Tuesday 28 June 2011

அமெரிக்கா ஏவுகணை வீசித் தாக்குதல்: 26 பேர் பலி

பாகிஸ்தானில் வசிரிஸ்தான் பகுதியில் தலிபான்கள் பயிற்சி முகாம்களை அமைத்துள்ளனர். எனவே அவர்களை அழிக்கும் நடவடிக்கையில் அமெரிக்க ராணுவம் ஈடுபட்டுள்ளது.


இந்த நிலையில் தெற்கு வசிரிஸ்தானில் ஷாவால் பள்ளத்தாக்கில் உள்ள ஸ்ராகாவ்ரா மலைப்பகுதியில் தீவிரவாதிகள் நடமாடி வருவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் 2 ஆளில்லா விமானங்கள் மூலம் அப்பகுதியில் ஏவுகணை வீசப்பட்டது. அதில் ஒரு ஏவுகணை தலிபான்கள் சென்ற வாகனத்தை தாக்கியது. அதில் வாகனத்தில் பயணம் செய்த 12 தீவிரவாதிகள் பலியாகினர்.

ஆப்கானிஸ்தானில் பக்திகா மாகாணத்தில் பிர்மால் பகுதியில் தாக்குதல் நடத்தி விட்டு மாண்டோய்க்கு வாகனத்தில் திரும்பி கொண்டிருந்த தலிபான்கள் வாகனத்தின் மீதும் ஏவுகணைகள் தாக்கின. இந்த சம்பவத்திலும் 14 தலிபான்கள் கொல்லப்பட்டனர். 7 பேர் காயம் அடைந்தனர்.

No comments:

Post a Comment