Saturday 28 May 2011

பெண்ணே ! உனக்காய் சில வரிகள்...

  • உன் உள்ளத்தின் வலிகள்தான் நாளைய சுவனத்தில் சுபசோபனமாகும்.
  •  உன் விழிகள் அவனுக்காய் மட்டும் கண்ணீர் சிந்துகிறது என்றால்நீயும் நாளைய பொழுதில் அர்ஷின் நிழலைப் பெற்ற அதிஷ்டசாலிதான்.
  • அல்லாஹ்வுக்காக என்று நீ ஆசை வைத்துப்பார்,அவன் ஒருபோதும் உன்னை கைவிடாமல் உன் ஆசைகளை சுவனத்தில் நிலைத்திடச் செய்வான்.
  • உன்னில் இப்போதெல்லாம் மறுமையை இலக்காய் கொண்ட சந்தோஷம் வாழுமென்றால்... நீ உண்மையில் இறைநேசமுள்ளவள்தான்.
  • வாழ்க்கையை சரியாக அனுபவிக்க நீ கற்றுக் கொண்டால் உன் வாழ்வும் மலராய் மணம்வீசும் என்பதில் சந்தேகமில்லை.
  • இன்று உன் ஸுஜூதுகள் அவனுக்காய் நீளுகிறது என்றால் நீயும் ரஹ்மத் பெற்றவள்தான்
  • எப்போதும் மிருதுவானவளாக மட்டும் வாழ ஆசைவைத்துப்பார். அப்போது உன் செயற்பாடு கள் யாவும் அழகாய் மொழிபேசும்.
  • இழந்தவைகளை திருப்பி மீட்டுவதை விட்டு மீண்டும் கிடைப்பதற்காக துஆச் செய்தால் அதுவே உன்னிடம் உள்ள ஆயுதமாக (துஆ) இருக்கும்.
  • உண்மையில் இவ்வுலகம் நரகம்தான் என்று மட்டும் உன் உள்ளத்தில் ஆழப்பதிந்தால் அந்த சுவனம் நிச்சயமாக உனக்கருகில் வாழ்கிறது.
  • இறுதியாய்... மீண்டும்...
  • இஸ்லாத்துக்காகஈமானுக்காக என்று உண்மையில் நீ போராடினால்... நீதான் சுவர்க்கத்துக்குச் சொந்தக்காரி.


No comments:

Post a Comment