Friday 17 May 2013

விசாரணை கைதிகளின் விடுதலைக்காக எஸ்.டி.பி.ஐ தேசிய அளவிலான பிரச்சாரம்!


சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் (யு.ஏ.பி.ஏ) உள்ளிட்ட கறுப்புச் சட்டங்களை பயன்படுத்தி தீவிரவாத வழக்குகளில் சிக்கவைத்து சிறையிலடைக்கப்பட்டுள்ள நிரபராதிகளான முஸ்லிம்கள், பழங்குடியினர், மனித உரிமை ஆர்வலர்களை விடுதலைச் செய்யக் கோரி தேசிய அளவில் வலுவான பிரச்சாரத்தை மேற்கொள்ள எஸ்.டி.பி.ஐ தீர்மானித்துள்ளது.

பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கை சி.பி.ஐ விசாரிக்க இஸ்லாமிய கூட்டமைப்பினர் கோரிக்கை!


பெங்களூரு மல்லேஸ்வரத்தில் நடந்த குண்டுவெடிப்பு பாஜகவின் அரசியல் லாபத்திற்காக நடத்தப்பட்ட சதி செயல் என்றும் இந்த அரசியல் சதிகளுக்கு தமிழகத்தை சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் பலிகடா ஆக்கப்படுவதாக, தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.