Tuesday 28 June 2011

திருவாரூர் மாவட்ட பி.ஆர்.ஓ. பொறுப்பேற்பு

திருவாரூர் : திருவாரூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக எம். ராஜேந்திரன் (படம்) திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியைச் சேர்ந்த இவர் தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியாற்றி வந்தார். அண்மையில் தமிழக அரசு தமிழகம் முழுவதும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது.

இதில் திருவாரூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியிட மாறுதல் பெற்ற ராஜேந்திரன், திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இங்கு பணியாற்றிய செந்தில்குமார் திண்டுக்கல் மாவட்டத்துக்கு பணியிட மாறுதலில் சென்றார்.

No comments:

Post a Comment