Saturday 25 June 2011

சென்னையில் 47 போலீ்ஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி இடமாற்றம்

சென்னை: சென்னை நகரில் இன்று ஒரே நேரத்தில் 47 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 29 பேர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


தமிழகத்தில் அதிமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் சென்னை போலீஸ் கமிஷனராக திரிபாதி நியமிக்கப்பட்டார். மாநில உளவுப்பிரிவு டி.ஜி.பியாக நியமிக்கப்பட்ட ராமானுஜம் தமிழக டி.ஜி.பி. பொறுப்பையும் கவனித்து வருகிறார்.

சென்னையில் போலீஸ் இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட போலீஸ் எஸ்பிக்களும் மாற்றப்பட்டனர்.

இந் நிலையில் சென்னை போலீஸ் நிலையங்களில் இன்ஸ்பெக்டர்களாக கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்களும் மாற்றப்பட்டுள்ளனர். முதல் கட்டமாக இன்று 47 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 29 பேர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

18 பேர் சென்னையை விட்டு வேறு ஊர்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


சென்னையில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் 200-க்கும் மேற்பட்ட சட்டம்- ஒழுங்கு, குற்றப்பிரிவு இன்ஸ் பெக்டர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

கடந்த ஆட்சியின்போது அரசியல்வாதிகளுடன் சேர்ந்து நிலமோசடி உள்ளிட்ட குற்றங்களில் மறைமுகமாக ஈடுபட்ட 20-க்கும் அதிகமான இன்ஸ் பெக்டர்கள் பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள முக்கிய காவல் நிலையங்களில் பதவி ஏற்க இன்ஸ்பெக்டர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.

இன்னும், 10 நாட்களில் புதிய இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

இந் நிலையில் சென்னையில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் 200க்கும் மேற்பட்ட சட்டம்- ஒழுங்கு, குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும், 10 நாட்களில் இவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment