Tuesday 31 May 2011

பெற்றோரின் கவனக்குறைவால் 3 வயது சிறுவன் பூட்டிய காருக்குள் மரணம்!


சென்னை பல்லாவரம் புறநகர் பகுதியில் வசிக்கும் நியாமதுல்லா (37) மற்றும் அவரது மனைவி மும்தாஜ் பேகம் (36) உறவினரின் மரணத்தையொட்டி துக்கம் விசாரிக்க திருவிக நகருக்கு தங்கள் மூன்று வயது மகன் அஸ்மதுல்லாவுடன் சென்றுள்ளனர்.
பகல் 1:00 மணியளவில் உறவினரின் வீட்டுக்குச்சென்ற அவர்கள், மகன் காரில் உறங்கியதைக் கவனிக்காமல் கணவருடன் சென்றிருக்கூடும் என்று மனைவியும், மனைவியுடன் இருக்கக்கூடும் என்று கணவரும் நினைத்துக் கொண்டு இருந்துள்ளனர்.

துக்கவீட்டில் கூட்டம் அதிகமாக இருந்ததால் இருவரும் மூன்றுமணி நேரம் கழித்தே சந்தித்துள்ளனர். அப்போது குழந்தை எங்கே என்று ஒருவரை ஒருவர் விசாரிக்கும்போதுதான் பின்சீட்டின் உறங்கியதை உணர்ந்து பதறியபடி காரை நோக்கிச்சென்றுள்ளனர்.

சிறுமியை கற்பழித்த இருவருவருக்கு நடுத்தெருவில் தூக்குதண்டனை!


ஈரான் நாட்டில் 9 வயது சிறுமியை கற்பழித்த இருவருக்கு நடுத்தெருவில் மக்கள் பார்வையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஈரான் நாட்டில் பெண்களுக்கு எதிரான மற்றும் விபச்சார வழக்கிற்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். சில மாதங்களுக்கு முன் 9 வயது சிறுமியை கற்பழித்து அதை வீடியோ எடுத்த வழக்கில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு நேற்று தெருவில் மக்கள் முன்னிலையில் வைத்து தூக்கு நிறைவேற்றப்பட்டது. காவல்துறை வாகனத்தின் மேல் இருவரையும் நிற்க வைத்து பின் தூக்கில் தொங்கவிட்டு பின் வாகனம் நகற்றப்பட்டது. பின் உயிர் பிரிந்தப்பின் இருவது உடலையும் சிறுது நேரம் தொங்கவிடப்பட்டு பின் காவல்துறையினர் உடலை கொண்டு சென்றனர். இதை ஆயிரகணக்கான மக்கள் பார்த்தனர்.

இன்று உலக புகையிலை எதிர்ப்பு நாள்!

உலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் இன்று கடைபிடிக்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சேர்ந்து 1987 ம் ஆண்டு மே மாதம் 31 ஆம் நாளை சிறப்பு நாளாக அறிவித்தது.

உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இச்சிறப்பு நாளின் அறிவிப்பு மூலம் உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் புகையிலை சம்பந்தமான சுமார் 3.5 மில்லியன் இறப்புகளைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கிறது. 

பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் இரண்டாவது இடம் பிடித்தவர்க்கு பாப்புலர் ப்ரண்ட் பாராட்டு...


பத்தாம் வகுப்பு பொது தேர்வில் மேலப்பாளைய மாணவன் சதாம் உசேன் மாநில அளவில் 495  மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்தில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். மேலும் மாவட்ட அளவில் முதலும் பிடிதுள்ளார்.நெல்லை மாவட்ட பாப்புலர் ப்ரண்ட் சார்பாக  இவரை பாராட்டிகேடயமும் பரிசும் வழங்கியது .இந்த நிகழ்ச்சியில் பாப்புலர் ப்ரண்ட் மாவட்ட செயலாளர் ஹைதர் அலி, நகர தலைவர் மூஸல் காலிம் .நகர செயல்குழு உறுப்பினர் பால் மைதீன் ஆகியோர் கலந்து கொண்டு அந்த மாணவனை வாழ்த்தினர்.

பள்ளி செல்வோம் விழிப்புணர்வு பேரணி...


பெரம்பலூர் மாவட்டம், வி.களத்தூரில் பள்ளி செல்வோம் பிரச்சார பேரணி நடைபெற்றது. கடந்த‌ 29.05.2011 அன்று மாலை 3 மணி அளவில் இப்பேரணி நடைபெற்றது. வி.களத்தூர் சந்தை அருகில் இருக்கின்ற பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அலுவலகம் அருகிலிருந்து இப்பேரணி தொடங்கியது.  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தற்போது மேற்கொண்டு வரும் பிரச்சாரம் "பள்ளி செல்வோம்" என்பதாகும்.


இந்த இரு மாதங்களுக்கு நாடு முழுவதும் கல்வி பற்றி விழிப்புணர்வு பிரச்சாரங்கள்,

நல்லெண்ணையும் அதன் மருத்துவ குணமும்!!


*  நல்லெண்ணைய், சற்றுக் கசப்பும், சிறிது இனிப்பும், காரத் தன்மையும் கொண்டது.

எளிதாக சருமத்துக்குள் ஊடுருவக் கூடியது. அதனால் சருமம் மிருதுவாகவும், போஷாக்குடனும் திகழ உதவுகிறது.

*  நல்லெண்ணைய், சருமத்தின் ஈரப்பதத்தைச் சமப்படுத்துகிறது. உடல் வெப்பத்தைத் தணிக்கிறது. ரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கிறது.

அல் குத்ஸ் ஆக்கிரமிக்கப்பட்டு 44 ஆண்டுகள்...


அல்குத்ஸ் – பைத்துல் முகத்தஸ் – இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களால்  ஆக்கிரமிக்கப்பட்டு   44 ஆண்டுகள் பூர்த்தியாகின்றது அதை நினைவு கூறும் முகமாக பலஸ்தீன் வாலிபர் அமைப்பு -The Muslim Youth Association- நாடு பூராவும் போராட்டங்கள், ஆர்பாட்டங்கள்,  பேரணிகள் ஆகியவற்றை நடாத்துமாறு பலஸ்தீன மக்களை கோரியுள்ளது.    எதிர் வரும் ஜூன் மாதம் 6 ஆம் திகதி பலஸ்தீன் கிழக்கு ஜெருசலத்தில் அமைந்துள்ள அல் குத்ஸ் – பைத்துல் முகத்தஸ்- முஸ்லிம் உம்மாஹ்வின் முதல் கிப்லா,   ஜெருசலம், மேற்கு கரை ஆகியன 1967 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் திகதி இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது.

Know Islam இஸ்லாத்தை அறிந்து கொள்வோம் : தென்காசி கருத்தரங்கம்


know islam workshop
A part of the women audience of Know islam workshop held at Tenkasi (TN)

இஸ்லாத்தை அறிந்து கொள்வோம் எங்கின்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் தென்காசியில் மே 29 அன்று விடிஎஸ்ஆர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பல்வேறு தலைப்புகளில் உரை நிகழ்த்தப்பட்டது. சுமார் 500 பேருக்கும் மேற்பட்டோர் பங்கு பெற்று பயனடைந்துள்ளனர்.
நம்மை சீரமைப்போம் என்கிற தலைப்பில் ஜாஃபர் அலி உஸ்மானி அவர்கள் தனி மனித ஒழுக்கத்தின் அவசியம் குறித்தும் அவை செம்மையாக சீராக பேணப்படாமல் விட்டுவிடப்பட்டால் சீரழிந்து போய்விடும் என்பதை தக்க உதாரணத்துடன் விளக்கினார். ஒரு விவசாய நிலம் முறையாக உழுது களையெடுக்கப்பட்டு நீர் பாசனத்தை சரியான தருணத்தில் பாய்ச்சி கண்ணும் கருத்துமாக உரமிட்டு பயிரிட்டு அருவடை செய்தால் தான் அந்த விவசாயிக்கு எதிர்பார்த்த பலனைத்தரும் அதே போல குழந்தைகளையும் சீரும் சிறப்புமாக வளர்த்தெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

தொடர வேண்டும் இதுபோன்ற பேச்சுவார்த்தைகள்!


May 31, சில நாட்களுக்கு முன் பங்களாதேசில் நடந்த கிரிகெட் போட்டியில்,
இந்திய பாகிஸ்தான் பிரதமர்கள் சந்திப்பின் நல்ல தொடக்கமாக,

இன்று இரு நாட்டின் தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.

மாவீரன் கர்கரே உடைய மரணத்திருக்கு முன் இதுபோல் பேச்சுவார்தைகள் நடக்கும்போதெல்லாம் இந்தியாவில் எங்காவது குண்டுவெடிப்புகள் நடக்கும்.

Monday 30 May 2011

யுவான் ரிட்லி - துணிச்சலின் மறு பெயர்...


உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின் 

யுவான் ரிட்லி (Yvonne Ridley), நம்மில் பலருக்கும் நன்கு தெரிந்த பெயர். பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர். பத்திரிக்கையாளர், சமூக சேவகர், அரசியல்வாதி என்று பல பரிமாணங்களை கொண்டவர். 

இவர் இஸ்லாத்திற்கு வந்த விதம் பற்றி சுருக்கமாக...

அது செப்டம்பர் 2001 ன் பிற்பகுதி, சகோதரி யுவான் ரிட்லி அவர்கள் பிரிட்டனின் சண்டே எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்காக பணியாற்றிய நேரம். உலகம், அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல்களால் ஸ்தம்பித்திருந்த நேரம். அமெரிக்காவின் சந்தேகக் கண்கள் அப்கானிஸ்தான் மீதும், அதனை ஆளும் தாலிபான்களின் மீதும் வலுவாக விழுந்திருந்த சமயம்.

மரியம் பிச்சை மரணத்திற்கு காரணமான லாரி டிரைவர் பிடிபட்டார்...


அமைச்சர் மரியம் பிச்சை மரணத்திற்கு காரணமான லாரி பிடிபட்டது.  லாரி டிரைவரும் பிடிபட்டான்.   லாரி உரிமையாளரையும் கைது செய்து விசாரணை செய்ய போலீஸ் முடிவு செய்துள்ளது.

சென்னையில் எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்பு விழாவிற்காக அமைச்சர் மரியம்பிச்சை, திருச்சியில் இருந்து காரில் கடந்த 23ம் தேதி சென்றபோது, பாடாலூர் அருகே காரும், லாரியும் மோதி விபத்திற்குள்ளானது. 

இந்த விபத்தில் அமைச்சர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்தில் மர்மம் இருப்பதால், சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் முஸ்லிம் பெண் !!!

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் அவர்கள் எல்லோரும் மேற்கத்திய நாடுகளையும் , ஜப்பான், சீனாவையும் சேர்ந்தவர்களாக தான் இருப்பார்கள். முதல் முறையாக பாலஸ்தீனத்தை சேர்ந்த பெண் ஒருவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தது இருக்கிறார். இந்த சாதனையை நிகழ்த்திய முதல் முஸ்லிம் பெண் இவர் ஆவார்.

இவர் பெயர் சுசானே அல் கூபி. 44 வயதான இவர் பாலஸ்தீனத்தை சேர்ந்தவர் என்றபோதிலும் , ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் வசித்து வருகிறார்.

இவர் முதன் முதலில் தான்சானியாவில் உள்ள கிளிமாஞ்சரோ சிகரத்தில் ஏறி, இந்த சிகரத்தில் ஏறிய முதல் அரேபிய பெண் என்ற பெருமை பெற்றார். பிறகு பிரான்சில் உள்ள பிளாங் மலைச் சிகரம், ரஷியாவில் உள்ள எல்புரூஸ் சிகரம் ஆகியவற்றில் ஏறி சாதனை படைத்தார். இப்போது எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தது இருக்கிறார். 

துபாயில் உள்ள போன் அண்ட் ஜாயிண்ட் மையத்தில் துணை தலைவராக பார்த்து வந்த வேலையை மலை ஏறுவதற்காக ராஜினாமா செய்தார். உலகத்தில் முஸ்லிம் பெண்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை காட்டுவதற்காக இந்த முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறேன் என்று கூறுகிறார். 

மோடி ஆட்சியில் "குஜராத்தில்" கடும் குடிநீர் பஞ்சம்!!


குஜராத்தில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவுகிறது.

தலைநகர் அகமதாபாத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பொது குழாயில் குடிநீருக்காக பெண்கள் இப்படி காத்துக்கிடக்கின்றனர்.

மக்கள் உயிர் வாழ அடிப்படை தேவையான தண்ணீர் வசதியை ஒழுங்கு செய்து கொடுக்க முடியாதவன்தான் இனப்படுகொலை பயங்கரவாதி மோடி.

இவர்தான் இந்தியாவின் நம்பர் ஒன் முதல்வராம்,  இந்த மாநிலம்தான் இந்தியாவின் நம்பர் ஒன் மாநிலமாம்,

ஷார்ஜாவில் வெகு சிறப்பாக நடைபெற்ற “ஆரோக்கியமான இஸ்லாமிய குடும்பம்"


எமிரேட்ஸ் இந்தியா ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரம் (EIFF) ஏற்பாடு செய்திருந்த “ஆரோக்கியமான இஸ்லாமிய குடும்பம்” என்ற குடும்ப நிகழ்ச்சி 22.04.11 வெள்ளியன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. ஷார்ஜாவிலுள்ள ரையான் ஸ்டார் இண்டர்நேஷனல் ஸ்கூலில் நடைபெற்ற இந்த இனிய மாலை நிகழ்ச்சியில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பங்குபெற்று பயனடைந்தனர். முன்னதாக, திருமறை வசனங்களை ஓதி சகோ. அப்துல் கஃபூர் அவர்கள் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். பின்னர் சகோ. அப்துல் ஹமீது அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். E.I.F.F.-ன் பணிகள் குறித்த அறிமுகவுரையை அதன் பொருளாளர் சகோ. அஷ்ரஃப் அலீ அவர்கள் நிகழ்த்தினார்.

ஊழல் புரியும் உயர் அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்க சட்டம்?


புதுடெல்லி:ஊழல் புரியும் உயர் அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனை உள்ளிட்ட கடும் தண்டனை வழங்க லோக்பால் மசோதா வரைவில் வழிவகைச்செய்யப்படும் என கருதப்படுகிறது.
டெல்லியில் இன்று(திங்கள்கிழமை) கூடும் லோக்பால் வரைவுக் குழு கூட்டத்தில் இந்தக் கருத்து வலியுறுத்தப்படும் என்று தெரிகிறது.

ஊழல் புரியும் அதிகாரிகளுக்கு குறைந்தது ஒருவருடமாவது தண்டனை வழங்க வழி வகைச்செய்யப்படும் என லோக்பால் மசோதா வரைவு குழுவில் இடம்பெற்றுள்ள மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். ஊழல் குற்றம் சாட்டப்படும் நபரின் பதவி உயர்வதுக்கு ஒப்ப தண்டனையும் கடுமையும் அதிகரிக்கும் வகையில் சட்டம் இயற்றப்படும் என அன்னா ஹஸாரேயின் தலைமையிலான மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

எகிப்து-ஈரா​ன் இடையே உறவில் முன்னேற்றம்​:மேற்குலகம் அஞ்சுகிறது​-ஈரான்


டெஹ்ரான்:எகிப்தின் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கின் வீழ்ச்சிக்கு பிறகு எகிப்து-ஈரான் இடையே வளர்ந்து வரும் உறவு மேற்குலகம்,அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளதாக ஈரானின் பாராளுமன்ற விவகார துறையின் துணை தலைவரான முஹம்மது ரிஸா மிர் தஜ்ஜெத்தினி தெரிவித்துள்ளார்.

எகிப்து – ஈரான் இடையே உறவு பலப்படுவது பிராந்தியத்தின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுக்குறித்து மேற்கு உலகிற்கு நன்றாக தெரியும். ஆதலால் டெஹ்ரான் – கெய்ரோ இடையேயான உறவை முறிக்க அவர்கள் என்ன விலையையும் கொடுக்க தயாராக இருப்பார்கள் என முஹம்மது ரிஸா IRNA செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறுகிறார். சமீபத்தில் எகிப்தின் மத – கலாச்சார துறைகளைச்சார்ந்த பிரபலமானவர்கள் ஈரானுக்கு வருகை தந்து சந்திப்பு நடத்தியதை முஹம்மது ரிஸா சுட்டிக்காட்டுகிறார்.

புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் ஊழலா?

சென்னை : முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான, புதிய அரசின் இரண்டாவது அமைச்சரவை கூட்டம் இன்று கோட்டையில் நடக்கிறது.

இக்கூட்டத்தில் இலவச அரிசி திட்டம், திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு இலவச தங்கம் உள்ளிட்ட திட்டங்களை மக்களுக்கு சேரும் வகையில் அமல்படுத்துவது குறித்து அமைச்சர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்படும்.

பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வான மாணவ, மாணவியருக்கு லேப்-டாப் வழங்குதல், தனியார் பள்ளிகளின் கட்டண நிர்ணயம் தொடர்பான பிரச்னை, கவர்னர் உரையில் இடம் பெறும் திட்டங்கள் ஆகியவை குறித்து விவாதிக்கப்படும்.

எத்தனை காலம்தான் "ஏமாற்றுவார்" இந்த நாட்டிலே!!

சத்தீஷ்கார் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெறுகிறது.

அந்த மாநிலத்தில் உள்ள ரேஷன் கடைகளில் ரூ.5-க்கு 1 கிலோ பருப்பு வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.

அந்த தொடக்க விழாவில் பா.ஜனதா தலைவர் நிதின் கட்காரி கலந்து கொண்டு திட்டத்தை ஆரம்பித்துவைத்தார்.

அந்த விழாவில் பேசிய நிதின் கட்காரி, உலக அளவில் தீவிரவாதம் வளர்ந்து வருவதால் அனைவரும் ஒன்றுபட்டு போராட வேண்டும் என்று தெரிவித்தார். 

Sunday 29 May 2011

வகுப்பு கலவரங்களை தடுக்க ஆணையம்


புதுடெல்லி:வகுப்பு கலவரங்களை தடுக்கவும், சமூகத்தில் நல்லிணக்கத்தை உருவாக்கவும் மத்திய, மாநிலங்கள் அளவில் ஆணையம் உருவாக்கப்படவேண்டும் என மத்திய அரசு நிறைவேற்றவிருக்கும் கலவர தடுப்பு மசோதா கூறுகிறது.
மத்திய அரசுடன் கலந்தாலோசித்து வகுப்பு கலவரங்களை தடுக்க அளவுகோல்களை வெளியிடவும், மறுவாழ்வு திட்டங்களை தயாராக்கவும் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கப்படும் என வரைவு மசோதா தெரிவிக்கிறது.
சேர்மன், துணை சேர்மன் தவிர ஐந்து உறுப்பினர்களை கொண்ட ஆணையத்தில் ஒருவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவராக இருக்கவேண்டும் எனவும், மீதம் 4 பேர் பெண்கள் எனவும் மசோதா கூறுகிறது. ஆணையத்தின் உறுப்பினர்கள் மீது எவ்வித வழக்குகளும் இருக்க கூடாது.

Saturday 28 May 2011

காஸா ரஃபா எல்லையை முழுமையாகத் திறந்தது எகிப்து! (வீடியோ இணைப்பு)

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து எகிப்து செல்லும் ரஃபா எல்லையை எகிப்து அரசு இன்று முழுமையாகத் திறந்தது.

உலகின் மிகப்பெரும் சிறைச்சாலை என்று வர்ணிக்கப்பட்ட காஸா பகுதியில் இருந்து மக்கள் மருத்துவத்திற்காகக் கூட வெளியே செல்ல முடியாத வகையில் இஸ்ரேலும் எகிப்தும் தடைகளை ஏற்படுத்தி வைத்திருந்தது.

2007ஆம் ஆண்டு காஸா பகுதியின் ஆட்சி நிர்வாகம் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹமாஸ் இயக்கத்தின் கீழ் வந்ததைத் தொடர்ந்து இஸ்ரேல் இந்தத் தடையை ஏற்படுத்தியிருந்தது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் வேண்டுகோளைத் தொடர்ந்து, மக்கள் புரட்சியின் மூலம் ஆட்சியை விட்டு விரட்டப்பட்ட ஹோஸ்னி முபாரக் எகிப்து அதிபராக இருந்த போது, காஸாவில் இருந்து எகிப்து செல்லும் ரஃபா எல்லைக் கதவை முழுமையாக அடைத்தது.

ஒரு கிளாஸ் மதுவுடன் உலகின் பிரச்சினைகளுக்குத் தீர்வு :ஒபாமா


பிரிட்டனுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது கடந்த புதன்கிழமை பிரிட்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் எம்.பிக்கள் பிரபுக்கள் மத்தியிலும் பிரிட்டன் பாராளுமன்றத்திலும் உரை நிகழ்த்திய  ஒபாமா எமது வரலாற்றின் புதிய அத்தியாயத்தை பகிர வேண்டிய தருணத்திற்குள் நாம் நுழைய வேண்டியுள்ளதெனவும்
உலகளாவிய பொருளாதார நெருக்கடி மற்றும் பல வருடங்களாக நீடிக்கும் பயங்கரவாதத்திற்கான போர் என்பவற்றைத் தொடர்ந்து இரு நாடுகளும் முன்னெப்போதுமில்லாத முக்கிய தருணத்தை வந்தடைந்துள்ளன என்றும் தெரிவித்துள்ளார். அதேவேளை பிரிட்டன் ஹிஸ்புத் தஹ்ரீர் அமைப்பு பிரிட்டன் பாராளுமன்றது முன்பாக ஒபாமா, கெமரூன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளது விரிவாக

இலக்கை அடைவதற்கான வழிமுறைகள்...


1- ஆசைஆர்வம்
2- தன்னம்பிக்கை
3- இலக்கின் மூலம் பெற்றுக்கொண்ட இலட்சியங்களை அறிந்து அதனை எழுதிக்கொள்ளல்.
4- இலக்கின் மூலம் பெற்றுக்கொண்ட பிரயோசனங் களையும் எழுதிக்கொள் ளல்.
5- அந்த இலக்கு உனக்குப் பெற்றுத்தரப்போகும் தரத்தை அறிந்திருத்தல். (சுவனமாநரகமா?)

பெண்ணே ! உனக்காய் சில வரிகள்...

  • உன் உள்ளத்தின் வலிகள்தான் நாளைய சுவனத்தில் சுபசோபனமாகும்.
  •  உன் விழிகள் அவனுக்காய் மட்டும் கண்ணீர் சிந்துகிறது என்றால்நீயும் நாளைய பொழுதில் அர்ஷின் நிழலைப் பெற்ற அதிஷ்டசாலிதான்.
  • அல்லாஹ்வுக்காக என்று நீ ஆசை வைத்துப்பார்,அவன் ஒருபோதும் உன்னை கைவிடாமல் உன் ஆசைகளை சுவனத்தில் நிலைத்திடச் செய்வான்.
  • உன்னில் இப்போதெல்லாம் மறுமையை இலக்காய் கொண்ட சந்தோஷம் வாழுமென்றால்... நீ உண்மையில் இறைநேசமுள்ளவள்தான்.

அப்சல் குருவும், ஹிந்துதுவாவும்! ஒரு பார்வை!!

2001, டிசம்பர் 13-ம் தேதி, நாடாளுமன்றம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 9 பாதுகாப்பு வீரர்களும், நாடாளுமன்றத்தின் ஒரு அலுவலரும் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தின் முக்கியக் குற்றவாளியான அப்சல் குருவின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரிக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

லிபியா:எதிர்ப்பாளர்களுடன் பேச்சுவார்த்தைக்கு கத்தாஃபி தயார்


திரிபோலி:லிபியாவில் போரை நிறுத்திவிட்டு எதிர்ப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என அந்நாட்டு அதிபர் முஅம்மர் கத்தாஃபி அறிவித்துள்ளார். இதனால் சில மாதங்களாக தொடரும் போராட்டம் முடிவுக்கு வரும் என கருதப்படுகிறது. ஆனால், 40 வருடங்களுக்கு மேலாக பதவியில் தொடரும் கத்தாஃபி ராஜினாமா செய்ய சாத்தியமில்லை.

ஐரோப்பியன் யூனியன், ஐ.நா சபை உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களும் கத்தாஃபியிடம் ராஜினாமா செய்ய கோரிக்கை விடுத்திருந்தனர்.

சமச்சீர் கல்வித்திட்டம் கொண்டுவந்தது ஏன்? கலைஞர் விளக்கம்

கல்வியிலும் சமத்துவம் நிலைநாட்டவேண்டும் என்பதற்காகத்தான் சமச்சீர் கல்வி திட்டம் கொண்டுவரப்பட்டது என்று தி.மு.க. தலைவர் கலைஞர் விளக்கம் அளித்துள்ளார்.


தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல் அமைச்சருமான கலைஞர் வெளியிட்டள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

2006 ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில் அனைத்து பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வி வழங்கிடும் சமச்சீர் கல்வி முறையை தமிழக மக்கள் அனைவருக்கும் வழங்கிட வழி அமைப்போம் என்று தி.மு.க. அறிவித்திருந்தது. சமச்சீர் பள்ளிக்கல்வி முறையை நடைமுறைப்படுத்துவதற்காக தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக்கல்வி முறை சட்டம் 2010 ம் ஆண்டு இயற்றப்பட்டு; சமச்சீர் கல்வி முறை 2010 11 ம் கல்வி ஆண்டு முதல் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 1 மற்றும் 6 ம் வகுப்புகளில் நடைமுறை படுத்தப்பட்டதுடன் புதிய பாட நூல்களும் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன.

போலி விமானி லைசன்ஸ்:பா.ஜ.க முன்னாள் அமைச்சரின் மகன் சிக்கினார்


ஜெய்ப்பூர்:இந்தியாவில் எந்த முறைகேடு நடந்தாலும் அதில் பா.ஜ.கவின் பங்கு இடம் பெற்றிருக்கும். அந்த வகையில் தற்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் போலி விமானி லைசன்ஸ் (உரிமம்) வழக்கில் பா.ஜ.கவின் முன்னாள் அமைச்சரின் மகனும் சிக்கியுள்ளார்.

ராஜஸ்தான் ஊழல் தடுப்பு பிரிவு ராஜஸ்தான் மாநில முன்னாள் பா.ஜ.க அரசின் சமூக நீதித்துறை அமைச்சராக பணியாற்றிய மதன் தில்வாரின் மகன் உள்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

தொடரும் பாசிச சேவை:பாண்டே கடமை தவறவில்லை-எஸ்.ஐ.டியின் நற்சான்றிதழ்


அஹ்மதாபாத்:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையை குறித்து விசாரணையை நடத்த உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி) முன்னாள் குஜராத் மாநில டி.ஜி.பி பி.சி.பாண்டேவுக்கு நற்சான்றிதழ்(clean chit) வழங்கியுள்ளது.

மோடியின் கும்பலுக்கு எஸ்.ஐ.டியின் சேவை தொடர்வதையே இச்சம்பவம் உணர்த்துகிறது. 2002-ஆம் முஸ்லிம் இனப்படுகொலையில் பாண்டே தனது கடமையை தவறவில்லை (dereliction) என ஆண்டு குல்பர்க் சொசைட்டி கூட்டுக்கொலை வழக்கு விசாரணை நடந்துவரும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.ஜே.தந்தாவிடம் எஸ்.ஐ.டி தெரிவித்துள்ளது.

பாப்புலர் ஃப்ரண்ட் உருவான விதம்


நம் இந்திய நாட்டில் ஏற்பட்டு வரும் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றம், வறுமையை போக்கவும்,  பிற்படுத்தப்பட்ட மக்களை முன்னேற்றவும் தவறி வருகிறது.
நம் நாடு சுதந்தரிமடைந்த பிறகு பெரும் வியாபார முதலீட்டாளர்கள் மூலம் பெரும் வளர்ச்சியடைந்தாலும் சாதாரண மக்களின் அடிப்படை தேவைகள் கூட மறுக்கப்பட்டு வருகிறது.
பரம்பரை பரம்பரையாக இந்த நாட்டை ஆட்சி செய்து வரும் அரசாங்கங்களோ ஜனநாயகம் என்று  அழைக்கப்படக்கூடிய "மக்களாட்சி" தத்துவத்தை சீர்குலைத்து சர்வதிகாரம் போன்று செயல்பட்டு வருகின்றனர். காலணி ஆதிக்க சக்திகளுடனும், ஃபாஸிச சக்திகளுடனும் கைகோர்த்து செயல்பட்டு வருகின்றனர்.

Friday 27 May 2011

மூடி மறைப்பேன் என்னை !



குறையேதுமில்லை
திரையிட்டு வந்தேன்;
உன் இச்சைக்கொண்ட
பார்வைக்கு எச்சில் துப்பி
எதிர்ப்பேன்!

அரைநிர்வாணம்
அழகாய் தோன்றும் உனக்கு;
உன் அக்காள் தங்கை
காட்டி வந்தாள் முழுக்கோபம் எதற்கு!

மாற்றான் தோட்டத்து
மல்லிகை மட்டும்
மணக்கவேண்டும் உனக்கு;
மானங்கெட்ட மானிடனே
மனைவியை  
பூட்டிவைக்கிறாய் எதற்கு!

போர்த்தியிருக்கும் எங்களை
கழட்டச் சொல்லி கேட்கிறாய்;
கழட்டி வந்த பெண்களிடம்
கைவரிசையைக் காட்டுகிறாய்!

மானம் காக்க
மறைத்திருப்பது
சிறையென்று நீ நினைத்தால்;
ஒத்துக்கொள்கிறேன்
ஒளிந்திருக்கிறேன்
உனக்காகத்தான்;
தப்பிப்பதற்கு!

நன்றி: யாசர் அரஃபாத்
நன்றி: harbour-popularfront.blogspot.com

ஊனம் ஒருதடையல்ல...


    வாழ்க்கையில் சாதிப்பதகு ஊனம் ஒரு தடையல்ல என்பதினை நிரூபிக்கும் பல விதமான மனிதர்களை பற்றி நாம் கேள்விபட்டுள்ளோம். அத்தகைய ஓர் சிறுவனைப் பற்றிய சுவாரஸ்யமான செய்தியே இது.
 அமெரிக்காவைச் சேர்ந்த 9 வயதான கோடி மெக்கஸ் லேண்ட் என்ற அச் சிறுவனிடம் சுமார் 20 செயற்கைக் கால்கள் உள்ளன.
இவை அனைத்தும் வெவ்வேறு விதமான போட்டிகளில் பங்கு பற்றுவதற்காக அச்சிறுவன் தன்னிடம் வைத்துள்ள வையாகும்.
இதுவரை பல விளையாட்டுக்களில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளான் கோடி.
இவன் குழந்தையாக இருக்கும் போதே இவனது கால்கள் சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளன.
எனினும் தன்னம்பிக்கையை மட்டும் இழக்காத கோடி தனது முயற்சி மூலம் தன்னால் பல விளையாட்டுக்களில் சாதிக்கமுடியும் என்பதினை நிரூபித்துள் ளனா.
இவனது வெற்றிகளுக்கான இன்னுமோர் முக்கிய காரணம் இவனது பெற்றோ ராகும். அவர்களது ஊக்குவிப்பே இத்தகைய ஓர் தன்னம்பிக்கை மிக்க ஒரு வனாக மாற வழிவகுத்துள்ளது.
கோடியின் தற்போதைய இலக்கு உலக ஊனமுற்றோருக்கான ஒலிம்பிக் போட்டிகளில் ஓர் தங்கப் பதக்கத்தை வெல்வதே ஆகும்.

10ம் வகுப்பு: முதல் 3 இடங்களை பிடித்த 40 மாணவ மாணவிகளின் பெயர் மற்றும் பள்ளி விபரம்


10ம் வகுப்பு தேர்வில் 5 மாணவிகள் மாநிலத்தில் முதல் இடத்தை பிடித்துள்ளனர்.. இவர்கள் 500க்கு 496 மார்க் பெற்றுள்ளனர். 500க்கு 495 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் 2வது இடத்தை 11 பேர் பிடித்துள்ளனர். 500க்கு 494 மார்க்குகள் பெற்று 24 பேர் மாநிலத்தில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளனர்.
500 க்கு 496 மதிப்பெண்கள் பெற்ற 5 மாணவிகள் விவரம் வருமாறு: 
1. எம்.நித்யா, எஸ்.எச். பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீவில்லிப்புத்தூர்.
2. எஸ். ரம்யா, ஸ்ரீகுருகுலம் மேல்நிலைப் பள்ளி, மூலவாய்க்கால், கோபி செட்டிப்பாளையம்.
3. எஸ்.சங்கீதா, முத்தமிழ் மேல்நிலைப்பள்ளி, பெரியயேரி, சேலம்.
4. எம்.மின்னலாதேவி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செய்யாறு.
5. ஆர்.ஹரிணி (496), அவர்லேடி மேல்நிலைப்பள்ளி, திருவொற்றியூர், சென்னை. 

10ம் வகுப்பு தேர்வு: 5 பேர் முதல் இடம்...


10ம் வகுப்பு தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி மின்னல் விழி உட்பட 5 மாணவ, மாணவிகள் முதல் இடத்தை பிடித்துள்ளனர்.. இவர்கள் 500க்கு 496 மார்க் பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 28ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது. இந்த தேர்வை 9 லட்சத்து 50 ஆயிரம் மாணவ மாணவிகள் 2 ஆயிரத்து 800 மையங்களில் எழுதினார்கள். இவர்களில் 8 லட்சத்து 56 ஆயிரத்து 956 பேர் பள்ளிக்கூட மாணவ மாணவிகள். அதில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 21 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 35 ஆயிரத்து 935 பேர் மாணவிகள்.

பாப்ரி மஸ்ஜித்:உணர்ச்சியை தூண்டும் வகையில் பேசிய பா.ஜ.க எம்.எல்.ஏ 19 வருடங்களுக்கு பிறகு கைது ..


பாட்னா:பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்படும் வேளையில் உணர்ச்சியை தூண்டும் வகையில் உரை நிகழ்த்திய அவுரங்காபாத்தை சார்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ ராமாதர் சிங் 19 வருடங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றம் இவரை 14 தினங்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது.

1995-ஆம் ஆண்டு தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார் ராமாதர் சிங். அவுரங்காபாத் நீதிமன்றம் இவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்திருந்தது. பீகார் மாநிலத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்த இவர் கடந்தவாரம் பதவியை ராஜினாமா செய்தார்.
ராஜினாமா செய்த உடனேயே பாட்னா உயர் நீதிமன்றம் ராமாதர் சிங்கிடம் கீழ் நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டது. பீகார் மாநிலத்தில் நிதீஷ்குமாரின் ஆட்சியின் நற்பெயரை கெடுக்க கூடாது என்பதால் பதவியை ராஜினாமா செய்வதாக ராமாதர் சிங் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

1992-ஆம் ஆண்டு பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வேளையில் முஸ்லிம்களுக்கு எதிராக வகுப்பு வாத துவேசத்தை உருவாக்கும் வகையில் உரை நிகழ்த்தியதாக ராமாதர் சிங் மீது வழக்கு தொடரப்பட்டது.

அமெரிக்க ராணுவத்திற்கு எதிராக ஈராக்கில் பிரம்மாண்ட கண்டன பேரணி


பாக்தாத்:அமெரிக்க ராணுவத்தை நீண்டகாலம் ஈராக்கில் நிறுத்தி வைப்பதற்கான முயற்சி தொடரும் வேளையில் அமெரிக்க ராணுவம் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என கோரி பாக்தாதில் பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது. ஸதர் நகரத்தில் 20 ஆயிரம் பேர் இப்பேரணியில் கலந்து கொண்டனர். 2011 ஆம் ஆண்டு ராணுவம் வாபஸ் பெறப்படும் என அமெரிக்கா ஏற்கனவே அறிவித்த பொழுதிலும் ஈராக் ராணுவத்திற்கு பயிற்சி அளிக்கிறோம் என்ற பெயரில் தற்போதும் ஈராக்கில் தொடர்கிறது.

ஷியா முஸ்லிம் தலைவர் முக்ததா அல் ஸதர் இப்பேரணிக்கு தலைமை வகித்தார். 2011 டிசம்பர் மாதம் அமெரிக்க ராணுவம் நாட்டை விட்டு வெளியேறும் என்பது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருநாடுகளிடையே ஒப்பந்தம் உருவானது. ஒப்பந்தத்தை பேண பிரதமர் நூரி அல் மாலிக்கி தயாராக வேண்டும் என ஸதர் கோரிக்கை விடுத்தார்.

பேரழிவு ஆயுதங்கள் ஈராக்கில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டி அமெரிக்கா தலைமயிலான கூட்டணி நாடுகள் ஈராக்கை ஆக்கிரமித்து துவசம் செய்தன. தொடர்ந்து ஈராக் அதிபர் சதாம் ஹுசைனை கைது செய்து விசாரணை நடத்தி கொலை செய்தனர். ஆனால், அமெரிக்காவால் எவ்வித பேரழிவு ஆயுதங்களையும் ஈராக்கில் கண்டுபிடிக்க முடியவில்லை

SDPi வெறும் அரசியல் கட்சியல்ல, ஒரு மிஷன்: இ அபுபக்கர் அவர்கள் தேசிய பிரதிநிதிகள் கவுன்சிலில் ஆற்றிய தலைமையுரை

பெங்களூரு: புதிதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய தலைவர் இ அபுபக்கர் அவர்கள் தேசிய பிரதிநிதிகள் கவுன்சிலில் ஆற்றிய தலைமையுரை:
பெரியோர்களே சகோதர சகோதரிகளே, நாம் மற்றொரு சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் வரலாற்றுச்சிறப்பு மிக்க நிகழ்ச்சிக்கு சாட்சியாளராக இங்கு குழுமி இருக்கிறோம்.




ஜூன் 21, 2009 அன்று கரோல் பாக்கிலுள்ள ஹோட்டலின் அரங்கில் 29 பேர் முன்னிலையில் கட்சி தோற்றுவித்ததற்கான அறிவிப்பை வெளியிட்ட அந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை நான் நினைவுகூர்கிறேன். அப்போது தற்காலிக குழு அமைக்கப்பட்டது, இது தேர்ந்தெடுக்கப்படவில்லையெறாலும் அது பல்வேறு இந்திய மாநிலத்திற்கு பிரதிநிதித்துவம் கிடைக்கப்பெறத்தக்கவகையில் பிரதிநிதிகளைக்கொண்டு அமைக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே.

நடந்தது என்ன? குற்றமும் பின்னணியும்!!


மே 27, புதிதாக ஆட்சியில் அமர்ந்த உடன் ஜெயலலிதா ஒரு அறிவிப்பை செய்தார்.

அது என்ன வென்றால் இனி மக்கள் அஞ்சாமல் நிம்மதியாக வாழலாம் என்று!


அவர் அப்படி சொல்லி ஒரு நாள் கூட, முடியவில்லை சிறுபான்மை சமூக அதிமுக மத்திய அமைச்சர் மரியம் பிச்சை விபத்தின் மூலம் கொல்லப்பட்டார்.


அது சம்மந்தமாக இதுவரை எந்த ஒரு துப்பும் கிடைக்கவில்லை. விபத்து நடத்திய லாரி கூட இதுவரை கண்டுப்பிடிக்க படவில்லை.

மாறுவாரா ஜெ!! மக்கள் எதிர்பார்க்கின்றனர்!!

May 27, அரசு திட்டங்கள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகள் வாய் திறக்க கூடாது என்ற நிலையை, முதல்வர் ஜெயலலிதா மாற்ற வேண்டும்' என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான முந்தைய ஆட்சியின் போது, அரசின் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து அவர் மட்டுமே பேசுவார்; அறிவிப்புகளை வெளியிடுவார்.

விழாக்களிலும், செய்தியாளர்கள் கூட்டத்திலும் அமைச்சர்கள், தலைமைச் செயலர் உள்பட எவரும் வாய் திறக்க மாட்டர்.

மக்களுக்கு உத்தரவாதம் வழங்குதல், நம்பிக்கையான வாக்குறுதி அளித்தல் போன்றவற்றுக்கும் இவர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. மீறுபவர்கள் பதவி பறிக்கப்பட்டதும் உண்டு.

தீர்க்கக்கூடிய பொதுவான பிரச்னையை சாதாரண மனிதன், முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனுவாக அனுப்பி, அது முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, நிறைவேற்றப்பட்ட பல சம்பவங்கள் உண்டு.

ஆனால், அமைச்சர், அதிகாரிகளிடம் மனுவாக கொடுத்து, அது நிறைவேறிய சம்பவம் மிகச்சொற்பம் தான். அரசு விழாக்களில் அமைச்சர்கள் பேசும் போது கூட, "அம்மா அவர்கள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தான் கூறுவார்களே தவிர, தங்கள் துறை தொடர்பான தகவல்கள், முன்னேற்றங்கள், திட்டங்கள் பற்றி வாய் திறக்க மாட்டார்கள் இந்நிலை மாறுமா? மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

குஜராத்தில் லஞ்சம், மது, ஊழல்!! அன்னா ஹசாரே அதிரடி!!


தனது கடந்த கால தவறுகளை திருத்திக்கொண்ட அன்னா ஹசாரே,குஜராத்தின் உண்மை நிலையை நேரில் கண்டு மனம்வெதும்பி அறிக்கை சமர்பித்தார்.

சிறிது நாட்களுக்கு முன் தன்னால் புகழப்பட்ட மனித மிருகம் நரேந்திர மோடியை குறித்து அன்ன ஹசாரே இப்பொழுது அதிர்ச்சி தகவல்களை அளித்துள்ளார்.

இந்தியாவிலேயே குஜராத்தில் 'தான்" அதிகமாக லஞ்ச ஊழல் உள்ளது என்றும், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போயுள்ளது என்றும் தெரிவித்தார்.

Thursday 26 May 2011

போலி ஜிஹாதியம் – ஊடகத்தின் ஊன பார்வை…





இது ஒரு காமெடியாக எழுதப்பட்ட சீரியஸ் விசயங்க….
ஜிஹாதுன்னா….?
பொதுமக்களையும்,அப்பாவிகளையும் கொல்வதற்கு பேருதாங்க ஜிஹாது….. இது உலக வலை விற்பனர்கள் முதல் உள்ளூர் ஊறுகாய் வியாபாரி வரைக்கும் அறியாமலே அறிந்ததாய் சொல்லும் ஒரு வாக்கியம்…. இந்த அடிப்படை தவறான வாக்கியத்திற்கு அடிப்படையில் இரண்டு காரணம்.,
இஸ்லாமியர்கள் ஊடகத்தை சரிவர பயன்படுத்தி கொள்ளவில்லை.,
ஊடகம் இஸ்லாமியர்களை தவறாக பயன்படுத்தி கொண்டிருக்கின்றது- அதிலும் குறிப்பாக சினிமாத்துறை மிக மோசமாக இஸ்லாமிய எதிர்ப்பை அரங்கேற்றிக்கொண்டிருக்கிறது., அத்தகைய சினிமாவில் இஸ்லாம் நிலை குறித்தே இங்கு பதிவு.

யார் இந்த ரஜினிகாந்த்? – ஏன் இந்த முக்கியத்துவம் செய்திதாள்களில்,…


   செய்திதாள்களில், இணையதளங்களில், தொலைகாட்சிகளில் எங்கு திரும்பினாலும் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை அவர் நலம் அடைய பிராத்தனை, அவர் நலமாக இருக்கிறார் யாரும் கவலைபட வேண்டாம் இப்படி போகிறது செய்திகள்.

யார்? இந்த ரஜினிகாந்த் இவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உங்களுக்கு என்ன? ரஜினியின் மனைவி, குடும்பத்தார் படவேண்டிய கவலையை ஏன்? மொத்த தமிழகமும் பட வேண்டும்.

அவர் ஒரு சிறந்த நடிகர், அவர் தன் நடிப்பிற்க்காக கோடிகணக்கில் பணம் வாங்குகிறார். நீங்கள் பணம் கொடுத்து அவர் படத்தை பார்கிறீர்கள். இதுதானே அவருக்கும் உங்களுக்கு உள்ள உறவு.

ஹெட்லியுடன் சிவசேனாவின் ராஜாராமுக்குத் தொடர்பு...

மும்பை தாக்குதல் வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள டேவிட் கோல்மென் ஹெட்லியும் அவனது பாகிஸ்தான் கூட்டாளிகளும் சிவசேனாவைச் சேர்ந்த ராஜராம் ரேகே என்பவருடன் தொடர்பில் இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிவசேனாவின் மக்கள் தொடர்பு அலுவலராகக் கருதப்படும் ராஜாராம் ரேகே மூலம் ஹெட்லி சிவசேனாவுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் ரேகே இதனை மறுத்துள்ளார். தான் சிவசேனாவில் உறுப்பினர் இல்லை என்றும் கணினிப் பொறியாளரான தாம் அவ்வப்போது சமூக நலப் பணிகளும் செய்து வருவதாகக் கூறியுள்ளார். ஆனால் ஹெட்லிக்கு ரேகே அனுப்பியுள்ள மின்னஞ்சல் மூலம் ரேகே அரசியல் பின்னணி உள்ளவர் என்பது தெரிய வருகிறது.

ஆப்கான் நகரத்தை கைப்பற்றியது தாலிபான்


காபூல்:கிழக்கு ஆப்கானிஸ்தானின் நூரிஸ்தான் மாகாணத்தில் துஅப் நகரத்தின் கட்டுப்பாட்டை தாலிபான் போராளிகள் கைப்பற்றினர். போராளிகளும் ஆப்கான் ராணுவம் இரண்டு தினங்களாக கடுமையான போராட்டத்தை இந்நகரத்தில் நடத்தினர். போர் தந்திரத்தின் காரணமாக ராணுவம் வாபஸ் பெற்றுள்ளதாக போலீஸ் கமாண்டர் தெரிவிக்கிறார்.

ஏராளமான போராளிகளும், போலீஸ்காரர்களும் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். தாலிபான் செய்தி தொடர்பாளர் ஸபியுல்லாஹ் முஜாஹித் மீடியாவுக்கு அளித்த இ-மெயிலில் மாவட்டம் முழுவதும் தங்கள் வசம் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

பாபர் மசூதியும் பார்பன வேட்டையும்!!

May 26, முஸ்லிம்களின் 450 வருடம் வரலாற்று பழமைவாய்ந்த பாபர் மஸ்ஜித் ஹிந்து வெறியர்களால் இடிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து அலஹாபாத் உயர் நீதி மன்றத்தின் (சிறுபிள்ளைத்தனமான) தீர்ப்பை உச்சநீதி மன்றமே கண்டித்தது.

உச்சநீதி மன்றம் நல்லதீர்ப்பு தரும் என்ற நம்பிக்கையில் முஸ்லிம்களும், நல்லெண்ணம் கொண்டவர்கள் நீதி தேவை என்று கருதுவதையும் நாம் அறிந்ததுதான்.

அப்போதைய அரசின் துரோகத்தையும், நடந்து முடிந்த பெருங்கோர நிகழ்ச்சியையும் நான் இங்கு நினைவுப்படுத்த காரணம் உண்டு.

பேரினவாதம் நீதிக்கு அப்பாற்பட்டதா!!

May 26, சகோதரி யாழினி! கண்ணீர் மல்கிக்கொண்டிருக்கிறேன். கவலை கொள்ளாதீர்கள். அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டி நிற்பது நம்மின் கடமை.

எப்படி துடித்திருக்கும் தமிழீழ மக்களின் இதயங்கள். கண் முன்னே அந்தக்காட்சிகள் நிழலாடுகின்றன. வானத்திலேசண்டை விமானங்களின், ஹெலிகாப்டர்களின் சத்தங்கள்.

தரையிலே சிங்கள இனக் கயவர்களின் துப்பாக்கி சத்தங்கள். பிஞ்சுக்குழந்தைகளை இருக்க அணைத்துக்கொண்டு ஓடவும், ஒதுங்கவும் இடம் தெரியாமல் தாய்கள்.

டெல்லி: வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி...

டெல்லி அருகே வீட்டின் மீது ஆம்புலன்ஸ் விமானம் மோதி விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த விமானப் பணியாளர், நோயாளி உட்பட 10 பேர் பலியாயினர். 2 பேர் காயமடைந்துள்ளனர்.


பீகார், பாட்னாவிலிருந்து 25.05.2011 அன்று டெல்லிக்கு சிறிய ரக ஆம்புலன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. அதில், விமானிகள் உட்பட எட்டு பேர் பயணம் செய்தனர். இந்நிலையில், இரவு 10.45 மணியளவில் பரிதாபாத் அருகே விமானம் சென்றபோது, பலத்த சூறைக் காற்று வீசியதாகக் கூறப்படுகிறது. 

’எனது மகன் அப்பாவி’-பி​ரான்சில் கைது செய்​யப்பட்ட நியாஸின் தாயார் பேட்டி


மதுரை:அல்காயிதாவுடன் தொடர்பு என குற்றம் சாட்டி பிரான்சு நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழகத்தை சார்ந்த நியாஸ் அப்துற்றஷீத் அப்பாவி என அவரது தாயார் பாத்திமா பேகம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:எனது மகனுக்கு தடைச்செய்யப்பட்ட இயக்கமான சிமி உடனோ அல்லது வேறு இயக்கத்துடனும் சம்பந்தமில்லை. ஒழுங்காக தொழுகையை பேணுவான் அவ்வளவு தான்.

ஒருபோதும் நியாஸால் தீவிரவாதியாக மாற இயலாது என என்னால் உறுதியாக கூற இயலும். ஏற்கெனவே, மத்திய புலனாய்வுப் பிரிவு போலீஸார் கடந்த ஜனவரி மாதம் எங்களிடம் விசாரித்தனர். குடும்ப அட்டை, பாஸ்போர்ட்டையும் ஆய்வு செய்தனர். அவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகத் தெரிந்திருந்தால் அப்போது வெளிநாடு செல்ல அனுமதி கிடைத்திருக்குமா?

Wednesday 25 May 2011

இந்தியாவில் ஆண்டுக்கு 1000 கௌரவ கொலைகள்


குடும்ப கௌரவம் என்ற பெயரில் இந்தியாவில் ஆண்டுக்கு 1,000 பேர் கொலை செய்யப்படுவதாக அண்மையில் வெளியான புள்ளிவிவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
       பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆண்டுக்கு 900 பேரும், இதர மாநிலங்களில் 100 முதல் 300 பேரும் கொலை செய்யப்படுவதாக புள்ளி விவரம் கூறுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணையில் மத்திய அரசு மற்றும் எட்டு மாநில அரசுகள் விளக்கம் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கணவனுக்குக் கட்டுப்படுதல்...


ஒரு பெண் எப்போதிருந்து கணவனுக்கு கட்டுப்படவேண்டும்?
ஒரு பெண் தனது கணவனுக்கு கட்டுப்படுவது கடமையாகும். அல்லாஹுத்த ஆலா கூறுகின்றான்;மனைவியரான அவர்கள்மீதுள்ள கடமைகள் போன்று அவர்களுக்கு உரிமைகளும் காணப்படு கின்றன. ஆண்களுக்கு அவர்கள்மீது ஓர் படித்தரம் உள்ளது. (பகறா: 228)
ஆண்கள் பெண்களைவிட வும் சக்திபடைத்தவர்களாவர். அல்லாஹுத்தஆலா அவர்களில் சிலரைவிடவும் மேன்மையாக்கி சிலரை வைத்திருக்கிறான். அவர்கள் தங்கள் செல்வங்களிலிருந்து பெண்களுக்காக செலவளிக்கின்றார் கள். (நிஸா: 34)
எனவேஒரு பெண் நன்மையான விடயங்களில் கணவனுக்கு கட்டுப்பட வேண்டியது அவளது கடமையாகும். பாவங்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் விடயங்களில் கட்டுப்படக்கூடாது. நபி (ஸல்) அவர்களிடம் பெண் களில் சிறந்தவர் யார்’ எனக் கேட்கப்பட்டது. அதற்கவர்அவளைப் பார்த்தால் கணவன் சந்தோசப் படக்கூடிய அவன் ஏவினால் கட்டுப்படக்கூடிய பெண்ணா வாள் என்றார்கள். (நஸாயி)
ஒரு பெண் கணவனின் வீட்டில் நுழைந்ததிலிருந்து அவனுக்கு கட்டுப்பட தொடங்க வேண்டும். அந்த வீட்டை வசதியுள்ளதாக ஆக்க வேண்டும். அல் லாஹ் மிக அறிந்தவன்.

வெற்றி பெறுவதற்கு...


1. மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள். 
2. ஆரோக்கியம் தராத உணவு வகைகள் எவ்வளவு சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள்.
3. உங்களுக்கு என்ன வயதானாலும் பரவாயில்லை. விருப்பமான துறை களில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள்.
4.  வருமானத்திற்கான வழி மிகவும் முக்கியம்.  அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள்.
5. முடிந்தவரை கடன்களைக் கட்டி விடுங்கள். வேண்டாத செலவுகளை நிறுத்தி விடுங்கள்.

இரும்பு மனிதர்கள்!


‘ஆது’ கூட்டத்தினரின் அழிவுக்குப் பிறகு தோன்றியவர்கள்தான் ‘ஸமூத்’ கூட்டத்தினர்.
ஸமூது கூட்டத்தினரை ‘இரம்’ வம்சத்தினர் என்றும் ‘ஹிஜ்ர்’ வாசிகள் என்றும் அல்குர்ஆன் அழைக்கிறது. அதன் 15-வது அத்தியாயத்திற்கு ‘அல்ஹிஜ்ர்’ என பெயர் சூட்டப்பட்டு அவர்கள் நினைவு கூறப்படுகிறார்கள்.