Monday 22 August 2011

உத்தர பிரதேசத்தில் டிராக்டர் விபத்து - 41 பேர் பலி

உத்தரபிரதேசத்தில் டிராக்டர் துரோலி ஒன்று சாலையோர பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 41 பயணிகள் உயிரிழந்துள்ளனர். 20 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். லக்னோவிலிருந்து 300 கி.மீ தொலைவில் நாக்லா பகுதியின் பாலியா எனுமிடத்தில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.


இந்து பக்தர்களை ஏற்றிக்கொண்டு குறித்த டிராக்டர் கோவிலுக்கு சென்று கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பில் விசாரனைகளை ஆரம்பித்துள்ளதாக மாவட்ட மஜிஸ்திரேட் மாதுகர் திவிவேடி தெரிவித்தார்.

No comments:

Post a Comment