Tuesday 28 June 2011

புதுவை சபாநாயகராக என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. சபாபதி போட்டியின்றி தேர்வு

புதுவை சட்டசபை சபாநாயகர் பதவிக்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் சபாபதி எம்.எல்.ஏ. சட்டசபை செயலாளர் சிவ பிரகாசத்திடம் மனு தாக்கல் செய்தார். அப்போது முதல் அமைச்சர் ரங்கசாமி உள்ளிட்ட என்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
இன்று பகல் 12 மணி வரை மனு தாக்கல் செய்ய கடைசி நேரம் ஆகும். அதுவரை வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து சபாபதி போட்டியின்றி சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து நாளை காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது.

நாளை நடைபெறும் சட்டசபை கூட்டத்தில் சபாபதி சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தற்காலிக சபாநாயகர் தியாகராஜன் அறிவிப்பார்.

No comments:

Post a Comment