Thursday 26 May 2011

போலி ஜிஹாதியம் – ஊடகத்தின் ஊன பார்வை…





இது ஒரு காமெடியாக எழுதப்பட்ட சீரியஸ் விசயங்க….
ஜிஹாதுன்னா….?
பொதுமக்களையும்,அப்பாவிகளையும் கொல்வதற்கு பேருதாங்க ஜிஹாது….. இது உலக வலை விற்பனர்கள் முதல் உள்ளூர் ஊறுகாய் வியாபாரி வரைக்கும் அறியாமலே அறிந்ததாய் சொல்லும் ஒரு வாக்கியம்…. இந்த அடிப்படை தவறான வாக்கியத்திற்கு அடிப்படையில் இரண்டு காரணம்.,
இஸ்லாமியர்கள் ஊடகத்தை சரிவர பயன்படுத்தி கொள்ளவில்லை.,
ஊடகம் இஸ்லாமியர்களை தவறாக பயன்படுத்தி கொண்டிருக்கின்றது- அதிலும் குறிப்பாக சினிமாத்துறை மிக மோசமாக இஸ்லாமிய எதிர்ப்பை அரங்கேற்றிக்கொண்டிருக்கிறது., அத்தகைய சினிமாவில் இஸ்லாம் நிலை குறித்தே இங்கு பதிவு.

யார் இந்த ரஜினிகாந்த்? – ஏன் இந்த முக்கியத்துவம் செய்திதாள்களில்,…


   செய்திதாள்களில், இணையதளங்களில், தொலைகாட்சிகளில் எங்கு திரும்பினாலும் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை அவர் நலம் அடைய பிராத்தனை, அவர் நலமாக இருக்கிறார் யாரும் கவலைபட வேண்டாம் இப்படி போகிறது செய்திகள்.

யார்? இந்த ரஜினிகாந்த் இவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உங்களுக்கு என்ன? ரஜினியின் மனைவி, குடும்பத்தார் படவேண்டிய கவலையை ஏன்? மொத்த தமிழகமும் பட வேண்டும்.

அவர் ஒரு சிறந்த நடிகர், அவர் தன் நடிப்பிற்க்காக கோடிகணக்கில் பணம் வாங்குகிறார். நீங்கள் பணம் கொடுத்து அவர் படத்தை பார்கிறீர்கள். இதுதானே அவருக்கும் உங்களுக்கு உள்ள உறவு.

ஹெட்லியுடன் சிவசேனாவின் ராஜாராமுக்குத் தொடர்பு...

மும்பை தாக்குதல் வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள டேவிட் கோல்மென் ஹெட்லியும் அவனது பாகிஸ்தான் கூட்டாளிகளும் சிவசேனாவைச் சேர்ந்த ராஜராம் ரேகே என்பவருடன் தொடர்பில் இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிவசேனாவின் மக்கள் தொடர்பு அலுவலராகக் கருதப்படும் ராஜாராம் ரேகே மூலம் ஹெட்லி சிவசேனாவுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் ரேகே இதனை மறுத்துள்ளார். தான் சிவசேனாவில் உறுப்பினர் இல்லை என்றும் கணினிப் பொறியாளரான தாம் அவ்வப்போது சமூக நலப் பணிகளும் செய்து வருவதாகக் கூறியுள்ளார். ஆனால் ஹெட்லிக்கு ரேகே அனுப்பியுள்ள மின்னஞ்சல் மூலம் ரேகே அரசியல் பின்னணி உள்ளவர் என்பது தெரிய வருகிறது.

ஆப்கான் நகரத்தை கைப்பற்றியது தாலிபான்


காபூல்:கிழக்கு ஆப்கானிஸ்தானின் நூரிஸ்தான் மாகாணத்தில் துஅப் நகரத்தின் கட்டுப்பாட்டை தாலிபான் போராளிகள் கைப்பற்றினர். போராளிகளும் ஆப்கான் ராணுவம் இரண்டு தினங்களாக கடுமையான போராட்டத்தை இந்நகரத்தில் நடத்தினர். போர் தந்திரத்தின் காரணமாக ராணுவம் வாபஸ் பெற்றுள்ளதாக போலீஸ் கமாண்டர் தெரிவிக்கிறார்.

ஏராளமான போராளிகளும், போலீஸ்காரர்களும் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். தாலிபான் செய்தி தொடர்பாளர் ஸபியுல்லாஹ் முஜாஹித் மீடியாவுக்கு அளித்த இ-மெயிலில் மாவட்டம் முழுவதும் தங்கள் வசம் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

பாபர் மசூதியும் பார்பன வேட்டையும்!!

May 26, முஸ்லிம்களின் 450 வருடம் வரலாற்று பழமைவாய்ந்த பாபர் மஸ்ஜித் ஹிந்து வெறியர்களால் இடிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து அலஹாபாத் உயர் நீதி மன்றத்தின் (சிறுபிள்ளைத்தனமான) தீர்ப்பை உச்சநீதி மன்றமே கண்டித்தது.

உச்சநீதி மன்றம் நல்லதீர்ப்பு தரும் என்ற நம்பிக்கையில் முஸ்லிம்களும், நல்லெண்ணம் கொண்டவர்கள் நீதி தேவை என்று கருதுவதையும் நாம் அறிந்ததுதான்.

அப்போதைய அரசின் துரோகத்தையும், நடந்து முடிந்த பெருங்கோர நிகழ்ச்சியையும் நான் இங்கு நினைவுப்படுத்த காரணம் உண்டு.

பேரினவாதம் நீதிக்கு அப்பாற்பட்டதா!!

May 26, சகோதரி யாழினி! கண்ணீர் மல்கிக்கொண்டிருக்கிறேன். கவலை கொள்ளாதீர்கள். அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டி நிற்பது நம்மின் கடமை.

எப்படி துடித்திருக்கும் தமிழீழ மக்களின் இதயங்கள். கண் முன்னே அந்தக்காட்சிகள் நிழலாடுகின்றன. வானத்திலேசண்டை விமானங்களின், ஹெலிகாப்டர்களின் சத்தங்கள்.

தரையிலே சிங்கள இனக் கயவர்களின் துப்பாக்கி சத்தங்கள். பிஞ்சுக்குழந்தைகளை இருக்க அணைத்துக்கொண்டு ஓடவும், ஒதுங்கவும் இடம் தெரியாமல் தாய்கள்.

டெல்லி: வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி...

டெல்லி அருகே வீட்டின் மீது ஆம்புலன்ஸ் விமானம் மோதி விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த விமானப் பணியாளர், நோயாளி உட்பட 10 பேர் பலியாயினர். 2 பேர் காயமடைந்துள்ளனர்.


பீகார், பாட்னாவிலிருந்து 25.05.2011 அன்று டெல்லிக்கு சிறிய ரக ஆம்புலன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. அதில், விமானிகள் உட்பட எட்டு பேர் பயணம் செய்தனர். இந்நிலையில், இரவு 10.45 மணியளவில் பரிதாபாத் அருகே விமானம் சென்றபோது, பலத்த சூறைக் காற்று வீசியதாகக் கூறப்படுகிறது. 

’எனது மகன் அப்பாவி’-பி​ரான்சில் கைது செய்​யப்பட்ட நியாஸின் தாயார் பேட்டி


மதுரை:அல்காயிதாவுடன் தொடர்பு என குற்றம் சாட்டி பிரான்சு நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழகத்தை சார்ந்த நியாஸ் அப்துற்றஷீத் அப்பாவி என அவரது தாயார் பாத்திமா பேகம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:எனது மகனுக்கு தடைச்செய்யப்பட்ட இயக்கமான சிமி உடனோ அல்லது வேறு இயக்கத்துடனும் சம்பந்தமில்லை. ஒழுங்காக தொழுகையை பேணுவான் அவ்வளவு தான்.

ஒருபோதும் நியாஸால் தீவிரவாதியாக மாற இயலாது என என்னால் உறுதியாக கூற இயலும். ஏற்கெனவே, மத்திய புலனாய்வுப் பிரிவு போலீஸார் கடந்த ஜனவரி மாதம் எங்களிடம் விசாரித்தனர். குடும்ப அட்டை, பாஸ்போர்ட்டையும் ஆய்வு செய்தனர். அவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகத் தெரிந்திருந்தால் அப்போது வெளிநாடு செல்ல அனுமதி கிடைத்திருக்குமா?