Tuesday 31 May 2011

பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் இரண்டாவது இடம் பிடித்தவர்க்கு பாப்புலர் ப்ரண்ட் பாராட்டு...


பத்தாம் வகுப்பு பொது தேர்வில் மேலப்பாளைய மாணவன் சதாம் உசேன் மாநில அளவில் 495  மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்தில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். மேலும் மாவட்ட அளவில் முதலும் பிடிதுள்ளார்.நெல்லை மாவட்ட பாப்புலர் ப்ரண்ட் சார்பாக  இவரை பாராட்டிகேடயமும் பரிசும் வழங்கியது .இந்த நிகழ்ச்சியில் பாப்புலர் ப்ரண்ட் மாவட்ட செயலாளர் ஹைதர் அலி, நகர தலைவர் மூஸல் காலிம் .நகர செயல்குழு உறுப்பினர் பால் மைதீன் ஆகியோர் கலந்து கொண்டு அந்த மாணவனை வாழ்த்தினர்.

 குறிப்பு :

 சென்ற முறை பத்தாம் வகுப்பு பொது தேர்வில் நெல்லை மாவட்டம் சேர்ந்த டவுன் கல்லணை அரசு பள்ளியில் படித்த ஜாஸ்மின் என்ற முஸ்லிம் ஏழை மாணவி மாநிலத்தில் முதலிடம் பிடித்தார் .இந்த முறையும் மேலப்பாளையம் முஸ்லிம் மேல் நிலைப் பள்ளியில் (அரசு பள்ளி ) பயிலும் சதாம் உசேன் என்ற ஏழை முஸ்லிம் மாணவர் இரண்டாவது இடம் பிடித்துள்ளார் மென்மேலும் முஸ்லிம் மாணவர்கள் அனைத்து துறையிலும் முன்னேற பாப்புலர் ப்ரண்ட் வாழ்த்துகிறது 


பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் 
நெல்லை மாவட்ட செயலாளர் A. ஹைதர் அலி பரிசு வழங்குகிறார் 
 நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் மேலப்பாளைய மாணவன் சதாம் உசேன்  இந்த சாதனை மாணவனுக்கு பாராட்டுகள் பல குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தேசிய பேரியக்கமான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பாக இந்த சாதனை மாணவனுக்கு பாராட்டு மற்றும் ஊக்க பரிசுகள் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment