Tuesday 31 May 2011

பள்ளி செல்வோம் விழிப்புணர்வு பேரணி...


பெரம்பலூர் மாவட்டம், வி.களத்தூரில் பள்ளி செல்வோம் பிரச்சார பேரணி நடைபெற்றது. கடந்த‌ 29.05.2011 அன்று மாலை 3 மணி அளவில் இப்பேரணி நடைபெற்றது. வி.களத்தூர் சந்தை அருகில் இருக்கின்ற பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அலுவலகம் அருகிலிருந்து இப்பேரணி தொடங்கியது.  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தற்போது மேற்கொண்டு வரும் பிரச்சாரம் "பள்ளி செல்வோம்" என்பதாகும்.


இந்த இரு மாதங்களுக்கு நாடு முழுவதும் கல்வி பற்றி விழிப்புணர்வு பிரச்சாரங்கள், சுவரொட்டிகள், நோட்டீஸ் விநியோகம், பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்குதல், தனவந்தர்களை சந்தித்து ஏழை எளிய மாணவர்கள் பண உதவி பெற்றுத்தருதல் போன்ற பணிகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் இப்பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில் சிறுவர்களைக் கொண்டு வி.களத்தூரில் பேரணி ஒன்று நடைபெற்றது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் இதில் கலந்து கொண்டு, கல்வியின் அவசியத்தை எடுத்துக்கூறும் கோஷங்களை எழுப்பினர்.





No comments:

Post a Comment