடர்பு கொள்க : 050 – 4265783
குறிப்பு : மிகச் சரியாக மாலை 6.00 மணிக்கு நிகழ்ச்சி துவங்கும்.

இப்படிக்கு,
செயலாளர்
Emirates Inida Fraternity Forum (EIFF)

கோவையில் காந்தி சிலை உடைப்பு: பாரதீய சேனா அமைப்பினர் இருவர் கைது...

கோவை: காந்தி சிலை உடைப்பு சம்பவம் தொடர்பாக பாரதீய சேனா அமைப்பைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கோவை மாநகராட்சியின் பராமரிப்பில் உள்ள காந்தி பூங்காவில், காந்தியடிகளின் சிலை வைக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இச் சிலை சேதப்படுத்தப்பட்டது. இதில் சிலையின் தலைப் பகுதி தனியே உடைந்து விழுந்தது. இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. மாநகரக் காவல் ஆணையர் சி.சைலேந்திரபாபு, ஆர்.எஸ்.புரம் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் மற்றும் போலீஸôர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இஸ்லாமிய உடையில் கால்பந்து ஆட ஈரான் மகளிர் அணிக்கு தடை


டெஹ்ரான்:இஸ்லாமிய உடையில் கால்பந்து போட்டியில் கலந்துக்கொள்ள களமிறங்கிய மகளிர் அணியினருக்கு தடை விதித்த நடவடிக்கைக்கு எதிராக ஈரான் ஃபிஃபாவுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

ஒலிம்பிக் தகுதிச்சுற்றுப்போட்டி ஜோர்டானின் தலைநகர் அம்மானில் நடைபெற்றது.கடந்த வெள்ளிக்கிழமை நடந்த போட்டியில் ஜோர்டான் அணிக்கு எதிராக ஆடுவதற்கு ஈரான் கால்பந்தாட்ட மகளிர் அணியினர் கண்ணியமிக்க இஸ்லாமிய ஆடையை அணிந்தவாறு களமிறங்கினர். அப்பொழுது போட்டியை நடத்தும் அதிகாரிகள் அவர்களுக்கு ஆடுவதற்கு தடை விதித்தனர்.

க்ரிமினல் குற்றவாளியான ராம்தேவின் உதவியாளர் தலைமறைவு


புதுடெல்லி:ஊழல் மற்றும் கறுப்புப்பணத்திற்கு எதிராக உண்ணாவிரதப்போராட்டம் நடத்திய பாபா ராம்தேவின் நெருங்கிய உதவியாளர் பாலகிருஷ்ணா நேபாளத்தில் க்ரிமினல் குற்றவாளியாவார்.இவர் தற்பொழுது தலைமறைவாகிவிட்டார்.

ராம்லீலா மைதானத்தில் ராம்தேவ் உண்ணாவிரதப்போராட்டம் துவக்கிய நாளில் மாலை நான்குமணி அளவில் பாலகிருஷ்ணா தலைமறைவாகிவிட்டார். உண்ணாவிரத போராட்டம் துவங்கி மாலையில் முடித்துக்கொள்வதாக ராம்தேவிற்காக மத்திய அமைச்சர்களுக்கு கடிதம் எழுதியவர் பாலகிருஷ்ணா ஆவார்.

ராம்தேவ்: போராட்ட பந்தலை தீக்கிரையாக்கி குஜராத் மாடல் இனப்படுகொலைக்கு சதி திட்டம் தீட்டிய ஆர்.எஸ்.எஸ்-திடுக்கிடும் தகவல்


புதுடெல்லி:ஊழல் மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிராக ஹைடெக் உண்ணாவிரத போராட்டம் நடத்திய ஆர்.எஸ்.எஸ்ஸின் யோகா குரு பாபா ராம்தேவின் ராம்லீலா மைதான போராட்ட பந்தலை தீக்கிரையாக்கி குஜராத் கோத்ராவில் ரயில் எரிப்பை தொடர்ந்து ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொடூரமாக இனப்படு கொலை செய்தது போல் இனப்படு கொலைக்கு ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கம் சதித்திட்டம் தீட்டிய திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.