Monday 30 May 2011

ஊழல் புரியும் உயர் அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்க சட்டம்?


புதுடெல்லி:ஊழல் புரியும் உயர் அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனை உள்ளிட்ட கடும் தண்டனை வழங்க லோக்பால் மசோதா வரைவில் வழிவகைச்செய்யப்படும் என கருதப்படுகிறது.
டெல்லியில் இன்று(திங்கள்கிழமை) கூடும் லோக்பால் வரைவுக் குழு கூட்டத்தில் இந்தக் கருத்து வலியுறுத்தப்படும் என்று தெரிகிறது.

ஊழல் புரியும் அதிகாரிகளுக்கு குறைந்தது ஒருவருடமாவது தண்டனை வழங்க வழி வகைச்செய்யப்படும் என லோக்பால் மசோதா வரைவு குழுவில் இடம்பெற்றுள்ள மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். ஊழல் குற்றம் சாட்டப்படும் நபரின் பதவி உயர்வதுக்கு ஒப்ப தண்டனையும் கடுமையும் அதிகரிக்கும் வகையில் சட்டம் இயற்றப்படும் என அன்னா ஹஸாரேயின் தலைமையிலான மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment