Tuesday 19 July 2011

புதிய காபிரைட் வாரியத் தலைவராக நீதிபதி சோப்ரா நியமனம்

புது தில்லி : புதிதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ள காபிரைட் (காப்புரிமை) வாரியத்தின் தலைவராக நீதிபதி ரமேஷ் சந்திர சோப்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.  


புதிய காபிரைட் வாரியத்தில் தேசிய சட்டக் கல்வி நிறுவனத்தின் இயக்குநர், துணைவேந்தர், இந்திய சட்ட நிறுவனம், இந்தியன் சொசைட்டி ஆஃப் இன்டர்நேஷனல் லா ஆகியவற்றின் இயக்குநர்கள், 7 மாநிலங்களின் சட்டத்துறைச் செயலர்கள் உள்ளிட்டவர்கள் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளனர்.  

நீதிபதி சோப்ரா 5 ஆண்டு காலம் இந்த வாரியத்தின் தலைவராக இருப்பார் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment